Category: Your Kattankudy
-
காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி
லங்காதீப – தமிழாக்கம் : எம்.ஐ.அப்துல் நஸார் திமுலாகல: திமுலாகல மல்தெனியவில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி 64 வயதான நபரொருவர் பலியானதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை சுற்றுலா செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட இவர் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
ஆசிரியர் தினம்
முப்பது பிள்ளைகளின் மூக்கணாங் கயிறு இவர்களின் கைகளில். தங்களின் வயிறுகளை விட இந்தக் கயிறுகளில் கரிசனை காட்டுவார் கற்பிக்கும் ஆசிரியர்.
-
“திறன்பேசிகளுக்குள் ஊடுருவும் வல்லமை பெற்றிருக்கிறது”
லண்டன்: பிரிட்டிஷ் கண்காணிப்பு நிறுவனமான, ஜி.சி.எச்.க்யூ , திறன்பேசிகளுக்குள் (ஸ்மார்ட்ஃபோன்) ஊடுருவித் தகவல்களைத் திரட்டும் வல்லமையைப் பெற்றிருக்கிறது என்று முன்னாள் அமெரிக்க உளவுப் பகுப்பாய்வாளரான, எட்வர்ட் ஸ்னோடன் பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த முதல் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
-
எதற்காக இலங்கையில் ஈரான் நாட்டின் உதவியுடன் அல்-முஸ்தபா பல்கலைகழகம் நிறுவப்பட்டுள்ளது?
நேர்காணல், காணொளி ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: கொழும்பில் ஈரான் நாட்டின் உதவியுடன் இயங்கிவருக்கின்ற பல்கலைகழகமான அல்-முஸ்தபா பல்கலைகழகத்தின் புதிய பணிப்பாளர் அலி ஹாஸிமியுடனான நேர்காணல்.
-
பல்கலைக்கழக அனுமதிக்கான இஸட்புள்ளி வெளியீடு
கொழும்பு: 2013/ 2014 கல்வி ஆண்டுக்கான இஸட் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளுக்கு அமைய அவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதற்கு அவர்கள் பெற வேண்டிய ஆகக் குறைந்த வெட்டுப்புள்ளிகளே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
-
2000 வருடங்களுக்கு முற்பட்ட நாகர் காலத்து சில அரும் பொருட்கள், கல்வெட்டுக்கள் காரைதீவில் கண்டுபிடிப்பு
காரைதீவு: காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் நாகர் காலத்து சில அரும் பொருட்களும் , கல்வெட்டுக்களும் இருப்பதாக தெரியவந்ததையடுத்தும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடும் காரைதீவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட கலாநிதி சி.பத்மநாதன் (தகைசார் பேராசிரியர் வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம், வேந்தர் யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும் எழில்வாணி பத்மகுமார் (இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் மட்டக்களப்பு) அவர்களும், வ.குணபாலசிங்கம் ஆசிரியர் அவர்களும் விஜயம் ஒன்றினை இன்று (05.10.2015) மேற்கொண்டிருந்தனர்.
-
‘சேயாவைக் கொன்றது நானே
மினுவாங்கொடை: சிறுமியைக் கொலை செய்தவன் நானே’ என நான்காவது சந்தேக நபரான கொண்டயாவின் சகோதரன் சமன் ஜயலத் ஒத்துக்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் இன்று (05) நீதிமன்றில் தெரிவித்தனர்.
-
“85 லட்சம் கோடியில் வந்தது 3770 கோடி; மீதி எங்கே?”
டெல்லி: 2014 ஆம் ஆண்டு தேர்தலில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய 85 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்கும் நோக்கிலான இந்திய அரசின் திட்டத்தின் கீழ் இதுவரை 3770 கோடி மட்டுமே வெளியில் வந்திருப்பதாகவும் மீதி கருப்புப்பணம் எங்கே என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
-
‘சிரியா-ரஷ்யா கூட்டணி வெற்றி பெறாவிட்டால் அழிவே ஏற்படும்’: அஸாத்
டமஸ்கஸ்: சிரியா, ரஷ்யா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணி வெற்றி பெற்றேயாக வேண்டும் அல்லா விட்டால் முழு பிராந்தியமும் அழிவையே எதிர்நோக்கும் என்று சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸாத் கூறியுள்ளார். ‘சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் பாதகமான விளைவுகளே ஏற்பட்டுள்ளன- அதாவது பயங்கரவாதம் பரவுவதற்கே அது வழியமைத்துள்ளது’ என்றும் அஸாத் விமர்சித்துள்ளார்.
-
பழைய ஜெருசலம் நகருக்குள் நுழைய பலஸ்தீனர்களுக்கு தடை
ஜெரூசலம்: இஸ்ரேலியர்கள் மீது நடத்தப்பட்ட இரண்டு கத்திக் குத்துச் சம்பவங்களை அடுத்து, பழைய ஜெருசலம் நகரப் பகுதிக்குள் பலஸ்தீனியர்கள் செல்லமுடியாதபடி இஸ்ரேல் தடை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் இரண்டு நாட்களுக்கு அமலில் இருக்கும். அங்கு குடியிருக்காத பலஸ்தீனியர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.
-
ஊர் வீதிக்கு காபட் இடுவதற்கான முன் ஏற்பாடுகள் தற்போது துரிதம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பழைய மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியின் வீதி அபிவிருத்திப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் களப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.