-
கல்முனை தரவைக் கோவில் அருகாமையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த பல்வகை தாவரங்களை விற்பனை செய்யும் நிலையம் கல்முனை மாநகர முதல்வரினால் அகற்றப்பட்டது
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை தரவைக் கோவில் அருகாமையில் உள்ள வடிகானின் மேல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த பல்வகை தாவரங்களை விற்பனை செய்யும் நிலையத்தினை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட குழுவினர் இன்று (03.01.2013) மாலை நேரில் சென்று பார்வையிட்டு அகற்றுவித்தனர்.
-
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில்- இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் -நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் அவர்களுக்கு அனுப்பி வைத்த கருணை மனு சாதகமான முறையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும்,
-
காத்தான்குடி அல்-இக்பால் பாடசாலை தொடா்பான புகைப் படங்கள்
ஜாலி நானா புதிய காத்தான்குடி அல்-இக்பால் பாடசாலை மாணவா்களின் ஆா்பாட்டம் தொடா்பான மேலதிக புகைப் படங்கள்……..
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடியின் பிரபல டைலா் (New Mod Najeem’s) அவா்களுடைய சகோதரா் அல்.ஹாஜ் SHM.இஸ்ஸதீன் அவா்கள் (02.01.2013 புதன்கிழமை) காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.
-
கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
– பழுளுல்லாஹ் பர்ஹான் சென்ற கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவையின் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை அவர்கள் பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிட்டார். அத்தீர்மானங்கள் விபரங்கள்; பின்வருமாறு
-
2013ம் ஆண்டில் இருந்து சனிக்கிழமை நாட்களில் பிற்பகல் 1.00 மணிவரை மக்கள் பணிக்காக வழமைபோல் கல்முனை மாநகர சபை செயற்படும்
புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அறிவிப்பு (பழுலுல்லாஹ் பர்ஹான்) கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வில் மாநகர முதல்வர் உரையாற்றுகையில்.
-
கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (01.01.2013) காலை மாநகர முன்றலில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது.
-
ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமா இணைந்து பொது மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்.
CMM. அமானி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் நிர்வாகப் பரம்பலுக்கு உட்பட்ட காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்படும் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் கடந்த 09.12.2012ம் திகதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பொதுச்சபை உறுப்பினர்கள், ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சகல பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை காண்பதற்காக கூட்டப்பட்ட கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை பொதுமக்களாகிய உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்…
-
புதிய பாடசாலை கட்டிடத்தை பெற்றுத்தாருங்கள் எனக்கோரி மட்டு-புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்
– எப்.எம்.பர்ஹான் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்தின் கீழ் இயங்கும் புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலய மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை புதிய பாடசாலை கட்டிடத்தை பெற்றுத்தாருங்கள் எனக்கோரி பாடசாலை பகிஷ்கரிப்பிலும் ஆர்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.
-
இலவச சீருடை வழங்கும் நிகழ்வு
டீன் பைரூஸ். புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையில் 2013 ம் ஆண்டுக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கான இலவச சீருடை வழங்கும் நிகழ்வு 01.01.2013 செவ்வாய்க்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.
-
புதிய பாலர்கள் வரவேற்பு நிகழ்வு 2013
MSM. அப்துல்லாஹ் JP. SDO புதிய காத்தான்குடி அஸ்-ஸஹ்றா, ஹிஸ்புல்லாஹ், ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலைகளின் 2013 ஆம் ஆண்டுக்காக அனுமதிக்கப்பட்ட புதிய மாணவா்களை வரவேற்கும் நிகழ்வு (01.01.2013 செவ்வாய்க்கிழமை) பாடசாலை மண்டபத்தில் தலைவா் மௌலவி அல்ஹாஜ். AL. ஆதம்லெப்பை JP (பலாஹி /தேச மாண்ய) அவா்களின் தலைமையில் நடை பெற்றது.
-
மட்டு. கடுகதி ரயில் ‘பாடுமீன்’ இரண்டு மணிநேரம் தாமதம்
கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்திலிருந்து நேற்று முன் தினம் இரவு மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் ‘பாடுமீன்’ கடுகதி ரயில் தாமதமடைந்த தனை பயணிகளுக்கு அறிவிக்காமையையிட்டு போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.