Author: yourkattankudy.com
-
தங்க நாணயம் வாங்கும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய 5 விடயங்கள்….
– S-90 சென்னை: கடந்த 15 நாள்களாக தங்கத்தின் விலை 15 முதல் 20 சதவீதம் அளவிற்கு குறைந்திருக்கிறது. அதனால் இந்தியாவில் உள்ள பல நகைக் கடைகள் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன. தங்கத்தை, தங்க நாணயங்கள் மற்றும் தங்கள் நகைகள் என்று மக்கள் அதிகமாக வாங்குகின்றனர்.
-
பயிற்சியாளர் பாப்ரஸ் ராஜினாமா: சிக்கலில் இலங்கை கிரிக்கட்
கொழும்பு: இலங்கை அணி இந்த ஆண்டில் தனது நீண்ட சுற்றுப்பயணத்திற்கு தயாராகிவரும் நிலையில் அணியின் பயிற்சியாளர் போல் பாப்ரஸ் திடீரென விலகியுள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
-
பழிதீர்த்தது… பெண் பாம்பு!
மாத்தளை: ஆண் புடையன் பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில் அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மாத்தளை, உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.
-
30 வருடங்களின் பின்னர் படுவான்கரைக்கு படையெடுக்கும் காத்தான்குடி மக்கள்
– விசேட நிருபர் காத்தான்குடி: மண்முனை பாலம் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் தங்களது குடும்பசகிதம் சென்று மண்முனைப் பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
-
‘மன்னார் மற்றும் யாழ் ஆயர்கள் தேசத்துரோகிகள்’: பொதுபலசேனா
கொழும்பு: இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது.
-
மாஞ்சோலை அஸ்-ஸபா பாலர் பாடசாலைக்கு கல்குடா மீடியா போரத்தின் அன்பளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்குடா: மட்டக்களப்பு ‘கல்குடா மீடியா போரம்’ கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட பதுரியா-மாஞ்சோலை அஸ்-ஸபா பாலர் பாடசாலைக்கு நீர்சுத்திகரிப்பு இயந்திரத்தை 24-04-2014 இன்று வியாழக்கிழமை அன்பளிப்பு செய்தது.
-
500 மில்லியன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை தொட்ட வட்ஸ்அப்!
– SHM லண்டன்: நம்மை எல்லோரையும் புத்தகத்தில் முழ்கடித்த பேஸ்புக் நிறுவனம் மொபைல் மெசேஜ் அப்ளிகேஷன் நிறுவனமான வட்ஸ் அப் நிறுவத்தை கைபற்றியது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பேஸ்புக் வலைதளத்தில் வாடிக்காயாளர் எண்ணிக்கை கண்மூடித்தனமாக உயரும் தருவாயில் வட்ஸ்அப் நிறுவனத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 500 மில்லியனாக உயர்ந்துள்ளது.
-
மஹிந்த மன்னருக்கு மதியின் மடல்..
– மதியன்பன் சின்னவன் நான் என்றாலும் சிந்திக்கத் தெரிந்தவன் இது புத்திமதியல்ல வெறும் விண்ணப்பம் மாத்திரம்தான்..
-
‘பயங்கரவாத ஒழிப்பு ஹம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்’
கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் இன்று வன்முறைக் குழுக்களின் ஆட்சி இடம் பெறுவதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
-
இங்கிலாந்து நூதனசாலையில் மர்மச் சிறுமியின் உருவம்
– S-90 யோர்க்: இங்கிலாந்தின் ஒரு தம்பதியினர் மியூசியத்தில் எடுத்த புகைப்படத்தில் ஓர் குழந்தை போன்ற மர்ம உருவம் பதிந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இங்கிலாந்து மேற்கு யோர்க்சையர் வேக் பீல்டை சேர்ந்த ஜோன் பர்ன்சைட்- ஷோனா பேக்கவுஸ் தம்பதிகள் தங்களது 18 மாத மகன் ‘ ஜோன் தாடன்’ உடன் யோர்க் நகரில் உள்ள கேஸ்டில் பழங்கால மியூசியத்திற்கு சுற்றிபார்க்க சென்றனர்.
-
ஞானசார தேரர் தலையை சுற்றி மூக்கினை தொட்ட சம்பவம்!
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: இலங்கை நாட்டில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம் பெற்ற மோதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வடமாகாண தமிழ் மக்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தானும் சில பௌத்த பிக்குகளும் நோர்வே சென்று எரிக் சொல்ஹெய்மினை சந்தித்ததாகவும், எரிக் சொல்ஹெய்ம் தமிழ் மக்களுக்கு உதவ முடியாது என்று கூறியதாக பொதுபலசேனாவின் ஞானசார தேரர் இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம் பெற்ற விவாதமொன்றின் போது கூறியுள்ளார்.
-
மறிச்சிகட்டி மக்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 22ம் திகதிக்கு ஒத்திவைப்பு
– ஊடகப் பிரிவு மன்னார்: மன்னார்-மறிச்சிகட்டி, மரைக்கார்தீவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான வழக்கை மேலதிக விசாரணைகளுக்காக அடுத்த மாதம் 22ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி தெரிவித்தார்.