Category: Your Kattankudy
-
கொரில்லாவை சுட்டு விடுவது என்ற முடிவு சரியே: சின்சினாட்டி வனவிலங்கு பூங்கா இயக்குனர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி வனவிலங்கு பூங்காவில், கொரில்லா குரங்கொன்று வைக்கப்பட்டிருந்து அடைப்பில், நான்கு வயது சிறுவன் ஒருவன் விழுந்து விட்டதால், அந்த கொரில்லாவை சுட்டு விடுவது என்ற தனது முடிவில் நிலைத்து நிற்பதாக இந்த பூங்காவின் இயக்குனர் கூறியுள்ளார்.ஹாரம்பே என்ற அந்த மேற்கத்திய தாழ்நில சில்வர்பேக் கொரில்லா கிளர்ச்சி மற்றும் குழப்பம் அடைந்ததாகவும் இருந்ததால், சிறுவனின் உயிரை காப்பாற்ற தனது முடிவு உதவியதாக சின்சினாட்டி பூங்காவின் இயக்குனர் தெய்ன் மெய்னார்ட் தெரிவித்துள்ளார்.
-
‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டம்: 6500 பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விண்ணப்பிப்பு
கொழும்பு: மேல் மாகாணத்தில் வெ ள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு புனித ரமழான் மாதத்தில் இடையூரின்றி நோன்பு கடமைகளை மேற்கொள்வதற்கு கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றம் நடைமுறைப்படுத்தியிருக்கும் ‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்திற்கு 6 ஆயிரத்தி 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
ஹிஸ்புல்லாஹ் ராஜினாமா??
கொழும்பு: புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. தனக்கான பொறுப்புகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படாமை மற்றும் அமைச்சு செயல்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்த நிலையில் அவர் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
-
மட்டக்களப்பு பல்கலைக்கழக சரீஆ பாடத்திட்டம், உம்முல் குறா பல்கலைக்கழக பேராசிரியரால் இராஜாங்க அமைச்சரிடம் கையளிப்பு.
எம்.ரி.எம்.யூனுஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கான சரீஆ பாடத்திட்டத்தை உருவாக்க மக்காஹ் உம்முல் குறா பல்கலைக்கழக பேராசியர் குழுவிடம் கடந்த மாதம் சவுதி அரேபிய விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்: அலெஸ்டர் குக் சாதனை
டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு லண்டன்: உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், மிக இளவயதில் 10,000 ஓட்டங்களை எடுத்தவர் எனும் பெருமையை இங்கிலாந்து அணியின் தலைவர் அலெஸ்டர் குக் பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டாம் டெஸ்ட் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற போது இந்த சாதனையை அவர் படைத்தார்.
-
“கருத்தடைகளை நிராகரித்து நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்”- ஏர்துவான்
அங்காரா: துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் முஸ்லீம்களை கருத்தடைகளை நிராகரித்து நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். துருக்கி நாட்டு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பில் பேசிய எர்துவான் எந்தவொரு முஸ்லீம் குடும்பமும் குழந்தை பிறப்பு கட்டுப்பாடுகளை பற்றி யோசிக்க கூடாது
-
“லண்டன் மேயர் ஒரு பெருமைக்குரிய இஸ்லாமியர்”: பிரதமர் கமெரூன் புகழாரம்
லண்டன்: லண்டன் மேயரான சாதிக் கான் ஒரு பெருமைக்குரிய இஸ்லாமியர் என பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன் புகழாரம் சூட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா ஒரு உறுப்பின நாடாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் பிரதமர் கமெரூன் ஒரு ஊர்வலத்தை இன்று ஏற்பாடு செய்துள்ளார்.
-
முப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை நீக்கம்
திருகோணமலை: முப்படைகளின் தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமதுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ஆம் தேதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியொருவர் மீது முதலமைச்சர் கடும் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியிருந்தார்.
-
கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு தையல் பயிற்சி நிலையங்கள் அமைப்பதற்கு அமைச்சர் றிசாத் முடிவு
மடவளை: கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதற்கு அமைச்சர் றிசாத் முன் வந்துள்ளதாக மடவளை வை.எம்.எம்.ஏ. தலைவர் ஏ.எம்.சலாஹுதீன் தெரிவித்தார். அக்குரணை, கெலியோயா, கண்டி, கம்பளை ஆகிய இடங்களில் இந்த தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதாக அமைச்சர் தெரிவித்ததாக வை.எம்.எம்.ஏ. தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
-
கிழக்கு முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பாடசாலைகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகள்
எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடி ஸாவியா வித்தியாலய வகுப்பறை கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வு வித்தியாலய அதிபர் இஸ்ஸதுல் நயீமா அப்துல் ஸலாம் தலைமையில் இன்று 30.06.2016 திங்கட்கிழமை இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் 35 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வகுப்பறை கட்டடத்திற்கான ஆரம்ப நிகழ்வு வித்தியாலயத்தில் நடை பெற்றது.
-
“முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளது ஹக்கீமின் அறிவிப்பு”- ஹிஸ்புல்லாஹ்
கொழும்பு: சம்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளமை முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.