Category: Your Kattankudy
-
“17 மில்லியன் அளவிலான நிதி எம்மால் இக்கூட்டணியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் செலவு செய்யப்பட்டிருக்கிறது”: அப்துர் ரஹ்மான்
– NFGG, பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு தேர்தல் கூட்டணி ஒன்றில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்தமையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் அரசியல் எழுச்சியினையும் வெற்றியினையும் கண்டிருக்கிறது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்த பாரிய உழைப்பு மற்றும் தியாகங்கள் மூலமாகவே இந்த வெற்றி சாத்தியமானது.
-
பதவிப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டது
கொழும்பு: தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் 2016இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்
லண்டன்: இலங்கை கிரிக்கட் அணியினர் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்துக்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விளையாடவுள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர் மற்றும் இருபது ஓவர் போட்டி ஒன்றிலும் விளையாடவுள்ளது.
-
கோட்டாபயவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்
காலி: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தற்காலிகமாக வௌிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. காலி நீதிமன்றத்தால் கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது. காலி துறைமுகத்தில் கடந்த ஜனவரி 18ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் குறித்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர் வௌிநாடு செல்லக்கூடும் என்ற இரகசியப் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
-
சந்திரிக்கா, பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு இடம்பெற்ற முக்கிய சந்திப்பு!
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்தே இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
“முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டு அரச சம்பளம் வழங்குவதற்கான விஷேட ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்”: உதுமாலெப்பை
– பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் சேவையாற்றி வருகின்ற கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி அமைச்சில் இணைக்கப்பட்டு அரசாங்க சம்பளம் வழங்குவதற்கான விஷேட நடவடிக்கைகளை மேற்கொள்வதினூடாக நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ.துரைரட்னமினால் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பாலர் பாடசாலை கல்விப்பணியகத்தின்
-
அரசியல்வாதிகளுக்கு ‘வாலி’பிடிக்கும் காத்தான்குடி மாணவர் சமூகமும் எதிர்காலமும்…
– MJ காத்தான்குடி: முகநூல் எனும் சமூக வலைத்தளம் வந்ததன் பின்னர் ஆளுக்கொரு கணக்கை ஆரம்பித்துவிட்டு, தான் ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கி, அவர்களுக்கு புகழ்மாலை சூடுவதிலும், தனது எதிரி அரசியல்வாதிகளுக்கு அவர்களைத் தூற்றி எழுதுவதிலும் இன்றைய காத்தான்குடி இளைஞர் சமூகம் முகநூலில் சீரழிந்துகொண்டிருக்கின்றது.
-
அமெரிக்காவில் செய்தியாளர்கள் இருவர் சுட்டுக்கொலை
வேஜினியா: அமெரிக்காவின் வேஜினியா மாகாணத்தில் இரு தொலைக்காட்சி செய்தியாளர்கள், கமரா முன்பாக செய்தி வழங்கிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். டபிள்யுடிபிஜே7 என்ற தொலைக்காட்சியைச் சேர்ந்த அலிசன் பார்க்கர் என்ற 24 வயது செய்தியாளரும் அவருடைய ஒளிப்பதிவாளர் அடம் வார்ட் என்பவரும் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்களை இருண்ட யுகத்தினுள் தள்ளும் பாயிஸ்
– அபூ பத்ரி புத்தளம்: புத்தள மாவட்ட முஸ்லிம்கள் கடந்த 26 வருடங்களாக இழந்து போயிருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் இன்று ரிசாத் பதியுதீன் எனும் மன்னாரைச் சேர்ந்தவரால் மீளவும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பது புத்தளம் மாவட்ட முஸ்லிம்களை பெரும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
“கடந்த தேர்தலில் இரண்டு வகையான வெற்றிகளை இறைவன் எமக்குத் தந்தான்”: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
– நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: ‘கடந்த பொதுத்தேர்தல் முடிவுகளிலிருந்து வெற்றிகளை நாம் இரண்டு வகையாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று பிராந்தியரீதியில் நாம் அடைந்துள்ள வெற்றி, மற்றையது தேசிய ரீதியில் நமது பங்களிப்புடன் நாட்டு மக்கள் பெற்றுள்ள வெற்றி’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான தெரிவித்தார்.
-
ஐஎஸ் தீவிரவாதிகளை மிரட்டும் எய்ட்ஸ்: அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள தலைமை உத்தரவு
– AF-90 டமஸ்கஸ்: ஐஎஸ் தீவிரவாதிகளை எய்ட்ஸ் நோய் பயமுறுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து ஐஎஸ் தீவிரவாதிகளும் எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது.ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கம், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அந்த தீவிரவாத இயக்கத்தில் ஆட்கள் சேர்ந்து வருகின்றனர்.