-
இலங்கை அணியின் பயிற்சியாளராக ஹத்துருசிங்க
கொழும்பு: இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்படவுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால நேற்று (08) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக அவர் கடமையாற்றவுள்ளார்.
-
பலஸ்தீன் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஜெருசலம்: சர்வதேச எதிர்ப்புகளை மீறி, சர்ச்சைக்குரிய ஜெருசலம் நகரை இஸ்ரேல் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததை அடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, காசா போன்ற பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்த்தீனர்களுக்கும் மோதல் மூண்டுள்ளது. இஸ்ரேல் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த மோதல்களில் 31 பாலஸ்த்தீனர்கள் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
-
காலத்தின் தேவையுணர்ந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள பயான் நிகழ்வுகள்
பெருகிவரும் கலாச்சார சீரழிவுகளுக்கு மத்தியில், காலத்தின் தேவையுணர்ந்து, *SL Youth Muslim Organization* இனால் காத்தான்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பயான் நிகழ்வுகளின் ஓரங்கமாக, நல்லமல்களில் ஆசையற்று போய்விட்டதா! பாவங்களை விட முடியாமல் தடுமாற்றமா!
-
“ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்கு இணைக்க முடியாது”
கொழும்பு: ஆசிரிய உதவியாளர்களைஆசிரியர் சேவைக்கு இணைக்க முடியாதெனதெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆசிரிய பயிற்சி சான்றிதழுள்ளவர்களை மாத்திரம் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மலையகத்திலும் உள்ள பின்தங்கிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்குமாறு ஜே. வி. பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
-
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் NFGG இரட்டைக் கொடி சின்னத்தில் தனித்தே போட்டியிடும்
NFGG ஊடகப் பிரிவு நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG), தமது சின்னமான இரட்டைக் கொடி சின்னத்தில், தனித்துப் போட்டியிடுவதென கட்சியின் தலைமைத்துவ சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. சமீபத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்கு இரட்டைக் கொடி சின்னமும் வழங்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.
-
“அரசை விட்டு வெளியேறுகின்ற எந்த நோக்கமும் கிடையாது”- ஹிஸ்புல்லாஹ்
கொழும்பு: “இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டு நான் அரசிலிருந்து வெளியேறவுள்ளதாக சில இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் கிடையாது. அவ்வாறு அரசை விட்டு வெளியேறுகின்ற தேவையோ – நோக்கமோ எனக்கு இல்லை.” என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
அறிக்கை வெளியீடுகள் ஒருபோதும் சமூகத்தைத் திருத்தாது
AK- 49 காத்தான்குடி: அண்மைக்காலமாக காத்தான்குடியில் ஏற்பட்டிருக்கும் கலாசார சீரழிவுகளைத் தடுக்கும் முகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்னளின் சம்மேளனம் அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தது. இவ்வாறான அறிக்கை வெளியீடுகள் ஒருபோதும் சமூகத்தைத் சீர்திருத்தப்போவதில்லை!
-
ரோஹிஞ்சா முஸ்லிம்களை மீண்டும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் வகையில் மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்
நேப்பிடா: வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மீண்டும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் வகையில் மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தம் குறித்த வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
-
97 ஓட்டங்கள் களத்தில் நின்றபோது டிக்ளேர் செய்ய முயன்ற கோஹ்லி
கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தான் செஞ்சுரி அடிக்கும் முன்பே டிக்ளேர் கேட்டு இருக்கிறார். இதற்காக அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் அனுமதி கேட்டு உள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் கோஹ்லி சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தார். இது அவரது 50 வது ஐசிசி செஞ்சுரி ஆகும். மிகவும் த்ரில்லாக சென்ற இந்த…
-
தப்பிச் சென்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு
கொழும்பு: விடுமுறை பெறாது, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம் இன்று (22) நிறைவடைகின்றது. அதன் அடிப்படையில், சட்ட ரீதியாக இராணுவ சேவையிலிருந்து விடுபடுவதற்கான கால எல்லை நாளையுடன் (22) நிறைவடைகின்றது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை இப்பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது.