WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “ஞானசார தேரர் மூன்று பெண்களை வைத்துள்ளார்”

    கொழும்பு: பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூன்று பெண்களை வைத்துள்ளதாக மத சுதந்திரத்திற்கான அமைப்பின் பௌத்த தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேவஹூவே சந்திரானந்த தேரர், ஹீனடியே சமித்த நாயக்க தேரர், மகல்கடவல புண்ணியசார தேரர் ஆகியோர் இதனை கூறியுள்ளனர்.

  • காத்தான்குடியில் இன்று திருமணநாள்!

    நமது நிருபர் காத்தான்குடி: நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் காத்தான்குடிக்கு இன்னும் நிறைவடையவில்லை. பண்டைய கால காத்தான்குடிக்கு திருமணவரலாறு என்று தனித்தன்மையுண்டு. அவற்றுள் திருமணத்துக்கான காலம் நோன்புப் பெருநாள் மாதமும், ரபியுல் அவ்வல் எனும் “கொண்டாட்ட” மாதமுமாகும். இவ்விரண்டு மாதங்களிலும் காத்தான்குடியில் திருமணங்கள் அதிகமாக இடம்பெறும்.

  • வைத்தியர்களின் தவறினால் பிரித்தானியாவில் பட்டம் பெற்ற யுவதி பலி

    கொழும்பு: 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ரொமாலி டி சில்வா என்ற பெண் கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.இரு மாதங்களுக்கு முன்னர் மரணம் ஏற்பட்ட போதும், தற்போது ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியாகி உள்ளது. ரொமாலி, ப்ரென்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் நிறைவேற்று பதவியில் செயற்பட்டுள்ளார். அவர் உயிரிழக்கும் போது அவரது வயது 25 ஆகும்.

  • “ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகமானது”

    லண்டன்: ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகம் என்றும், தற்போது அது 200 கோடி பயனீட்டாளர்களை எட்டிவிட்டதாகவும் அந்த சமூக ஊடக வலைத்தளம் பறைசாற்றிக்கொள்கிறது. தன்னுடைய தளத்தில் பிரசுரமாகும் மிகப்பெருமளவிலான விஷயங்களை நெறிப்படுத்த வேண்டிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில், இந்தக் மைல்கல்லை இந்த இணையப் பெரு நிறுவனம் அடைந்துள்ளது.

  • லசித் மலிங்கவுக்கு ஒரு ஆண்டு தடை

    கொழும்பு: இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை பேசியதாக லசித் மலிங்கவுக்கு ஒரு ஆண்டு தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெயசேகரா இலங்கை அணி வீரர்கள் சம்பியன்ஸ் தொடரின் போது மிகவும் குண்டாக இருந்ததாக விமர்சனம் செய்திருந்தார்.

  • சிறைப்படுத்தப்பட்ட “தௌஹீத்”

    AK-77 காத்தான்குடி: 2000ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தௌஹீத் எழுச்சி காத்தான்குடியில் உருவானது. மத்ரஸாக்களில் ஓதும் மாணவர்கள் தொடக்கம், அரபு நாடுகளில் பட்டம் பெற்ற மகான்கள் வரை தௌஹீத்வாதிகளாக தங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாய் இருந்தனர். மத்திய கிழக்கிற்குச் சென்றுவந்தவர்களும், பொதுவாக சிந்தித்து நடப்பவர்களுள் பலரும் தௌஹீதில் இணைந்தனர்.

  • ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

    நமது நிருபர் ரெடிங்: ஐக்கிய இராச்சியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்கள் செரிந்துவாழும் இடங்களில் ஒன்றான ரெடிங் நகரில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை காலை 9 மணிக்கு இடம்பெற்றது. மேகக்கூட்டமும் இதமான தென்றலுக்குமிடையில் அதிகமான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

  • “இளவரசி டயானாவைக் கொன்றது நானே”

    லண்டன்: நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் தான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் என பிரித்தானிய உளவு அமைப்பின் முன்னாள் முகவரான ஜோன் ஹோப்கின்ஸ்  தெரிவித்துள்ளார். தன்னுடைய பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத கட்டார்

    டோஹா: கட்டாரிலுள்ள தனது இராணுவத் தளத்தை மூடுவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையினை துருக்கி நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இராணுவத் தளம் வளைகுடாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அல்-ஜசீராவை மூடவேண்டும்: கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை

    குவைட்: இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கத்தார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளன. 3 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அடங்கும்.

  • ஐக்கிய ராச்சியத்தில் அதி வெப்பம்: மின்விசிறிகளுக்குத் தட்டுப்பாடு!

    – MJ லண்டன்: ஐக்கிய ராச்சியத்தில் தற்பொழுது கோடைகாலம் நிலவி வருகிறது. வெப்பநிலை 31 செல்சியஸ் வரைக்கும் சென்றுகொண்டிருக்கின்றது. இதன்காரணமாக வீடுகளில் அதிவெப்பம் நிலவுவதால், குறிப்பாக இரவு வேளைகளில் வீடுகளில் மின்விசிறிகள் இல்லாமல் வசிக்க முடியாத நிலை அங்கு காணப்படுகிறது.

  • மிரிஹான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

    கொழும்பு: தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மிரிஹானவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதி ஒருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

←Previous Page
1 … 119 120 121 122 123 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar