WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஆறு கோடி பத்து இலட்சம் செலவில் காத்தான்குடி டெலிகொம் வீதி விரைவில் செப்பனிடும் பணிகள்

    காத்தான்குடி: மிக நீண்டகாலமாக செப்பணிடப்படாமல் இருந்துவருகின்ற காத்தான்குடி டெடலிகொம் வீதி மக்களுடைய பாவனைக்கு உகந்ததல்லாது அவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பல சிரமங்கள்களையும், இன்னல்கயையும் அனுபவித்து வருவதோடு, அவ்வீதியால் செல்லும் கனரக வாகனங்களினால் ஏற்படுத்தப்படும் தூசு காரணமாக வீட்டினுடைய சுற்றுச்சூழல் மாசடைவதோடு, பல சுவாக நோய்களுக்கும் அவ்வீதியில் வசிப்பவர்கள் உள்ளாங்கப்பட்டு வருகின்றனர். இது ஒரு கவலை தரக்கூடிய ஒரு விடயமாக காணப்படுகின்றது.

  • கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2016

    S.சஜீத் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பாடசாலை ரீதியா இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (அ)க்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • சாலை விபத்துக்களை தடுப்பதற்காக காத்தான்குடி பொலிஸாரினால் முன்னெடுத்த விழிப்பூட்டல் நிகழ்வு

    S.சஜீத் காத்தான்குடி: சாரதி மற்றும் பாதசாரிகளின் கவனயீனம் காரணமாக, நாளந்தம் எமது பிரதேசத்தில் அதிகரித்து காணப்படும் சாலை விபத்துக்களை கருத்திற் கொண்டு, காத்தான்குடி பொலிஸாரினால் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் (09.08.2016) நேற்றைய தினம் பொதுமக்களுக்கு சாலை விபத்துக்கள் தொடர்பாக விழிப்பூட்டல் நிகழ்வுவோன்று இடம்பெற்றது.

  • மும்மன்ன கிராமத்துக்கு STF பாதுகாப்பு வழங்குக! பள்ளி நிர்வாகம் அவசர வேண்டுகோள்

    என் ஹஸன் குருநாகல்: குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று மாலை உரையாற்றவுள்ள நிலையில், இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்திய போதிலும் மார்க்க சொற்பொழிவை காரணம் காட்டி அதை பொலிஸார் நிராகரித்துள்ளனர். ஆகவே, மும்மன்ன கிராமத்துக்கு இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தருமாறு மும்மன்ன மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை…

  • கடற்கரை வீதியிலுள்ள பாலத்தால் இடம்பெறும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை

    M.T. ஹைதர் அலி காத்தான்குடி: ஓரிரு நாட்களுக்கு முன்பாக காத்தான்குடி கடற்கரை ஓரமாக அமைந்துள்ள வீதியினுடைய பாலத்திற்குள் முச்சக்கர வண்டியுடன் அதில் பயணித்த கர்ப்பிணித்தாயும் விழுந்த செய்தியானது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிற்கு அறிய கிடைத்ததோடு இதனைக்கருத்திற்கொண்டு அவ்விடத்திற்கு நேரில்சென்று நிலைமைகளையும் பார்வையிட்டார்.

  • காணவில்லை

    பொத்துவிலை சேர்ந்த சகோதரர் தாலிம் அவர்களுடைய பை ஒன்று கொழும்பு நகரில் தவறவிடப்பட்டுள்ளது. நேற்று (2016.08.09) மாலை கிரிபத்கொட இருந்து கடுவல செல்லும் 380 ஆம் இலக்க தனியார் பஸ் இல் வைத்தே இந்த கருப்பு நிற பை தவறவிடப்பட்டுள்ளது.

  • விடுதலைக்கு விரும்பாத இலங்கை மருத்துவர் சாமரி லியனகே

    சிட்னி: அவுஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கை பெண் மருத்துவர் தனது சிறை விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.தனது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர், நன்னடத்தையின் அடிப்படையில் குறுகியகால விடுமுறையில் வீடு செல்ல வாய்ப்பு இருக்கின்ற போதும் அதனை அவர் நிராகரித்துள்ளார்.

  • இலங்கையிலிருந்து வந்த இஸ்ரேல் பெண்ணிடம் இருக்கும் குழந்தை யாருடையது?

    டெல் அவிவ்: இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர், டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார். 49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும்.

  • ரயிலில் வந்த 325 கோடி ரூபாய் பணம் கொள்ளை!!

    சென்னை: சேலத்திலிருந்து ரயில் மூலம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளிலிருந்து சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு அனுப்பப்பட்டன. இவை அழிக்கப்படுவதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக 325 கோடி ரூபாய் பணம், 226 பெட்டிகளில் அடைக்கப்பட்டு சேலம் – சென்னை ரயிலில் ஏற்றப்பட்டது.

  • இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கலைஞருக்கு உதவுவோம்

    புல்மோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர், கவிஞர் என்.எம். நஸீர்(கலையன்பன் நஸீர்) இதய நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.இவர் உடனடியாக சத்திரசிகிச்சைக்குள்ளாக்கப்பட வேண்டுமென லங்கா வைத்தியசாலையின் இருதய வைத்திய நிபுணர் டாக்டர் ஜே. ஜயவர்தன சிபாரிசு செதுள்ளார். இதற்காக 450,000 ரூபா தேவைப்படுகின்றது. கமத்தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட இவர், தனது சத்திரசிகிச்சைக்காக பரோபகாரிகள் மற்றும் நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை வேண்டி நிற்கின்றார்.

  • பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கின் 6.2 மில்லியன் ரூபா சொந்த நிதியிலிருந்து புணரமைப்பு செய்யப்பட்ட காத்தான்குடி பாம் வீதி

    ஓட்டமாவடி அஹமட் இர்ஷட் காத்தான்குடி: காத்தான்குடியில் உள்ள சன நெரிசல்மிக்க நகரமான பரீட் நகரில் அமைந்துள்ள பாம் வீதியானது மழை காலங்களில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் மிகவும் சேதமடைந்த நிலையில் மக்கள் போக்குவரத்திற்கு அசெளகரியத்தினை கொடுத்து வந்தது.

  • பெண்களுக்கான பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

    எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந் நபவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுவரும் உஸ்ரா ஸஈதா – பெண்களுக்கான 03 மாத கால பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 03ஆம் தொகுதி மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மஃஹதுஸ் ஸுன்னா அந் நபவிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

←Previous Page
1 … 179 180 181 182 183 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar