Category: Your Kattankudy
-
முன்னாள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பரின் ஊடகவியாலாளர் சந்திப்பு – ஓடியோ இணைப்பு
ஒலிப்பதிவு – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முன்னாள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பரின் ஏற்பாட்டில் 04-06-2015 இன்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி கயா பேக்கரி அன்ட் ரெஸ்டுரெண்டில் ஊடகவியாலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
-
வில்பத்து கூட்ட அழைப்பு : வருவோம்…! வரமாட்டோம்..!! முஸ்லிம் அரசியல்வாதிகளின் அதிர்ச்சிப் பதில்கள்
ஏ. எச்.எம். பூமுதீன் கொழும்பு: வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பிலும் வில்பத்தின் உண்மையான அமைவிடம் குறித்தும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு நேற்றிரவு வெள்ளவத்தை ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது.
-
வாழைச்சேனையில் கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் மனைவிமார்களின் தொகை அதிகரிப்பு!!
வாழைச்சேனை: வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் மனைவிமார்களின் தொகை வெகுவாக அதிகரித்துக்கொண்டு வருவதாக அங்குள்ள ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குள் உள்ளடங்கும் கோறளைப்பற்று தெற்கு(கிரான்), கோறளைப்பற்று மத்தி(வாழைச்சேனை-முஸ்லிம்),
-
உலக சுற்றுலா நகரங்களில் கொழும்பு முதலிடத்தில்
நியுயோர்க்: இலங்கையின் தலைநகர் கொழும்பு உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலா நகரங்களில் முதல் இடத்தில் இருப்பதாக மாஸ்டர் கார்ட் மேற்கொண்ட வருடாந்த பயண ஆய்வில் தெரியவந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் 10 நகரங்கள் தொடர்பில் 6 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதுடன் 10 நகரங்களில் 7 நகரங்கள் ஆசியாவை சேர்ந்தவை.
-
இங்கிலாந்து ராணி மறைந்து விட்டதாக தவறான செய்தி: மன்னிப்பு கோரிய பி.பி.சி.
– AF-90 லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்தார் என்று பி.பி.சி. செய்தியாளர் வெளியிட்ட செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பி.பி.சி. செய்தியாளர் ஆமன் க்வாஜா டுவிட்டரில் இங்கிலாந்து ராணி மறைந்து விட்டதாக செய்தியை பதிவேற்றியிருந்தார்.. இதனைக் கண்ட இங்கிலாந்து மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும், பரபரப்பிலும் ஆழ்ந்தனர்.
-
கட்டாரில் “தளர்ந்து விடாதீர்கள் கவலைப்படாதீர்கள் ஈமான் கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்” என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 04-06-2015 இன்று வியாழக்கிழமை இரவு 08.45 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
யோஷித்த ராஜபக்சவின் மினி விமானத்தை இன்று முதல் மக்கள் பார்வையிடலாம்
கொழும்பு: நாரஹேன்பிட்டிய பொருளாதார மத்திய ஸ்தானத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மினி ஆகாய விமானம் இரத்மலானை ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் இன்று வியாழக்கிழமை முதல் அங்கு இவ்விமானத்தைப் பார்வையிடலாம்.
-
ரொஹிங்கியாக்களை சொந்த பிரஜைகளாக நடத்துமாறு மியன்மாருக்கு அமெரிக்கா அழுத்தம்
வோஷிங்டன்: தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் குடியேறிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண மியன்மார் அரசு சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்களை தனது சொந்த பிரஜைகளாக நடத்த வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ஆன் ரிச்சர்ட், மனித உரிமை விவகாரம் குறித்து மியன்மார் தலைவர்கள் வாய்திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் 109 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்து?
கொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் 109 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருப்பதாகத் தெரியவருகிறது. ஐ.ம.சு.மு உறுப்பினர்களால் கைச்சாத்திடப்பட்ட இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்றையதினம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவிருப்பதாக டி.பி.ஏக்கநாயக்க எம்.பி தெரிவித்தார்.
-
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சி உதயம்
கொழும்பு: வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நேற்று தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அரசியல் கட்சியொன்று உதயமானது. கொழும்பில் நேற்று நடைபெற்ற உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வில் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டு மேற்படி அரசியல் கட்சியைத் தொடங்கி வைத்தனர்.
-
சவூதி அரேபிய அரசாங்கம் வழங்கிய ஈத்தம்பழப் பொதிகள் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கையளிப்பு
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: புனித றமழான் மாத வருகையை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமய விவகார அமைச்சின் ஊடாக வழங்கியிருந்த பேரீத்தம்பழப் பொதிகளை, கிழக்கு மாகாணத்திலுள்ள பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.
-
யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியமும் அதன் இளைஞர் கழகமும் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் சமூக எழுச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வுகளில் சிறப்பான முறையில் செயற்பட்ட அங்கத்தவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.