-
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் புதிதாக அமைக்கபட்ட மாடி கட்டட திறப்பு விழா
பா.திருஞானம் பதுளை: பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் புதிதாக அமைக்கபட்ட மாடி கட்டட திறப்பு விழாவும் ஆசிரிய விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று (24) வைபவ ரீதியாக நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, ஊவா மாகான முதல் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ்,
-
வெளிநாடுகளில் வசிப்போர் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை பின்பற்றுமாறு கோரிக்கை
கொழும்பு: வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை பின்பற்றுமாறு வெளிவிவகார அமைச்சு இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் தம்மை பதிவு செய்வது கட்டாயம் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
-
ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் அமெரிக்க மதகுருவுக்கு முக்கிய பங்கு: எர்துவான் குற்றச்சாட்டு
அங்காரா: கடந்த வார இறுதியில், துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியை திட்டமிட்டவர் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் மதகுரு ஃபெத்துல்லா குலன் என்பதை அதில் ஈடுபட்டவர்கள் ஒப்புக் கொண்டு வருவதாக அதிபர் எர்துவான் தெரிவித்துள்ளார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி நடந்த போது, துருக்கி ராணுவத்தின் தளபதியை கடத்தி, மதகுருவிடம் பேச சம்மதிக்க சதியாளர்கள் முயற்சித்ததாக அதிபர் எர்துவான் கூறியுள்ளார்.
-
ஆப்கான் தாக்குதல்: 80 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டோர் காயம் தாக்குதல்: 80 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டோர் காயம்
காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் நடத்திய ஹஸாரா சிறுபான்மை இனத்தவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டுகள் தங்களுடைய இரண்டு தற்கொலை தாக்குதல்தாரிகளால் வெடிக்கச் செய்யப்பட்டதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு கூறியிருக்கிறது.
-
துருக்கி இராணுவப் புரட்சி! சதிகாரர்கள் யார்?
அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசுகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிவோம். துனிசியா ,லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.ஆனால்,சிரியாவில் அரபு வசந்தம் தொடங்கப்பட்டுள்ளபோதிலும்,அது 5 வருடங்களாக முடிவின்றித் தொடர்கின்றது.
-
ஜெர்மனியில் துப்பாக்கி தாக்குதல்: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
மியூனிக்: தெற்கு ஜெர்மன் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிசார் கூறுகிறார்கள். அங்கு பொலிஸ் படையினர் சுற்றி வளைத்து எதிர் நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரி ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலின் அதிரடி நடவடிக்கையும்! தீவிரமடையும் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும்!!
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை வலியுறுத்தியும், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை கொடுக்கு முகமாக வெள்ளிக்கிழமை (22) சாய்ந்தமருதிலுள்ள சகல ஜூம்ஆப் பள்ளிவாசலிலும் குத்பா பிரசங்கமும், விசேட துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
-
“நியாஸின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை மாத்திரமின்றி விஷமத்தனமானவையுமாகும்” IWARE பெண்கள் அமைப்பின் பகிரங்க விளக்கம்
நாம் யார்? என்ன செய்து கொண்டிருக்கின்றோம்.? காத்தான்குடிப் பிரதேசத்தில் IWARE ( Islamic Women’s Association for Research and Empowerment ) என்ற பெயரில் பெண்களை வலுவூட்டுவதற்கான அமைப்பாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நாம், நமது சமூகத்தில் அதிகரித்துச் செல்லும் விவாகரத்துக்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் சமூக சீரழிவுகள் தொடர்பிலும் கடந்த 2014 முதல் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். சமூகத்தில் எவராலும் கண்டு கொள்ளப்படாத ஆனால் இஸ்லாமிய…
-
சவுதி கொடை வள்ளல் ஒருவரின் உதவியுடன் மூன்று கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட மாஞ்சோலை பள்ளிவாயல் திறப்பு
எம்.ரீ.எம். பாரி்ஸ் ஓட்டமாவடி: 200 வருட கால வரலாற்றுப் பின்னனியை கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைத்துள்ள மாஞ்சோலைக்கிராம் 1981 ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் மாஞ்சோலை மாதிரிக்கிராமம் என்ற பெயரில் வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் நிலவிய மூன்று தசாப்த கால யுத்ததின் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இக்கிராமத்தை விட்டு வெளியோறிச்செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டது.
-
விமானத்தை கண்டுபிடிக்க சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிடம் இந்தியா உதவி
சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானம், காலை 8:46 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தகவலை தொடர்பை இழந்தது. விமனம் 11:30 மணியளவில் அந்தமானை சென்று அடைந்து இருக்கவேண்டும், ஆனால் விமானம் மாயமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
-
மது குடிப்பதால் உண்டாகும் 7 வகை புற்றுநோய்: ஆராய்ச்சியில் தகவல்
லண்டன்: மது குடிப்பதற்கும் ஏழு வகையான புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. உடல்கூறியல் ரீதியான காரணங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், `அடிக்ஷன்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவுகளின்படி, மதுகுடிப்பதற்கும் புற்றநோய் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.