Category: Your Kattankudy
-
உறுதியான அரசை தோற்கடித்து நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை கொண்டுவர சர்வதேச நாடுகள் முயற்சி – பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 30 வருட யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிலிருந்து விடுபட முதற்கட்டப் பணிகளை கடந்த ஐந்து வருடங்கள் அபிவிருத்திக்கு பெரும் தொகை நிதியை செலவிட்டு நாட்டை கட்டியெழுப்பப் பாடுபட்டார்.
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் தலைவராக ராஜன் மயில்வாகனம். உப தலைவராக றம்ழான் ஆகியோர் தெரிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் பெயரில் சுகாதார அமைச்சரினால் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையின் புதிய மூன்று ஆண்டுகளுக்கான அபிவிருத்தி குழு உறுப்பினர்களாக பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பல்கலைக்கலக மாணவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள், வர்த்தகர்கள், முன்னால் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் பிரத்தியோக செயலாளர்கள் என சுமார் 85க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
-
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவன ஏற்பாட்டில் மீராவோடை அல்-ஹிதாயாவின் விஞ்ஞான, கணிதப்பிாிவு முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல்
KCDA கல்குடா: கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விஞ்ஞான, கணிதப்பிாிவு மாணவா்களின் கல்வி முன்னேற்றம் தொடா்பான கலந்துரையாடல் 2014.11.14 ஆந்திகதி வெள்ளிக்கிழமை மீராவோடையில் அமைந்துள்ள KCDAயின் காாியாலயத்தில் நடைபெற்றது.
-
இலவச கொரிய ஆயுர்வேத வைத்திய முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவூத் ஏற்பாடு செய்த இலவச கொரிய ஆயுர்வேத வைத்திய முகாம் நவம்பர் மாதம் 18, 19, 20 ஆகிய திகதிகளில் புதுக்குடியிருப்பு சித்த வைத்திய ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலை மற்றும் ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலை ஆகிய இடங்களில் நடைபெறும்.
-
‘தேசத்திற்கு நிழல்’ மரம் நடுகின்ற நிகழ்வு காத்தான்குடி முதியோர் இல்ல வளாகத்தில்
அஹமட் றிஸ்வி காத்தான்குடி: ‘தயட்ட செவன’ – ‘தேசத்திற்கு நிழல்’ வேலைத்திட்டத்தின் கீழ் மரம் நடுகின்ற நிகழ்வு காத்தான்குடி முதியோர் இல்ல வளாகத்தில் (15/11/2014) இன்று காலை உதவி திட்டமிடல் பணிப்பாளர் A. கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
-
PMGG யின் பிரமுகர்களுடனான ஒன்றுகூடல்
PMGG ஊடகப்பிரிவு/பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரமுகர்களுடனான ஒன்றுகூடல் நேற்று இரவு காத்தான்குடி Gadafi Beach Garden ல் இடம்பெற்றது. சூறாசபை உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத் அவர்கள் கலந்துகொண்டு விஷேட உரையாற்றினார்.
-
கட்டாரில் இயங்கும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் அப்துல் பாசித் புகாரியின் இஸ்லாமிய மாநாடு – பெருமளவிலானோர் பங்கேற்பு
கட்டாரில் இருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அல் பனார்: கட்டாரில் இயங்கும் SLDC ஸ்ரீ லங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘யார் அந்த குரபாக்கள்’ எனும் தலைப்பிலான இஸ்லாமிய மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை கட்டார் (அல் பனார்) அப்துல்லாஹ் பின் ஸைத் மாநாட்டு மண்டபத்தில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி) தலைமையில் இடம்பெற்றது.
-
தேசத்துக்கு நிழல் நிகழ்ச்சித்திட்டம் ஏறாவூரில்
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ‘தயட்ட செவன’ எனப்படும் தேசத்துக்கு நிழல் மர நடுகை நிகழ்ச்சித்திட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தால் இன்று சனிக்கிழமை (15) காலை 10.41 இக்கு ஏறாவூர், மிச் நகர் வித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனிபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரேதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச மரண விசாரணை அதிகாரிஇபொதுமக்கள் என பலரும் மர நடுகையில் ஈடுபட்டனர்.
-
‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை நிகழ்வு – காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் அனுஷ்டிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘பசுமை நிறைந்த நாடு ஒளிமயமான எதிர்காலம்’ தேசிய மர நடுகைத்திட்டத்தின் மூலம் இலங்கையின் வன வளத்தை அதிகரிக்கும் இலக்கை வெற்றிகொள்வோம் எனும் எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15-11-2014 இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழா மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்றது.
-
கல்முனை ஸாஹிறாவின் 65வது ஆண்டு விழாவும், மூன்று மாடி வகுப்பறைக் கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும்
ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவையொட்டி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கல்லூரியின் காரியப்பர் கூட்ட மண்டப புனர்நிர்மாணம், மூன்று மாடி வகுப்பறைக் கட்டிட நிர்மாணம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-
யு.எல்.எம். ஹால்தீன் சேர் அவர்களின் மறைவு குறித்து தாம் ஆழ்ந்த கவலை – தேசமான்ய எஹியான்
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார் : இலங்கையின் நிர்வாக சேவையில் தமக்கென தனியானதொரு இடத்தை பிடித்து இலங்கை முஸ்லிம்களுக்கு அளப்பறிய பணிகளை செய்து வந்த நிலையில் நேற்று இரவு இறையடியெய்திய அல்-ஹாஜ். யு.எல்.எம். ஹால்தீன் சேர் அவர்களின் மறைவு குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், அன்னாரின் சுவன வாழ்வுக்காக தாம் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள முசலி பிரதேச சபையின் தலைவர் தேசமான்ய எஹியான், அன்னாரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
‘பசுமை நிறைந்த நாடு ஒளிமயமான எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழாவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு – காத்தான்குடியில்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘பசுமை நிறைந்த நாடு ஒளிமயமான எதிர்காலம்’ தேசிய மர நடுகைத் திட்டத்தின் மூலம் இலங்கையின் வன வளத்தை அதிகரிக்கும் இலக்கை வெற்றிகொள்வோம் எனும் எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15-11-2014 இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழாவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில்…