-
ஜூனைத் ஆசிரியர் காலமானார்
காத்தான்குடி: காத்தான்குடி 3 ஹூதா வீதியைச் சேர்ந்த எம்.ஐ. ஜூனைத் ஆசிரியர் இன்று மட்டு போதனா வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் மட்/ பூநொச்சிமுனை இக்றாஹ் வித்தியாலயத்தின் விஞ்ஞானப்பாட ஆசிரியரும், காத்தான்குடி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவார்.
-
காத்தான்குடியில் முப்பெரும் விழா
– எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் பூரண முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் அடிக்கல் நடும் வைபவமும் 2017.09.06 ஆந்திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-
130க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த ப்ளு வேல் சிறுமி கைது
மொஸ்கோ: உலகளாவிய ரீதியில் 130க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த ப்ளு வேல் விளையாட்டில் பின்னணியிலிருந்ததாக சந்தேகிக்கப்படும் சிறுமி ஒருவரை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர். 17 வயதான சிறுமி ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும், அத்துடன் மொஸ்கோ அருகே வைத்து இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
-
எரியும் மியன்மார் முஸ்லிம்களும் நகைப்பிற்கிடமான முகநூல் போராட்டமும்….
ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வெகுளிப்போராட்டங்கள் எத்தகைய பயனையும் தராது. கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் எமது தளத்தில் வெளியான ஆரோக்கியமான இக்கட்டுரை இன்றைய முகநூல் போராளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்குமாக மீள் பிரசுரிக்கப்பபடுகிறது. – AK-48 காத்தான்குடி: மியன்மார் முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்படுவது 2012 இல் இருந்துதான் முகநூல் வாயிலாக எமக்கு தெரியக்கிடைக்கிறது. இருந்தாலும் 60 வருடங்களாக அங்குள்ள முஸ்லிம்கள் அழித்து, எரித்தும் போதாதென்று சொந்த மண்ணை விட்டும் அடித்து விரட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் அங்குள்ள பௌத்த பேரினவாதிகளால்.
-
மஹ்ரூப் ஆசிரியர் காலமானார்
காத்தான்குடி: காத்தான்குடி 3 கடற்கரை வீதியைச் சேர்ந்த விஞ்ஞானப் பாட ஆசிரியர் எம். மஹ்ரூப் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. காத்தான்குடியின் புகழ்பெற்ற விஞ்ஞானப்பாட ஆசிரியராகத் திகந்த அவரிடம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்விகற்றிருக்கின்றனர்.
-
“இரசிகர்களால் இனிமேல் இடைஞ்சல்கள் ஏற்படாது என்பதை இலங்கை கிரிக்கட் உத்தரவாதமளிக்க வேண்டும்” ஐ.சி.சி
MJ கொழும்பு: எதிர்வரும் 31ம் திகதி கொழும்பில் இடம்பெறும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மைதானத்தில் இலங்கை இரசிகர்களால் போட்டிக்கு இடைஞ்சல்கள் ஏற்படாது என்பதை இலங்கை கிரிக்கட் சபை உத்தரவாதமளிக்க வேண்டும் என ஐ.சி.சி. கோரிக்கை விடுத்துள்ளது.
-
பலாத்கார சாமியார் ரஹீம் ஆசிரமத்திலிருந்து 18 சிறுமிகள் மீட்பு
மும்பை: தேரா சச்சா சவுதா’ என்றமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங். சில நாட்களுக்கு முன்பு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். 1000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இவரது தலைமையகத்தில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். தற்சமயம் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்
MSM. ஸாஹிர் கொழும்பு: முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் 29-08-2017 இரவு 7.15 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” மரணிக்கும் போது அவருக்கு வயது 80.
-
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கிழக்கு முதலமைச்சர் பதில்
CM Media காத்தான்குடி புதிய நகர சபைக்கட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கிழக்கு முதலமைச்சர் பதில் (வீடியோ) இணைக்கப்பட்டுள்ளது.
-
பள்ளிவாயல்கள் மீது தொடரும் தாக்குதல்கள்
குருநாகல்: குருநாகல் மாவட்டம் நாரம்பல பிரதேசத்திலே ஒரு வார காலத்திற்குள் மூன்று பள்ளிவாயல்கள் நள்ளிரவு வேளைகளில் தாக்கப்பட்டுள்ளதாக பொலீஸில் முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. கடந்த புதன்கிழமை நள்ளிரவு இரு வழிபாட்டு தலங்கள் மீது கல் வீச்சு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் வழிபாட்டு தலமொன்றின் உள்ளே சிறு நீர் கழித்தும் அசிங்க படுத்தியுள்ளனர்.
-
பொறியியலாளர் ஷிப்லி பாறுக் சுகயீனம் காரணமாக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதி
– எம்.ரீ. ஹைதர் அலி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு ஏற்பட்ட சிறு சுகயீனம் காரணமாக மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.