-
பிரதமர் ரணிலுக்கு அமெரிக்காவில் இருதய அறுவைச் சிகிச்சை
நிவ்யோர்க்: கடந்த 27ஆம் திகதி பிரதமர் அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரத்திற்கு தனிப்பட்ட முறையில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். எனினும் அவரின் அந்தப் பயணமானது, அரசியல் நோக்கமானதோ, அல்லது வியாபாரத்தின் அடிப்படையிலோ அமைந்தது அல்ல என்பதனை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
-
அம்பாறை மாவட்டத்தில் பிளாஸ்டிக் கோழி முட்டைகள் விற்பனை!
அம்பாறை: அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கோழிமுட்டைகள் விற்பனையில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.பிளாஸ்டிக் முட்டைகள், காலாவதியான முட்டைகள் என்பவற்றை விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்குமாறு தென்கிழக்கு சுகாதாரப் பேரவை துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
விமானங்களுக்காக காத்திருக்கும் 100 கோடி டொலர்கள் விமான நிலையம்
ஹம்பாந்தோட்டை: தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மாவட்டத்தில் கட்டப்பட்ட மத்தள விமான நிலையம் விமானப் போக்குவரத்து எதுவும் இன்றி காய்ந்துப்போய்க் கிடக்கிறது.ஒரு சர்வதேச விமான நிலையமான அதில் வாரத்துக்கு 50 முதல் 75 பயணிகளே வந்து போகிறார்கள்.
-
மட்டக்களப்பில் இப்றாஹீம் சாப்பாட்டுக்கடை முற்றுகை!
மட்டக்களப்பு: மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல சாப்பாட்டுக்கடைகளுள் இப்றாஹீம் சாப்பாட்டுக்கடையில் பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மலசல குழியருகே இறைச்சிகளும் மீட்கப்பட்டுள்ளன.
-
மாற்றப்பட்ட அமைச்சரவை விபரம்
கொழும்பு: அமைச்சரவையில் அண்மையில் இடம்பெற்ற மாற்றத்தையடுத்து வெளிவிவகார துணை அமைச்சர் மற்றும் நிதி ராஜாங்க அமைச்சர் உட்பட 7 ராஜங்க மற்றும் இரு துணை அமைச்சர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இராஜாங்க மற்றும் துணை அமைச்சர் பதவி வகித்த ஏழு பேர் இந்த மாற்றத்தின் பிரகாரம் இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பொறுப்புக்கான பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
-
சவுதி அரசுக்கு எதிராகப் போராடிய உடல் ஊனமுற்ற நபருக்கு மரண தண்டனை
றியாத்: சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட உடல் ஊனமுற்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் கடந்த 2012-ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
-
ஹெலிகொப்டரில் குழந்தை பெற்றெடுத்த பெண்
இரத்தினபுரி: வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு, விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் சுகப் பிரசவம் நடைபெற்றது. திங்கட்கிழமை (29) கலவான அரசாங்க வைத்தியசாலையிலிருந்து இரத்தினபுரி பிரதான வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த வேளை தனது குழந்தையை பிரசவித்துள்ளார்.
-
டெல்லியில் சிறுநீர் கழிப்பதை தடுத்த ரிக்ஷா ஓட்டுநர் அடித்துக் கொலை
டெல்லி: டெல்லியின் வடக்கு பகுதியில் 32 வயது ரவிந்தர் குமார் என்னும் பெட்டரி ரிக்க்ஷா ஓட்டுநர், சாலையில் சி்றுநீர் கழிக்க வந்த நபர்களை தடுத்ததால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரவிந்தர், டெல்லியின் குரு டெக் பஹதூர் மெட்ரோ நிலையத்திற்கு வெளியே சிறுநீர் கழிக்க வந்த இரண்டு நபர்களை தடுத்ததால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு
கொழும்பு: இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.மேலும், இந்த அனர்த்தங்களினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தகவல்களின்படி 1 இலட்சத்தி 14 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்தி 42 ஆயிரம்229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
“முஸ்லிம்களுக்கு உள்ள ஒரேயொரு வழிமுறை சர்வதேச உதவியை நாடுவது மாத்திரமே”- ஷிப்லி பாறுக்
காத்தான்குடி: இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் 2017.05.27-சனிக்கிழமை நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
-
மல்வான ரக்ஸபான ஜும்ஆ மஸ்ஜித் விடுக்கும் அவசர வேண்டுகோள்
சுமார் 1700 பேரை உள்ளடக்கிய எமது ஊர் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 அடி உயரத்திற்கு ஊரைச் சுற்றி ஆற்று நீர் பாய்வதால் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமின்மையால் வெளியுலகத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
-
நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் பாராளுமன்றம்
கொழும்பு: நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பாராளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தியவன்னா ஓயவின் நீர் பாராளுமன்றத்தை மூடினால் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.