-
அவகாசம் கொடுத்திருந்தால் கெட்ட மனிதர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்திருப்பார்கள் : டிரம்ப்
வோஷிங்டன் DC: ஏழு முஸ்லிம் நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கும், அமெரிக்காவின் அகதிகள் திட்டத்திற்கும் தடை விதித்து தான் பிறப்பித்த உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் நியாயப்படுத்தியுள்ளார்.
-
“மலேனா”
– அத்தியா நான் அறிந்து சொந்த நாட்டில் சொந்த ஊரில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் ஆண்கள் உரிய வயதில் திருமணம் முடிக்கும் நிகழ்வை கிட்டத்தட்ட தற்கொலைக்குச்சமமானதாக பார்க்கிறேன்.அது எவ்வகையானது என்பது பற்றி விளக்கிக்கொண்டிருக்க முடியாது.
-
முஸ்லிம்கள் அவசர முடிவுக்கு வரவேண்டாம் என தீயணைப்பு உயரதிகாரி வேண்டுகோள்
விக்டோரியா: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்று (28) தீக்கிரையாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்டுவதோடு, தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானில் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை!!
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்க குடிமக்களுக்கு தடை விதித்துள்ளதன் மூலம் அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்கியுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அந்நாட்டிற்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 7 நாடுகளுக்கு அதிரடியாக தடை விதித்தார்.
-
நவீன முறைப்படுத்தப்படும் காத்தான்குடி ஆயுர்வேத வைத்தியசாலை
எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: மஞ்சந்தொடுவாயில் அமைந்திருக்கும் ஆயுர்வேத வைத்தியசாலையினை நவீனத்துவப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருன்றன. அதற்காக கடந்த வருடம் 2016ஆம் ஆண்டு மத்திய சுகாதார அமைச்சினால் 18 கோடி 50 இலட்சம் ரூபா நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பிக்க முற்பட்டபொழுது அதனை அமைப்பதற்கான காணி விடயத்தில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, சில வேளைகளில் இத்திட்டம் இல்லாமல் நின்றுவிடுமோ என்ற நிலைமை காணப்பட்டது.
-
இலங்கையில் அறிமுகமாகும் 1000cc ரக கார்! ரூபாய் 3,495,000/-
கொழும்பு: இலங்கையின் வாகன சந்தையில் முதன் முறையாக டோயோட்டோ நிறுவனத்தின் 1000cc ரக கார் அறிமுகமாகவுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தன. மிகவும் குறைந்த விலையில் இந்த கார் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ‘wigo” என பெயரிடப்பட்டுள்ள இந்த காரினை ஆறு நிறங்களில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
“மரணிப்பதற்கும், தப்பிக் கொள்ளவும் தயாராகிக் கொள்ளுங்கள்”- சரத் பொன்சேகா
கொழும்பு: மரணிப்பதற்கும், பயங்கரங்களுக்கு முகம் கொடுக்கவும் தயாராகிக் கொள்ளுங்கள் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். மகிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம் தொடர்பில் நேற்று ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
-
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற மலேசிய கப்பல் மாயம்: தேடும் பணி தீவிரம்
கோலாலம்பூர்: 31 நபர்களை ஏற்றிக் கொண்டு மலேசிய கடற்பகுதியை விட்டு சென்ற ஒரு கப்பல் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் கடல்சார் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போயுள்ள இந்த கப்பலில் பயணம் செய்தவர்களில் குறைந்தது 28 சீன சுற்றுலா பயணிகளும் அடங்குவர்.
-
அபுதாபி இளவரசரின் பிரமிக்க வைக்கும் சொகுசு விமானம் (காணொளி)
டெல்லி: இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசரின் தனி விமானம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்த அவருக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார், அதன் பின்னர் அவரது தனி விமானம் டெல்லி பாலம் விமான நிலையத்தின் டெக்னிக்கல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.அந்த விமானத்தில் உள்ள வசதிகள் பிரமிக்க வைக்கிறது. அட்டகாசமான மெஜந்தா வர்ணத்தில் விமானத்தின் உள்பகுதி ஆழகாக இன்டீரியர் டெக்கரேஷன் செய்யப்பட்டுள்ளது.
-
ரஷ்ய போர்க்கப்பல் அத்துமீறினால் பதிலடிக்குத் தயாராக நிறுத்தப்படும் பிரித்தானியாவின் கப்பல்
லண்டன்: ரஷ்யாவுக்கு சொந்தமான விமான தாங்கி போர் கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் பிரித்தானியாவை கடக்கும்போது பிரித்தானியா மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பிரித்தானியாவின் போர் கப்பல் மற்றும் மூன்று போர் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
-
“ஓரினத் திருமணம் போன்ற புதிய திட்டங்களால் இலங்கையின் கலாசாரத்தை அழிக்க வேண்டாம்”-மஹிந்த
நுகேகொடை: தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற போது கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு இப்போது நாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பை கொண்டு வந்து விட்டார்கள். எனது ஆட்சி காலத்தில் பாரிய அளவு கடன் பெற்றோம் என்று கூறி வருகின்றார்கள். ஆனால் இப்போதைய ஆட்சியில் செய்தது ஒன்றும் இல்லை.
-
மட்டக்களப்பிலேதான் என்னுடைய சேவைக்காலத்தில் நான் மிக மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளானேன். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ்
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மட்டக்களப்பு: நான் வட மாகாணத்தில் வவுனியாவில் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வேளையில் தனக்கு எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்படவில்லை. முக்கியமாக கூறுவதாயின் அரச அதிகாரிகள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் என அனைவரும் தனது பணியினை மேற்கொள்வதற்கு நூறு வீதமான ஒத்துளைப்புக்களை வழங்கியிருந்தார்கள்.