-
மனோ கனேசன் அலுவலகத்தில் ஞானசேரவின் அடாவடி (காணொளி)
கொழும்பு: அண்மைக்காலமாக நாட்டில் இனவாதம் பரப்பும் நடவடிக்கைகளில் அதி தீவிரமாக ஈடுபட்டிருந்த பொதுபல சேனா அமைப்பானது சிலகாலம் அமைதியானது. இதன் தலைவர் ஞானசார தேரருக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது.
-
ஜெயசூர்யா- தரங்காவின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி
டப்ளின்: மகளிருக்கான QUADRANGULAR கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 8-வது போட்டியில் அயர்லாந்து அணியும், இந்திய அணியும் மோதின. அதன் படி நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துவக்க வீரர்களாக இந்திய அணிக்கு டீப்டி சர்மா-பூனம் ரவுட் களமிறங்கினர்.இவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டிற்கு 320 ஓட்டங்கள் குவித்தனர். பூனம் ரவுட் சதம் கடந்து 188 ஓட்டங்களும், டீப்டி சர்மா சதம் கடந்து 109 ஓட்டங்களும் குவித்தார்.
-
இணையத் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா?
லண்டன்: நூற்று ஐம்பது நாடுகளில் கணினிகளை பாதித்த கடந்த வார இணையத் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருந்திருக்கலாம் என்று சில கணினி பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகிறார்கள். கடந்த காலங்களில் வடகொரியா மீது குற்றஞ்சாட்டப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கணினி புரோகிராம்கள் இந்த தாக்குதலிலும் சம்பந்தப்பட்டிருப்பது சாத்தியத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
-
ஆண்குறி பற்றிய அரிய தகவல்கள்
AF-97 லண்டன்: மனிதர்களின் ஆண்குறி மற்ற விலங்குகள் இனத்தை விட பெரியது. அதாவது, உடல் அளவோடு ஆண்குறி அளவை ஒப்பிடுகையில் மனிதர்களின் ஆண்குறி பெரியது என கூறப்படுகிறது. ஆண்குறிகளில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று வளர்த்தல் (Growers), வெளிப்படுதல் (Showers). வளர்த்தல் வகை ஆண்குறி சிறிதாக இருக்கும். விறைப்பு ஏற்படும் போது நீளமாகும். காட்டுதல் வகை ஆண்குறி சாதாரணமாகவே பெரிதாக தான் இருக்கும். ஆனால், விறைப்பு அடையும் போது அது நீளமாகாது.
-
‘மிஸ்டர் கூல்’- வெற்றிகர தலைவனை இழந்தது பாகிஸ்தான் அணி
SHM லாஹூர்: பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக இருந்த மிஸ்பா உல் ஹக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியை ஐசிசி தர வரிசையில் நம்பர்-1 டெஸ்ட் அணியாக உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர் இவர். ஓய்வு பெற்ற மிஸ்பா உல் ஹக்கிற்கு வயது 43 நெருங்குகிறது. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2001ம் ஆண்டு தனது 25 வயதில் அறிமுகமானார்.
-
பதுரிய்யா ஹாஜா கந்தூரி
– இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: காத்தான்குடி 5, பதுரிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயலில் கடந்த 31 வருடங்களாக இடம்பெற்றுவரும் ஹாஜா கந்தூரி வழமை போன்று இம்முறையும் அதிவிசேடமாக இடம்பெறுகிறது. ஆண்களும், பெண்களும் அணியணியாய் நிறைந்து வர்ணஜாலங்களால் அலங்கரிக்கப்பட்ட பதுரிய்யா பள்ளிவாயலைக் காண இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் புத்தாடைகளுடன் வருகை தந்தவண்ணமிருக்கின்றனர்.
-
இந்திய பிரதமர் மோடிக்கு இரவு விருந்துபசாரம்
கொழும்பு: இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியாழக்கிழமை (11) மாலை இலங்கை வந்தடைந்தார். பின்னர் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கங்காராம விகாரைக்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்தை திறந்து வைத்தனர்.
-
இலங்கை வந்த கறுப்பு பூனைகள்
கொழும்பு: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக கறுப்புப் பூனை கொமாண்டோ படையினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையை இந்திய பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக இந்திய விமான படையின் எம்.ஐ.17 உலங்கு வானூர்திகள் இரண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
“மோடி பங்கேற்கும் நிகழ்வில் நானும் பங்கேற்பேன்”- மஹிந்த
ருவான்வெல்லை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பங்கேற்கும் நிகழ்வில் தாமும் பங்கேற்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ருவான்வெல்லையில் உள்ள விகாரையொன்றில் (10) வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
-
மலையக வெசாக் தின கொண்டாட்டங்கள்
பா.திருஞானம் புஸ்ஸல்லாவ: இலங்கையில் 2561 வது வெசாக் தினம் தற்போது நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்தலங்களில் விஷே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக மலையத்தின் புஸ்ஸல்லாவ பிரதேசம் வகுகவ்பிட்டிய¸ டெல்டா கெமுனுபுர பிரதேசத்தில் சோறு அன்னதானம் (பத் தன்சல்) வழங்கபட்டது.
-
விதவிதமான உணவுகளை சமைத்து யூ-டியூப் ராணியாக வலம் வரும் 106 வயது பாட்டி
இந்தியா: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 106 வயதான மூதாட்டி விதவிதமான உணவுகளை சமைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மஸ்தானம்மா (106). இந்த வயதிலும் யார் உதவியும் இல்லாமல் இவர் தனது வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.
-
“மகிந்த ராஜபக்சவிற்கு பயமிருந்தால் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு படுத்துறங்க வேண்டும்” – சரத் பொன்சேகா
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பயமிருந்தால் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு படுத்துறங்க வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சால்வையில் தொங்க விட்டு கொன்று விடுவேன் என்ற அச்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருக்கின்றார்.