-
ஆறு நோன்பு ஹதீஸ் ஆதாரமற்றதா? கலாநிதி அஹ்மத் அஷ்ரபிற்கான மறுப்பு -02
NTJ ஷவ்வால் மாதத்தில் நோற்கப்படும் ஆறு நோன்பு ஹதீஸை கலாநிதி அஹ்மத் அஷ்ரப் பலவீனம் என எழுதியிருந்தார். முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஸஃத் என்ற அறிவிப்பாளர் மனனசக்தி குன்றியவர் என்பதே கலாநிதியின் பிரதான விமர்சனமாக அமையப் பெற்றிருந்தது. ஸஃதின் அறிவிப்பை வலுப்படுத்தும் விதத்தில் அபூதாவுதில் இடம் பெற்ற ஸப்வானின் அறிவிப்பை நாம் எடுத்துக்காட்டினோம். இதற்கு கலாநிதி பதிலொன்றை மீண்டும் வெளியிட்டுள்ளார்.
-
துருக்கி: சதிகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் அதிரடி நடவடிக்கைகள்
அங்காரா: துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு அரசின் பதில் நடவடிக்கையாக, ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மீதான களையெடுக்கப்பு தொடர்கிறது. 7 ஆயிரத்துக்கும் மேலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இலங்கையைச் சேர்ந்த மருத்துவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது
லண்டன்: இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த வெதிசிங்கவிற்கு இவ்வாறு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வழங்கப்படும் Edgar Gentilli Prize என்ற விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.
-
அரசியல் களியாட்டம்: நாமல் விடுதலை; பசில் மீண்டும் கைது
கொழும்பு: கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று (18) கொழும் கோட்டை நீதவான் திருமதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார். இந்தியாவின் கிறிஸ் நிறுவனத்தினால் ரக்பி விளையாட்டின் அபிவிருத்தி தொடர்பில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ரூபா 7 கோடி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஜூலை 11 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
-
3 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்
டெல்லி: மூன்று ஆண்டுகளுக்குமுன், வட இந்தியாவில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளான இளம் பெண் ஒருவர், அதே ஆண்கள் குழுவால் மீண்டும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, தாழ்ந்த சாதியை சேர்ந்த மாணவி மயக்கமுற்ற நிலையில் கண்டுபிடிக்ககப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார்.
-
காங்கேயனோடை மின்னொலியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்ட அணி முதலிடம்
S.சஜீத் கங்கேயனோடை: கங்கேயனோடை பிரதேசத்தில் கடந்த நான்கு தினங்களாக நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் காங்கேயனோடை அல் அக்ஸா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவந்த மின்னொலியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று 17.07.2016 நேற்றையதினம் இடம்பெற்றன.
-
ஸ்ரீலங்கன் விமான சேவை மட்டுப்படுத்தப்படுகிறது.. இப்படியே போனால்….?
கொழும்பு: இன்னும் மூன்று மாதங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவை மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது. இது தேசிய விமான சேவையின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் செயற்பாடு என விமான சேவை தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர ஐரோப்பாவின் பாரிஸ் நகர், ரோம், ஜேர்மனியின் ஃப்ராங் ஃபர்ட், பிரித்தானியாவின் லண்டன் நகர் ஆகியவற்றிக்கு நேரடி விமான சேவையை முன்னெடுத்திருந்தது.
-
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் கிருமிகள்: துருக்கி அதிபர் எர்துவான்
அங்காரா: கடந்த வெள்ளிக்கிழமையன்று, துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணமானவர்களை கிருமி என அழைத்துள்ள அதிபர் எர்துவான், அரசு நிறுவனங்களை சுத்தப்படுத்தவும் சபதம் எடுத்துள்ளார். இந்த சதிக்கு திட்டம் தீட்டியவர்கள் இனி எங்கும் ஓடி ஒளிய முடியாது என தெரிவித்துள்ளார்.
-
நாமல் – ஜானகிக்கு இடையிலான உறவு அம்பலம்!
கொழும்பு: பேன் ஏசியா வங்கியின் தலைவர் நிமல் பெரேராவினால், நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலம் ஊடாக நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் இயக்குனரான ஜானகி சிறிவர்தன எனப்படும் ஜானகி வீரகொடவுக்கு இடையிலான பல தொடர்புகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக நிதி மோசடி தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
-
துருக்கி ராணுவ ஹெலிகப்டரில் கிரீஸிற்குள் நுழைந்தவர்கள் யார்?
ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டிற்குள் துருக்கி ராணுவ ஹெலிகப்டரில் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்திற்குமுன், அந்த ஹெலிகப்டர் வட நகரமான அலெக்ஸாண்ட்ரூபோலிஸில் தரையிறங்கி உள்ளது. அதில் வந்தவர்கள் கிரீஸில் அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ளார்கள்.
-
அல்ஹம்துலில்லாஹ்! குடி மக்கள் ஆதரவுள்ள ஆட்சி அதிகாரத்தை சதிகாரர்களால் அழித்துவிட முடியாது என்பதை துருக்கி மக்கள் நிருபித்துள்ளனர்!
M. சில்மி தாஜூதீன் இன்று உலகம் முழுவதும் துருக்கி இரானுவ சதிப்புரட்சி பற்றிய செய்தியே நிறைந்திருக்கிறது, நேற்று நள்ளிரவு நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சதிப்புரட்சி அல்லாஹ்வின் உதவியால் சூரிய உதயத்துக்கு முன்பே முறியடிக்கப்பட்டு விட்டது, உலகில் முஸ்லீம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்துக்கு எதிராகவும் நடக்கின்ற சதிகளை எதிர்த்து பேசும் துருக்கிய ஜனதிபதி றஜப் தையுப் அர்தூகானையும், அவரது அரசையும் கவிழ்ப்பதற்காக மேற்கு நாடுகளினதும், சில அரபுத் தலைமைகளினதும் நிகழ்ச்சி நிரலாகவே இப்புரட்ச்சி அமைந்துகாணப்பட்டன.