-
இராணுவம், பொலிஸ் விஷேட அதிரடிப்படை,பிரதேச மக்கள் ஆகியோரின் பாதுகாப்புடன் காத்தான்குடியில் ஜூம்ஆ தொழுகை நிறைவேற்றம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
“சஹ்ரான் ஹாசிம் பலி” – ராணுவ உளவு இயக்குநர்
ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிம் ஷாங்ரி லா விடுதியில் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்று இலங்கை ராணுவ உளவுப் பிரிவு இயக்குநரை மேற்கோள் காட்டி பிபிசி சிங்கள சேவை செய்தியாளர் அஸாம் அமீன் ட்வீட் செய்துள்ளார்.
-
உயிரிழந்த வெளிநாட்டவர்களின் விபரங்கள்
1. இந்தியா – 11 பேர் 02. பிரித்தானிய – 6 பேர் 03. டென்மார்க் – 3 பேர் 04. துருக்கி – 2 பேர் 05. பிரித்தானியா மற்றும் அமெரிக்க இரட்டை குடியுரிமை – 2 பேர்
-
குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது
மோதறை, முகத்துவாரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்? குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (25) பிற்பகல் கொழும்பு குற்றப் பிரிவு (CCD) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் (STF) இணைந்து, மோதறை, முகத்துவாரம் வீதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த ஆயுதங்கள் மற்றும் வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்
-
பெண்களுடைய ஆடை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா காலோசிதமான வழிகாட்டல்களை வழங்க வேண்டும்!
பெண்களுடைய ஆடை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 2009 ஆம் ஆண்டு எடுத்த நிலைப்பாடே சரியானதாகும். மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் மேலதிக பேணுதலுக்காக முஸ்லிம் மாதரால் அணியப்படும் நிகாப் கிமார் ஆடைகளுக்கு தடை வரமுன் நாட்டின் தற்போதைய களநிலவரங்களைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வாக்குழு முஸ்லிம் சமூகத்திற்கு சில வழிகாட்டல்களை வழங்க முன்வர வேண்டும்.
-
குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் உரிமை கோரியும், குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்கின்றன
முகம்மத் இக்பால் சாய்ந்தமருது ஒரு நாட்டில் யுத்தம் அல்லது அரசியல் வன்முறைகள் ஏற்பட்டால் அதில் முதலில் பாதிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அப்பாவி பொதுமக்களாகும். அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட பரவலான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எதுவு அறியாத அப்பாவிகள். சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு இரத்ததானம் வழங்குவதிலும் மற்றும் உதவிகள் செய்வதிலும் முஸ்லிம் இளைஞ்சர்கள் முன்னின்று செயல்பட்டது பாராட்டத்தக்கது.
-
9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கொழும்பு: உயிர்த்த ஞாயிறன்று (21) நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பில் 60 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 9 தற்கொலைதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
ஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு
புறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, குண்டு செயலிழக்கும் பிரிவினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தொடர்பாக அடையாளம் காணும் நோக்கில் அவரது விபரங்களை போக்குவரத்துத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். ஆயினும் குறித்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.எஸ் உம் சஹ்ரான் காசிமும்
AF-80 காத்தான்குடி: உலகின் கொடூரமான பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் இற்குப் பின்னால் மேற்கத்தேய நாடுகளின் திட்டமிடல்கள் இருக்கின்றன என்பது உலகமறிந்த விடயம். ஆங்கில மொழியில் அமைந்த இவ் இயக்கத்தின் முழுப் பெயரைச் சுருக்கி ஐ.எஸ் என இப்போது அழைக்கப்படுகிறது. கடந்த மாதத்துடன் இவ்வியக்கம் சிரியாவில் அழிக்கப்பட்டு, அதன் எச்சசொச்சங்கள் அடித்துவிரட்டப்படு வருகிறது.
-
பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்
பொலிஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து அரசாங்க ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற காலப்பகுதியில், வீதியில், புகையிரத பாதையில், பூங்காக்கள், பொழுதுபோக்கு மைதானங்கள் அல்லது ஏதேனும் ஒரு பொது இடத்தில் இருத்தல் அல்லது அதன் ஊடாக பயணித்தல் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெடி பொருள் நிரப்பிய வாகனங்கள் கொழும்பில் நுழைந்திருப்பதாக தகவல்! போலீஸ் உஷார்!!
கொழும்பு: முழுவதும் வெடிபொருள் நிரப்பிய ஒரு lலாரியும், ஒரு வேனும் தலைநகர் கொழும்புவிற்குள் நுழைந்திருப்பதால் கொழும்பு நகர காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இத்தகவலை போலீஸ் ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது.
-
“நியூசிலாந்தின் கிரைஸ்சேர்ச் தாக்குதலுக்கு பதிலடி”
நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ) என்ற இஸ்லாமிய பிரிவினைவாத குழு, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) தாக்குதலை நடத்தியுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.