WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பொது பல சேனா எனும் இனவாத அமைப்பை தடை செய்யக் கோரி கல்முனை மாநகரசபையில் கண்டனப் பிரேரணை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: தற்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இயங்கி வரும் பொது பல சேனா எனும் இனவாத அமைப்பை தடை செய்யக் கோரி கல்முனை மாநகர சபையில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் கண்டன பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • கல்முனையில் தனியார் பஸ் உரிமையாளர்களே தங்களது பஸ் வண்டிகளுக்கான ஆசனப்பதிவினை மேற்கொள்ள வேண்டும்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகரத்தில் காணப்படுகின்ற தனியார் பஸ் உரிமையாளர்களே தங்களது பஸ் வண்டிகளுக்கான ஆசனப்பதிவினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • மிஹின் லங்கா அலுவலகத்துக்குள் புகுந்த மாணவர்கள் கைது

    -MJ திருச்சி: இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாடு மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு நிமித்தம் கல்லூரிகள் காலவரையரையன்றி முடப்பட்டிருந்தன. எனினும் காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட  நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் கறுப்பு பட்டி அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர்.

  • ஒரு தொகுதி கராத்தே உடை மற்றும் கை உறை வழங்கி வைப்பு

    கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் கல்முனை சாஹிறா தேசிய பாடசாலைக்கு ஒரு தொகுதி கராத்தே உடை மற்றும் கை உறை என்பன நேற்று (04.03.2013) முதல்வர் செயலகத்தில் வைத்து  வழங்கிவைக்கப்பட்டது.

  • மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா-2012

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மூன்றாம் குறிச்சி ஊர்வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இயங்கும் அல்-குர்ஆன் மத்ரஸாவில் இருந்து கடந்த    ஆண்டு அல்-குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்ஷா அல்லாஹ் 05.04.2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு பள்ளிவாயலில் இடம்பெறும் என பள்ளிவாயல் நிருவாக  சபை உறுப்பினரும், விழா ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவருமான மௌலவி. அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) தெரிவித்தார்.

  • ‘எனது பதவிக் காலத்தில் கிண்ணியாவை பசுமையானதாக மாற்றுவேன்’ – விசேட கலந்துரையாடலில் நகரபிதா ஹில்மி

    – ரைஸ்   கிண்ணியா: திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரமானது கடல் நீரேரிகளையும் பசுமை வயல்களையும் கொண்டு அழகு நிறைந்ததாக சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடியதுமான அமைப்பைக் கொண்டுள்ளதால் அவற்றை கருத்தில் கொண்டதான கலந்துரையாடல் கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மி ஏற்பாட்டில் நகரபிதா தலைமையில் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

  • காலத்தின் தேவைகளில் ஒன்றாக காத்தான்குடியில் உதயமான முதலாவது பெண்களுக்கான பள்ளிவாயல்

    -MJ இலங்கையில் 100 வீதம் முஸ்லிம்கள் தனித்து வாழும் சிறப்புப் பெற்ற முஸ்லிம் நகரமாக விளங்கும் காத்தான்குடியில் சென்ற வாரம் 31-03-2013ல்  ‘மஸ்ஜிதுல் ஸெய்யிதா பத்ரிய்யா அகமட்’ எனும் பெண்களுக்கான ஓர் அழகிய பள்ளிவாயல் திறக்கப்பட்டது.

  • ஊடகங்களை நசுக்குவதற்கு எடுக்கப்படும் சம்பவங்கள் வண்மையாக கண்டனத்துக்குரியது- அமைச்சர் றிசாத் பதியுதீன்

    –  இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இந்த நாட்டிலும், சர்வதேசத்திலும் வாழும் மக்கள் அன்றாட நடப்புக்களை அறிந்துகொள்ளும் முக்கிய சாதனமாக ஊடகங்கள் காணப்படுவதால் அதனை நசுக்குவதற்கு எடுக்கப்படும் சம்பவங்கள் வண்மையாக கண்டனத்துக்குரியது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

  • கிழக்கு மாகாண அமைச்சர் JICA இணைப்பாளருடன் கலந்துரையாடல்

    – பஹ்மியூஸூப் திருகோணமலை: கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டில் கீழ் மூவின மக்கள் வாழும் கிராமங்களை இனங்கண்டு அக்கிராமங்களை JICA  திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இலங்கை நாட்டிற்கான JICA இணைப்பாளருடன் கலந்துரையாடல் ஒன்றை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமான்லெப்பை மேற்கொண்டிருந்தார்.

  • அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் அரசுக்கு வழங்குகின்ற ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் – பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    -பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் அரசுக்கு வழங்குகின்ற ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஜம் இய்யத்துல் உலமாவே பதில் சொல்ல வேண்டும் : அசாத் சாலி

    கொழும்பு: முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை நிறைவுபெற்றுவிட்டதால் பள்ளிகளில் குனூத் ஓதுவதை நிறுத்துமாறு ஜம் இய்யத்துல் உலமாவும் அதன் பொதுச் செயலாளரும் அறிக்கைவிட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எனவே அனைத்துப் பள்ளிகளிலும் குனூத்தை ஓத வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.

  • அரசாங்கப் பாடசாலைகளில் முதலாந்தவணைப் பரீட்சை விடுமுறை ஏப்ரல் 05ம் திகதி ஆரம்பம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தமிழ் சிங்கள அரசாங்கப் பாடசாலைகளில் முதலாந்தவணைப் பரீட்சை விடுமுறை எதிர்வரும் 05ம் திகதி வியாழக்கிழமை கொடுக்கப்பட்டு மீண்டும் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 22ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

←Previous Page
1 … 1,103 1,104 1,105 1,106 1,107 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar