-
கிண்ணஸ் சாதனை படைத்த 1,374 ஆளில்லா விமானங்களின் அற்புத நடனம்
பீஜிங்: 1,374 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சீனாவின் சியான் நகர வான்பரப்பில் நடனமாடி ஒளியூட்டும் அற்புதக் காட்சி. ஒரே சமயத்தில் அதிக ட்ரோன்கள் 13 நிமிடம் பறந்த இந்த நிகழ்வு முன்பிருந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.
-
அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா?
கொழும்பு: இலங்கையின் வேடிக்கையும் விநோதமும் நிறைந்த அரசாங்கத்தில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்தமை, அதனை தொடர்ந்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அதில் பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியின் 6
-
ஏறாவூரில் இடம்பெற்ற சோகச் சம்பவம்
ஏறாவூர்: ஏறாவூர், தாமரைக்கேணி, தக்வா நகரை சேர்ந்த 17 வயதுடைய நபீர் பாத்திமா நபீலா என்ற யுவதி இன்று (01/05) முற்பகல் 11.45 மணியளவில் தனது வீட்டு வளையில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது தாய் வெளிநாடு சென்று 09 மாதங்கள்.
-
மோட்டருக்கும் என்ஜினிற்கும் என்ன வித்தியாசம்
மோட்டாரும், கார், மோட்டர் சைக்கிளின் என்ஜினும் ஒரே மாதிரியான தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. பொதுவாக அறிவியலில் மோட்டார் என்பது கைனட்டிக் எனர்ஜியை வெளிப்படுத்தக்கூடியது. அதன்படி பார்த்தால் என்ஜினும் அதை தான் செய்கிறது. ஆனால் இன்ஜின் நகர்வை ஏற்படுத்தக்கூடியது. மோட்டர் அசைவை ஏற்படுத்தாது.
-
GCE O/L : விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி மே 15
கொழும்பு: எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள், ஏற்றுக் கொள்ளப்படும் திகதி எதிர்வரும் மே 15 உடன் நிறைவடைகின்றது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று சத்தியப் பிரமாணம் செய்த 18 அமைச்சர்களின் விபரம்
கொழும்பு: ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, இன்று (01) காலை புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 18 பேர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இது நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மூன்றாவது அமைச்சரவை மாற்றமாகும்.
-
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் வெசாக் அன்னதான நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பௌத்த மதத்தவர்களின் வெசாக் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் என்பவற்றின் ஏற்பாட்டில் வெசாக் அன்னதான நிகழ்வு நேற்று முன்தினம் 29, நேற்று 30 ஆகிய திகதிகளில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.
-
எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும்
புதிதாக கார் ஓட்ட கற்று கொள்ளபவர்களுக்கும், கிளட்ச் குறித்து முறையாக அறியாத கார் ஓட்டுநர்களும் காரில் தேவையில்லாமலும் முறையற்ற வகையிலும் பயன்படுத்துவர். கிளட்சை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற சில விதிகள் உள்ளது. நீங்கள் கிளட்சை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி வந்தால் உங்கள் காரின் உள்ள பாகங்கள் மற்றும் இன்ஜினிற்கு நீங்கள் கெடுதல் செய்கிறீர்கள் என அர்த்தம் இதனால் நீங்கள் உங்கள் காரின் வாழ்நாளை குறைக்ககூடும்.
-
அட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழா
அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழாவும் கெளரவிப்பும் 2018.04.29 மிகவும் சிறப்பாகவும் மிகு விமர்சியாகவும் நடைபெற்றது. நிகழ்வுக்கு தலைமை அஷ்ஷேஹ், அல் ஹாபில் மெளலவி MM.உபைத்துல்லாஹ் (பாகவி,தீனி,முப்தி விரிவுரையாளர்,தப்லீகுல் இஸ்லாம் அரபு கல்லூரி -சம்மாந்துறை)
-
காத்தான்குடி “Bபீச்வே” நீச்சல் போட்டியும் நீச்சல் பயிற்சிநெறிக்கு சான்றிதழ் வழங்கலும்
றியாத் ஏ.மஜீத் காத்தான்குடி: “Bபீச்வே” நீச்சல் போட்டியும் நீச்சல் பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (29) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி “Bபீச்வே” ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி Bபீச்வே ஹோட்டல் உரிமையாளர் எம்.முபீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் .ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
-
ஓட்டமாவடி மீராமுகைதீன் காலமானார்
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஓட்டமாவடி: ஓட்டமாவடி மீராமொஹைடீன் (29-04/2018) காலமானார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்). இவர் முன்னாள் இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றியவரும், முன்னாள் ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்றா பெண்கள் அறபு கல்லூரியின் அதிபரும், கல்குடா ஜமாத்தே இஸ்லாமியின் முக்கியஸ்தருமான எம்.எம்.மஹ்மூட் லெப்பை, மற்றும் எம்.எம்.பதுர்டீன் (ஆசிரியர்), எம்.எம். முபாரக் ஆகியோர்களின் தந்தையுமாவார்.
-
சமையல் எரிவாயு விலை ரூபா 245 ஆல் அதிகரிப்பு- புதிய விலை ரூ. 1,676
கொழும்பு: இன்று நள்ளிரவு (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிவாயு நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், நுகர்வோர் அதிகார சபை இவ்வனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி, 12.5 கிலோ வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (27) நள்ளிரவு முதல் 245 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.