-
கல்முனையில் வீதிக்கு காரியப்பர் பெயர் சூட்டியதை உடைத்தெறிந்த ததேகூ
கல்முனை: கல்முனை நகரிலுள்ள வீதியொன்றுக்கு எம்.எஸ் காரியப்பரின் பெயரை அனுமதியின்றி சூட்டியதாக குற்றஞ்சாட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் ஆதரவாளர்களும், பகிரங்கமாக வீதியின் பெயரிடப்பட்ட கல்வெட்டை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று சாத்தான்கேணி மைதானத்தில் நடைபெறுவதற்கு ஒரு சில மணித்தியாலயத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
-
11 ஆம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்
கொழும்பு: தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
-
நூறாணியா வீதி, அலியார் பேக்கரி சந்தியில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற NFGGயின் பிரச்சாரக் கூட்டம்
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டம் நேற்று நூறாணியா வீதி, அலியார் பேக்கரி சந்தியில் இடம்பெற்றது.
-
மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக் கூடிய தவைராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இருக்கப் போகின்றார்: இரா விக்டர் ராஜ்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் மதவாச்சி: வன்னி மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக் கூடிய தவைராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இருக்கப் போகின்றார். எனவே இந்த தேர்தலில் அவரது ஐக்கிய தேசிய முன்னணியினை வெற்றி பெறச்செய்து எமது வன்னி மண்ணில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடியவரான அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து செயற்பட போவதாக வன்னி மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணியில் 8 இலக்கத்தில் போட்டியிடும் இரா விக்டர் ராஜ் தெரிவித்துள்ளார்.
-
டிப்ளோமா பாடநெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் சாய்ந்தமருது: கற்ற சமூகமொன்றினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், பாலர் கல்வி என்பது மிகவும் முக்கியமானது அவர்களை நெறிபிரழா செய்வதற்கு அது இன்றியமையாததாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசி தலைவர் றிசாத் பதியுதீன் சாய்ந்தமருதுவில் கூறினார்.
-
றஊப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார்: றிசாத் பதியுதீன்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் திகாமடுல்ல: முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோர் ஜனாபதியில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் செயற்பட்டதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரது மறைவிற்கு பின்னர் தலைவராக வந்த றஊப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார் என்றும் கூறினார்.
-
ஓய்வூதிய முரண்பாடு முடிவுக்கு வருகிறது – ரூ. 2,500 தொடக்கம் ரூ. 10,000 வரை ஓய்வூதிய உயர்வு
எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: சுமார் ஒரு தசாப்த காலமாக நிலவி வந்த ஓய்வூதிய முரண்பாடு நாளை (10) முதல் நீக்கப்படுவதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
-
“முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ வேண்டுமா? ஐ.தே.க விற்கு வாக்களியுங்கள்”
கொழும்பு: இந்த நாட்டையும் குறிப்பாக முஸ்லிம்களையும் அழித்துக்கொண்டிருந்த மஹிந்தவின் ஆட்சிக்கு அனைத்து முஸ்லிம்களின் உதவியுடன் ஜனவரி 8 ஆம் திகதி அன்று முற்றுப்புள்ளி வைத்தோம். மஹிந்தவைத் தோற்கடிக் கலாம் என்று எவரும் நம்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் பல கட்சிகளுடன் இணைந்து இந்த நாட்டில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதுதான் ஆட்சி மாற்றம்.
-
‘பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா’ நூல் வெளியீடு காத்தான்குடியில்
காத்தான்குடி: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான “பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா” எனும் நூலின் வெளியீட்டு விழா, எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
தோல்விக்கு அஞ்சும் மஹிந்த இனவாதத்தை தூண்டுகிறார்
கொழும்பு: தோல்விக்கு அஞ்சும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே இனவாதத்தை தூண்டி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். தோல்வியைக் கண்ட மஹிந்த இன்று தான் செய்தவற்றை மறந்தும், மறைக்கவும் இனவாத அடிப்படையில் செற்படுகின்றார்.
-
மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி சற்று முன்னர் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம்
பெரிதாகப் பார்பதற்கு துண்டுப்பிரசுரத்தின் மேல் சொடுக்குக. (துண்டுப்பிரசுர பிரதிகள்: முகநூல் நட்பு)
-
புதுக்கடை சம்பவம் தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் தரும் விளக்கம்
கொழும்பு: இன்று மதியம் 3.30 மணியளவில் புதுக்கடை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரின் கீழ்தரமான அரசியல் நடவடிக்கைகளையே காட்டுக்கின்றது. பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டம் சார்பில் களமிறங்குவதற்கு அவர் போராடி வந்தார். கடந்த மாகாண சபை தேர்தலில் என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வெற்றிபெற்ற பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் என்னுடன் இணைந்தே அவர் அரசியல் செய்தார்.