Category: Your Kattankudy
-
மௌலவி.அல்ஹாஜ்.எம்.ஏ எம். மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்துகொண்டார்
டீன் பைரூஸ். காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் இணைச் செயலாளர் மௌலவி.அல்ஹாஜ்.எம்.ஏ எம்.மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி அவர்கள், மட்டக்களப்பு நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான
-
சகல ஊர்களிலும் காத்தான்குடியைப் போன்று சம்மேளனங்கள் உருவாக்கப்பட வேண்டும் – ஸமீல் நளீமி
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும், முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். ஸமீல் நழீமிக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்ஸஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
-
விடுமுறை தினங்களை நாட்டின் சகவாழ்வுக்காக பயன்படுத்துங்கள்!
ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை கொழும்பு: எதிர்வரும் விடுமுறை தினங்களை நாட்டின் அமைதிக்காகவும் சகவாழ்வுக்காகவும் முஸ்லிம்கள் பயன்படுத்தவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
புத்தர் இலங்கையில் பிறக்கவில்லையாம்!
நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் பௌத்த அமைப்புக்குள் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வருடம் முதல் இலங்கை முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பொது பல சேனாவின் நடவக்கைக்கையைத் தொடர்ந்து, சிங்கள மத பிரமுகர்களுக்கிடையிலும் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலும் உட்பூசல்கள் வெளிக்கிளம்பி வருகின்றன.
-
புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய அந்த 11 நாடுகள்…
கொழும்பு: ஈழப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன் என்று கேபி கூறியுள்ளார்.
-
‘தேசத்துக்கு மகுடம்’ கண்காட்சியை பார்வையிட அச்சமின்றி வாருங்கள்
முஸ்லிம் மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் அழைப்பு தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைப் பார்வையிட அச்சமின்றி வருமாறு முஸ்லிம் மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் அழைப்பு விடுத் துள்ளார்.
-
இலங்கை கிரிக்கட் வீரர்களும் தமிழ்நாட்டு அரசியலும்….
ஓர் சிறப்புக் கண்ணோட்டம் -MJ இலங்கை: இலங்கை கிரிக்கட் வீரர்களின் புகழ் மற்றும் அவர்களது திறமையான ஆட்டம் போன்றவற்றின் காரணமாக இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரபல்யமான உள்ளுர் போட்டிகளில் விளையாட அந்நாடுகள் இலங்கை வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன.
-
இலங்கை ஐ.பி.எல். வீரர்களுக்கு எதிர்ப்பு
டெல்லி: தமிழகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
-
கிழக்குப் பாடசாலைகளில் பரீட்சைகள் 2 தினங்களுக்கு ஒத்திவைப்பு!
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு! தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் கிழக்கு மாகாண மாணவர்கள் பங்குபற்றுவதற்கு வசதியாக இம்மாகாண பாடசாலைகளில் இடம் பெற்று வரும் தவணைப் பரீட்சைகள் யாவும் இன்று 27 ஆம் திகதியும் நாளை 28ஆம் திகதியும் இடம்பெறமாட்டாதென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் அறிவித்துள்ளார்.
-
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் ரஊப் ஹக்கீம் பகிரங்க அழைப்பு விடுப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு போட்டியிடும் சாத்தியம் அறவே இல்லாத போதிலும், முஸ்லிம்களின் சமூக நலன் சார்ந்த விடயங்களில் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தின் (Common Minimal Programme) கீழ் அவை ஒன்றுபட்டு இயங்குவதற்கான சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், அதற்கான அழைப்பை தாம் பகிரங்கமாக விடுப்பதோடு, ஏற்கனவே அதுபற்றி முஸ்லிம் அமைச்சர்கள் இருவருடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் கூறினார். இடம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின்…
-
சென்னையில் விளையாடாதது வருத்தம் அளிக்கிறது: முரளி
பெங்களுர்: ஐ.பி.எல். போட்டிகளில் சென்னையில் விளையாடாதது வருத்தம் அளிக்கிறது என்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடக் கூடாது என்று எழுந்த குரலால் ஐ.பி.எல் நிர்வாகமும் சென்னை போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாடக் கூடாது என்று அறிவித்துவிட்டது.
-
முன்னாள் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் அஷ்ரப் மீது பொதுபல சேனா சுமத்தும் அபாண்டங்களும் பழிகளும் நிறுத்தப்பட வேண்டும்-அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனா செயலாளர் பாணந்துறை பகிரங்க பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டு இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் மகோன்னத அரசியல் தலைவராகத் திகழ்ந்த அன்னாரை அவமதிக்கும் செயலென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.