Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • புருவங்கள் அழகுபடுத்துவதை நிறுத்த எச்சரிக்கிறது ஈரான்

    தெஹ்ரான்: ஈரானில் ஆடவருக்கு புருவத்தை அழகு படுத்துவதை முடி திருத்துவோர் நிறுத்த வேண்டும் எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆடவர் மற்றும் மகளிரிடம் புருவத்தை திருத்தி அழகு செய்துகொள்வது அங்கு கூடுதலாக பிரபலமடைந்துவரும் வேளையில், இது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முரணானது என்று முடிதிருத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

  • காத்தான்குடி நூதனசாலை தொடர்பாக தவிசாளரின் அறிக்கையும் எனது ஆலோசனையும்

    காத்தான்குடி: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களினால் காத்தான்குடியில் நிறுவப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள பூர்வீக நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் விவகாரம் தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • காத்தன்குடி மீடியா போரத் தலைவர் டீன் பைரூஸ் நன்றி தெரிவிப்பு

    – எம்.ஐ. அப்துல் நஸார் காத்தன்குடி: கடந்த 2015.04.25ஆந் திகதி நடைபெற்ற காத்தன்குடி மீடியா போரத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடப்பாண்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் A.L.டீன் பைரூஸ் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

  • வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பிழையான கருத்துக்களை வெளியிட் டுள்ள லங்கா தீப ஊடகத்திற்கு கண்டனம்

    – வன்னிக்குரலான் வன்னி: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் இழப்புக்களை கணிப்பீடு செய்யாத சிங்கள ஊடகமான லங்கா தீப,அந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பிழையான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை இந்த பத்திரிகையின் நம்பகத்தன்மைக்கு சான்றாகும் என வடக்கு மக்களின் இன ஒற்றுமைக்கான ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • “கல்முனை மண்ணை வான்புகழ் எய்தச்செய்த மூத்த கல்விமான் எஸ்.எம்.எம்.ஜெமீலின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும்”: ஹரீஸ்

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை மண்ணை வான்புகழ் எய்தச்செய்த மூத்த கல்விமான் எஸ்.எம்.எம்.ஜெமீலின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

  • பூர்வீக நூதனசாலை சம்பந்தமாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் அஸ்பர் விடுக்கும் செய்தி

           

  • அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் முக்கியமான அறிவுரை

    கொழும்பு: நகைச்சுவைகளைப் பார்த்துக் கொண்டு காலம் கழிக்கும் நிலையே தற்போது எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியொருவருக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியிருப்பதும் புதிய அரசாங்கமொன்றை அமைத்திருப்பதும் நாடகம் பார்த்து ரசிப்பதற்கல்ல. அவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அவ்வெதிர்பார்ப்புகளுள் பிரதானமானது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினை மாற்றி நல்லாட்சியை ஏற்படுத்துவதாகும்.

  • காத்தான்குடி சம்மேளனத்தில் கல்விமானை கௌரவிக்கும் சிறப்புமிக்க நிகழ்வு இடம் பெற்றது

    ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கல்விமான் எம்.ஐ. சேகு அலி (SLEAS) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அன்மையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளனத்தில் தலைவர் எம்.ஐ.எம். சுபைர் தி (Rt-CC) தலைமையில் நடைபெற்றது.

  • அறிவியல் மற்றும் இலக்கிய உலகிற்கு ஜெமீலின் இழப்பு பாரிய இடைவெளியாகும்: காத்தான்குடி ஊடக ஒன்றியம் அனுதாபம்

    பழுலுல்லாஹ் பர்ஹான்   காத்தான்குடி: மூத்த கல்விமானும், இலக்கிய ஆளுமையும் இலங்கையின் சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீலின் இழப்பு அறிவியல் மற்றும் இலக்கிய உலகிற்கு நிரப்ப முடியாத இடைவெளியை உண்டு பண்ணியுள்ளது என காத்தான்குடி ஊடக ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்பட்ட சரத்து நீக்கம்

    கொழும்பு: 19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்பட்ட சரத்து நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலையீட்டுடன் அந்த உறுப்புரை நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

  • “சங்கா, ஜயவர்தன இடத்தை நிரப்புவதற்கு காலம் தேவை”:

    டெல்லி: இலங்கை அணியில் சங்கக்கார, மஹேல ஜயவர்தன விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது கடினம் என்று அந்த அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியுஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக விளங்கிய சங்கக்கார, ஜயவர்தன, இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரோடு சர்வதேச ஒருநாள் போட் டியில் ஓய்வு பெற்றனர்.

  • தொண்டர் பணியில் ஈடுபடவிரும்பும் மருத்துவர்கள், தாதியர்களுக்கு அழைப்பு

    கொழும்பு: நேபாளத்தில் இடம்பெற்றிருக்கும் பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பிலான ஆழ்ந்த அனுதாபங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அந்நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ரலாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் விக்ரமசிங்க தனது அனுதாபத்தை அந்நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 451 452 453 454 455 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar