-
“இலங்கை- இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைந்தால் குண்டு வைத்து தகர்ப்போம்”- உதய கம்மன்பில
கொழும்பு: இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்று அமைக்கப்படுமாயின் அதனை குண்டு வைத்து தகர்த்தெறியவும் தயாராக இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர்,
-
300 பேரை மீட்டு வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகம்மது
டுபாய்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் ஈ.கே.521 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு 03/08 காலை 10.19 மணிக்கு புறப்பட்டது. சுமார் 4 மணி நேர பயணத்தில் அமீரக நேரப்படி மதியம் 12.50 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 2.20 மணி) துபாயில் தரை இறங்க திட்டமிடப்பட்டு இருந்தது. அமீரகத்தின் எல்லைப்பகுதியை விமானம் நெருங்கிக்கொண்டிருந்தபோது விமானத்தின் முன்சக்கரம் திறக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதை உணர்ந்த விமானிகள் உடனடியாக…
-
பலஸ்தீன்: வரலாறும் தூக்கியெறிய முடியாத உண்மைகளும்
றவூப் ஸெய்ன் உலக வரலாற்றை இன்றிலிருந்து சுமார் 13,000 ஆண்டுகள் முன்பிருந்தே பார்க்கத் தொடங்குவதுதான் பல கேள்விகளுக்கு விடையளிக்கும். மனித இனத்திற்கு அதற்கு முன்பும் ஒரு வரலாறு உண்டு. சுமார் 50 இலட்சம் ஆண்டுகளிலிருந்து தொடங்கி, மனித இனம் பரிணமித்த வரலாற்றுக் காலகட்டங்களிலிருந்து நாம் பல உண்மைகளைத் தேட வேண்டியுள்ளது.
-
துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானம் அவரசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு
துபாய்: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமான சேவை விமானம் விபத்தின் காரணமாக அவசரமாக தரையிறங்கியுள்ளது. விமானத்தின் மத்தியப் பகுதியிலிருந்து அடர்த்தியான, கரும் புகை வந்து கொண்டிருந்ததை அங்கிருந்தோர் பார்க்க முடிந்தது. இப்புகை விமானத்தின் வயிற்றுப்பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. விமானத்தின் இறங்கமைப்பைக் (முன்சக்கரம்) காண முடியவில்லை.
-
“தனக்கு மாலை அணிவிக்கக் கூடாது”- சிப்லி
காத்தான்குடி: அண்மையில் தனக்கு கிடைத்த உலமாகளின் வழிகாட்டலின் பிரகாரமும் அவர்களின் மார்க்க அறிவுறுத்தல்களின் பலனாகவும் இதற்கு பிற்பாடு தான் கலந்து கொள்ளும் எந்த விழாக்களிலும் சரி நிகழ்வுகளிலும் சரி மாலை அணிவித்து தன்னை வரவேற்க கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக் தெரிவித்துள்ளார்.
-
சுகாதார துறையில் அபிவிருத்தி காணும் காத்தான்குடி தள வைத்தியசாலை
M.T. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையில் இரத்த வங்கி பிரிவு, புணர்நிர்மானத்திற்காக 67 இலட்சம் ரூபாவும், வைத்தியர்கள் தங்குமிட விடுதி அமைப்பதற்கு 1 கோடியே 8 இலட்சம் ரூபாவும் எனது வேண்டுகோளிக்கமைவாக மாகாண சுகாதார அமைச்சினால் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2016.07.02ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 09.00 மணியளவில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் ஜாபிர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர்…
-
இமாமின் கருத்தால் சர்ச்சை
கார்டிஃப்: பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவது இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என பிரித்தானியவை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் கூறிய ஓடியோ வெளியாகியுள்ளது. இமாம் அலி ஹம்முதா என்பவர் பிரித்தானியாவில் கார்டிஃப் பள்ளிவாயலில் இமாமாக இருக்கிறார்.
-
2வது டெஸ்டில் நுவான் பிரதீப் ஆடுவது சந்தேகம்
காலி: காலி மைதானத்தில் நடக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இலங்கை- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் காலி மைதானத்தில் எதிர்வரும் 4ம் திகதி நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
-
பசுமைப்புரட்சி என்ற போர்வையில் ஏமாற்றப்பட்டுள்ள சாய்ந்தமருது பிரதேசமும், அங்கு பிறந்தவர்களுக்கு அரசியல் செய்ய முடியாத நிலைமையும்
சாய்ந்தமருது: வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய நாடு முழுவதிலும் நேற்று திங்கள்கிழமை மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. இது மாற்று கட்சியினர்களை பொறாமைப்பட வைத்ததுடன், பிற சமூகத்தினர்களை மூக்கில் விரல்வைத்து பேசும் அளவுக்கு அந்நிகழ்வுகள் அமைந்திருந்தது.
-
26வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!
– S.சஜீத் காத்தான்குடி: காத்தான்குடியில் 26வது சுஹதாக்கள் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் (IYF) சமூக சேவைப் பிரிவினரால் மாபெரும் இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (03.08.2016) நாளை காலை 08.30 மணிமுதல் பி.ப 01.30 மணிவரை காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள (IYF) கல்விமையத்தின் காரியாலயத்தில் (ஹுசைனியா கிட்ஸ் கொலஜ் சிறுவர் பாடசாலையில்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
-
கிழக்கு மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் காபெட் வீதிகள் ஆரம்பம்
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் திருகோணமலை: கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள அணைத்து வீதி அபிவிருத்தி திணைக்களதிற்கு சொந்தமான வீதிகள் ஐ திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அஹ்மத், கிழக்கு மாகாண வீதி அமைச்சர் ஆரியவதி கலப்பதி மற்றும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் ஆகியோரின் பற்றுதலுடன் தெரிவு செய்யப்பட்டு நடை முறை படுத்தபடுகிறது.
-
கூட்டு எதிர்கட்சியின் பாத யாத்திரை நல்லாட்சி அரசை தோற்கடிக்கும் முதல் முயற்சி: மகிந்த ராஜபக்ஷ
கிரிபத்கொட: ஆளும் நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிக்கும் முதல் கட்ட முயற்சியாக கூட்டு எதிர்கட்சியின் அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையை இன்று ஐந்தாவது நாளாக கிரிபத்கொட நகரில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.