WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தங்கத்தை மலை மலையாய் குவித்து வைத்திருக்கும் அந்த 10 நாடுகள்

    சூரிச்: தங்க ஆசையினால் வாழ்வைத் தொலைத்தவர் பலர். எனினும் தங்கம் மிக விலைமதிப்பற்றதாகவும் எல்லோராலும் மிகவும் விரும்பப்படும் உலோகங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. அது பழங்காலம் தொட்டு நம்முடைய நாகரீகத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. பண்டைய வரலாற்றை உற்று நோக்கும் பொழுது எவர் ஒருவர் உலோகத்தைச் சரியாகக் கையாண்டு வந்திருக்கின்றாரோ அவரே வெற்றியைச் சுவைத்திருக்கின்றார்.

  • தொலைபேசிக் காதலில் மயங்கிய ஆசிரியை..

    புத்தளம்: புத்தளத்தில் 24 வயதான யுவதிக்கு அடையாளம் தெரியாத நபர் எடுத்த தவறுதலான தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து இருவரும் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த தொடர்பு இவர்களுக்கு இடையில் காதலாக மாறியுள்ளது. நீண்டகாலமாக தொலைபேசியில் உரையாடி வந்த இவர்கள் வெளியில் சந்திப்பது என தீர்மானித்துள்ளனர்.

  • மட்டு – கொழும்பு விமான போக்குவரத்து இன்று முதல் இடம்பெறுகிறது

    மட்டக்களப்பு: 290 மில்லியன் செலவில் மட்டக்களப்பில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட இலங்கை விமானப் படையின் விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் இன்றைய தினம் (10) ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உள்ளுர் விமான சேவையையும் ஆரம்பித்து வைத்தார்.

  • பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    கொழும்பு: நாடு பூராகவும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 60,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் இலங்கையின் பிரதான நகரங்களில் இருப்பதாகவும், இவர்கள் 17 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமை காரணமாகவே அதிகமானோரர் இந்த தொழிலில் ஈடுபடுவதாகவும், பாடசாலை மாணவிகளும் இதில் இணைவதாகவும் பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஸாகிர் நாயக்கிற்காக கூட்டம் கூடுவதால் எதுவும் ஆகிவிடாது!

    AK-99 காத்தான்குடி: பங்களாதேஷில் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் இருவரைக் கைது செய்த பங்களாதேஷ் பொலிஸார், அத்தீவிரவாதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டது. தாங்கள் ஸாகிர் நாயக்கின் போதனைகளால் கவரப்பட்டதாக இத்தீவிரவாதிகள் தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் உத்தியோகபூர்வமற்ற தகவல்களை வெளியிட்டிருந்தன.

  • திருமண பந்தத்தில் இணைகிறார் சமன்மலி

    கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சமன்மலி கலகலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் யதாமினி குணவர்தனவை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் 14ம் திகதி இந்த திருமணம் நடைபெறவுள்ளது. 2015ம் ஆண்டு கண்டியில் “மகிந்த காற்று” என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் அரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • வினாடி கூட்டப்படுகின்றது

    நியுயோர்க்: பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம். ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம் கணக்கிடப்படுகிறது. எனினும், அதிநவீன ‘அணுவியல் கடிகாரங்கள்’ கண்டிபிடிக்கப்பட்ட பிறகு பூமியின் சுழற்சியை சாராமலேயே நேரம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வருகிறது.

  • முகத்திரை அணிந்தால் ரூ.14 லட்சம் அபராதம்

    சூரிச்: சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு சென்றால் ரூ.14 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் சுயாட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாகாண அரசுகளுக்கும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் உள்ளன.

  • அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

    கொழும்பு: ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த அறிவிப்பு ஜனாதிபதியால் இன்று விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அமெரிக்கா வன்முறை ; துப்பாக்கிச்சூட்டில் 5 பொலிசார் பலி

    டல்லஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் பொலிஸ் வன்முறைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பாக, ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்னொருவர் சரணடைந்தார்.

  • கிரீஸ்மன் அபாரம்: இறுதிப் போட்டியில் போர்துக்களைச் சந்திக்கிறது பிரான்ஸ்

    பரிஸ்: யூரோ கிண்ணம் கால்பந்து போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய ஜேர்மனி அணியை துவம்சம் செய்த பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு அதிரடியாக நுழைந்துள்ளது. யூரோ கிண்ண கால்பந்து போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய ஜேர்மனி அணி இன்னொரு ஜாம்பவான் அணியான பிரான்சை எதிர்கொண்டது.

  • தங்க பிஸ்கட் ஒன்றை நோன்பு பெருநாள் நன்கொடையாக வழங்கிய பெண்மனி

    எம்.ரீ.எம்.பாரிஸ் கல்குடா: கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் தொழுகை நேற்று (06.07.2016) காலை 6.20 மணிக்கு செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

←Previous Page
1 … 192 193 194 195 196 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar