-
கண்டி மாவட்ட முஸ்லிம் ஊர்கள் மீது தற்பொழுது தொடரும் தாக்குதல்கள்
– AK-48 கண்டி: நள்ளிரவைத் தொடும் இலங்கையின் இந்நேரத்தில் கண்டி மாவட்டத்திலுள்ள தாக்கப்படாத முஸ்லிம் ஊர்களைக் குறிவைத்து பேரினவாத காடையர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. பள்ளிவாயல்களையும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களையும், வாகங்களையும் பெற்றோல் குண்டுகளை வீசியும், கல்லெறிந்தும் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.
-
கண்டி நிர்வாக மாவட்டத்திற்குரிய பகுதிகளில், இன்று இரவு 8.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
கண்டி: கண்டி நிர்வாக மாவட்டத்திற்குரிய பகுதிகளில், இன்று இரவு 8.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கள விஜயமும், முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான முழு அளவிலான ஏற்பாடுகளும்
கண்டி: நீதிமன்ற தடையையும் தாண்டி வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வன்முறையாளர்கள் ஒன்றுதிரண்டு மரணமடைந்த சிங்கள இளைஞ்சனை நேற்று ஊர்வலமாக கொண்டு சென்றதோடு திகன பிரதேசத்தில் இருந்த முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்ததுடன், பொதுமக்களையும் தாக்கி, வீடுகளுக்கு கல் எறிந்து பள்ளிவாசல்களையும் முற்றாக சேதப்படுத்தினார்கள்.
-
கண்டியில் ஊரடங்கு
கண்டி: நாளை (06) காலை 6.00 மணி வரை, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கண்டி, திகன பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
தீ இற்கு முன்னர் பரவும் வதந்திகள்
– AK-11 கொழும்பு: தற்பொழுது நாடு இருக்கும் நிலைமையிலும், சிரியா இருக்கும் நிலைமையிலும் உண்மைகளை விட வதந்திகளே அதிகம் அதிகம் பரப்பப்படுகின்றன. இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவது உண்மையானதே. இருந்தும் அன்றைய தாக்குதல்களின்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை இன்று, இப்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக வதந்திகளை அதிகமானவர்கள் பரப்பி வருகின்றனர்.
-
சிரியா: தீவிரமடையும் தாக்குதலால் தப்பி செல்லும் மக்கள்
டமஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் தப்பி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் கிழக்கில் அமைந்திருக்கும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக பல முனைகளிலும் சிரியா அரசு ராணுவம் அழுத்தங்களை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
-
சிரியாவில் 5 இலட்சம் மக்களைக் கொன்றொழித்த தந்தையும் மகனும்
ஓர் வரலாற்று ஆய்வு டமஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போருக்கு அங்கு நடக்கும் குடும்ப ஆட்சியும் முக்கிய காரணம் ஆகும். 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும்…
-
ஐரோப்பிய கடும் குளிர்: 55 பேர் பலி
லண்டன்: ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன மேலும் நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
வஸீம் அக்ரமை கவர்ந்த பாகிஸ்தான் சிறுவனின் பந்து வீச்சு
MJ லாஹூர்: பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் அபாரமாப பந்து வீசும் காணொளி ஒன்று இப்போது வைரலாகியுள்ளது. இதனை அவதானித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், சிறந்த பந்து வீச்சாளருமான வஸீம் அக்ரம், இச்சிறுவனைப் பாராட்டி டிவீட் செய்திருக்கிறார்.
-
மக்களை வாட்டி எடுக்கும் குளிர்: பிரித்தானியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை
– MJ லண்டன்: பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. காலநிலை மறை (-) 5க்கும் குறைவானதாக பல இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக நிலவி வருகிறது. வழமையாக கால நிலை எச்சரிக்கைகளுக்கு மஞ்சல் எச்சரிக்கையே விடுக்கப்படும். ஆனால் ஸ்கொட்லாந்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
-
முதல் நாளே சீர் குலைந்துபோன போர் நிறுத்தம்
டமஸ்கஸ்: சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டு இருந்தார். இந்த போர் நிறுத்தம் செவ்வாய்கிழமை தொடங்கும் என்றும், மேலும், பொதுமக்கள் வெளியேறுவதற்கான “மனிதாபிமான பாதைகள்” உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
காத்தான்குடி தபால் நிலைய அதிபர் மஸாஹிர் காரியப்பர் சம்மாந்துறை தபால் நிலைய அதிபராக இடமாற்றம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தபால் நிலையத்தில் பிரதேச தபால் அதிபராக கடமையாற்றி சம்மாந்துறை பிரதேச தபால் நிலைய அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் தபால் அதிபர் கே.எம். மஸாஹிர் காரியப்பருக்கான பிரியாவிடை நிகழ்வு 26 நேற்று திங்கட்கிழமை பிற்பகல் காத்தான்குடி தபால் நிலையத்தில் இடம்பெற்றது.