Category: Your Kattankudy
-
காத்தான்குடியில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய புதிய அலுவலகம் அமைச்சர் ஹலீமினால் திறந்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அஞ்சல் மற்றும் அஞ்சல் விவகார முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் கீழ் இயங்கிவரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய புதிய அலுவலகம் நேற்று 23 சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டப வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட து.
-
பிரதான வீதியில் பேரீச்சம் பழங்களை அறுவடை செய்த அமைச்சர் ஹலீம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட அஞ்சல் மற்றும் அஞ்சல் விவகார முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு அருகாமையில் நேற்று 23 சனிக்கிழமை இடம்பெற்ற இவ் வருடத்திற்கான பேரீச்சம் பழங்கள் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டார்.
-
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும்’ – ஒபாமா
லண்டன்: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதன் மூலம் அதிபர் ஒபாமா பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார்.
-
‘இனப்பிரச்சனைக்கு தீர்வு அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்’: விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம்: இனப்பிரச்சனைக்கானத் தீர்வு அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டுமேயன்றி, உணர்ச்சி பூர்வமாக அணுகப்படக் கூடாது என வட மாகாண முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். உணர்ச்சி பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்போது அது பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் என விக்னேஸ்வரன் இன்று வட மாகாண சபையில் கூறினார்.
-
பாலமுனை கிராமத்தில் 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான குடிநீர் குழாய் பொருத்தும் நிகழ்வு
பாலமுனை: காத்தான்குடி பாலமுனை கிராமத்திற்கான சுமார் 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான குடிநீர் குழாய் பொருத்தும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரின் முயற்சியினால் சுமார் 1 கோடி ரூபா செலவில் 2016.04.21ஆந்திகதி வியாழக்கிழமை காத்தான்குடி பாலமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
காத்தான்குடி அபிவிருத்திக் குழு கூட்டம்
எம்.ரி.எம்.யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று 22.04.2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
-
அன்று முஸ்லிம்களுக்கு எதிராக,, இன்று தமிழர்களுக்கு எதிராக,,,,,,
எம்.ஐ.முபாறக் யுத்தம் முடிந்ததும் மஹிந்த மூவின மக்களையும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைத்துச் செல்வார்-அவற்றின் ஊடாக நாட்டைக் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றில் யுத்த வெற்றியை அறிவித்த மஹிந்த ”இந்த நாட்டில் இனி சிறுபான்மை இன மக்கள் என்று எவரும் இல்லை.அனைவரும் இலங்கையர்கள்.இந்த நாட்டில் இரண்டு இனங்கள் மட்டும்தான் உள்ளன.ஒன்று இந்த நாட்டை நேசிக்கும் இனம்.அடுத்தது இந்த நாட்டுக்கு எதிரான இனம்”என்று கூறினார்.
-
இவரைப்போன்றவர்களால் இஸ்லாம் சிறப்புறுமா?
முஹம்மது நியாஸ் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த சிவசேனா கட்சியின் தலைவர் சுசில் குமார் ஜெயின் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்லாத்தை ஏற்றதாகவும் அதை 20: 04: 2016 பகிரங்கமாக அறிவித்துள்ளதாகவும் அந்நாட்டில் இயங்கிவருகின்ற சில ஊடகங்களும் தனிநபர் தகவல்களும் தெரிவிக்கின்றன.
-
இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இஸ்லாமிய நாடுகளிடம் உதவிக் கோரிக்கை
றியாத்: அறிமுகமாகக் கூடிய புதிய அரசியல்சாசனத்தில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் நாடுகளின் உதவியை நாடுகின்றது.
-
காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் கையளிப்பு
எம்.ரி.எம்.யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையத்திற்கான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
-
பயணிகள் கவனத்திற்கு
இன்றைய நாள் முழுவதும் நானொரு தனியார் பயணிகள் பேரூந்தாகியிருந்தேன் 00 எனது சிறு நகரத்திலிருந்து பெறு நகரமொன்றிற்கான எனது பயணத்தை சாரதி பொறுப்பேற்றுக் கொண்டதும் நான் பறக்கலானேன்
-
மட்டக்களப்பு பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு-22 திகதி ஏறாவுரில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: றாபிதது அஹ்லிஸ் ஸூன்னாவின் மட்டக்களப்பு பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு எதிர்வரும் 22-04-2016 திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை மட்டக்களப்பு –ஏறாவூர் அல் மர்கஸூல் இஸ்லாமியின் இஸ்லாமிய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.