Category: Your Kattankudy
-
மு.கா தலைவர் பணம் பெற்றாரா அல்லது கொள்ளையடித்தாரா? இதனை கூறும் உத்தமர்கள் யார்?
முகம்மத் இக்பால், சாய்ந்தமருது கடந்த காலத்தில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் தலைவர் தேசிய கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதாக முஸ்லிம் காங்கிரசின் அதிருப்தி குழுவினரால் அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த குற்றச்சாட்டினை முதன் முதலில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் பசீர் சேகுதாவூத் அவர்களே முதலில் ஆரம்பித்துவைத்தார். முஸ்லிம் காங்கிரசை அழிக்க துடிக்கும் சக்திகளுக்கு இந்த குற்றச்சாட்டானது பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று தலைவர் ஹக்கீம் மீது வசைபாடுவதுக்கு இது துரும்பாக அமைகின்றது.
-
உலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள்
“வெடிகுண்டுகளின் தாய்” என்று கருதப்படும் வெடிகுண்டை அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் பயன்படுத்தி, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை பயன்படுத்தப்படாத, தன்னிடமுள்ள அணு ஆயுதமில்லாத மிகப்பெரிய வெடிகுண்டை பயன்படுத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்திருக்கிறது.
-
இரு ஹரம் ஷரீப்களில் ரமழானில் இஃதிகாப் இருப்பதற்கான பதிவுகள்
புனித மக்காவில் இருந்து, மெளலவி.அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)ஜே.பி, காத்தான்குடி- ரமழான் மாதத்தில் இஃதிகாப் இருக்க விரும்புகிறவர்கள் அதற்கான வழிமுறைகள், வசதிகள் மற்றும் பதிவு செய்யும் வழிமுறைகள் அறிந்துக் கொள்ள ஹரமைன் ஷரீஃபின் விவகாரங்களை கவனிக்கும் துறை, இணைய தளத்தில் அதற்கான வசதி செய்துள்ளது.
-
இளம் விஞ்ஞானிளை உருவாக்கும் ரோபோடிக் (Robotic) இரண்டு நாள் பயிற்சி முகாம்!
S.சஜீத் காத்தான்குடி: தொழிநுட்பத்திறன் வளர்ந்து செல்லும் இக்கால கட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றம் இன்னும் பின் தங்கியதாகவே செல்கின்றன என்பதனை கருத்திற் கொண்டு மாணவர்களின் கல்வி அறிவு மற்றும் தொழிநுட்பத்திறன் என்பவற்றினை வளர்த்துச் செல்வதற்காக வேண்டி உருவாகிய பல்கலைக்கழக மற்றும் உயர்கல்விமானவர்கள் ஒன்றினைந்த (TEAM-Together Everyone Achieve More) பல்கலைக்கழக மற்றும் உயர்கல்விக்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மண்ணில் இளம் விஞ்ஞானிளை உருவாக்கும் விசேட ரோபோடிக் (Robotic) முகாம் ஒன்று கடந்த (11,12.04.2017) ஆகிய இரு தினங்களாக பாடசாலை…
-
பெற்றோரின் எதிர்ப்பை மீறி எட்டு மாதக் குழந்தையைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி!
லண்டன்: பிறக்கும்போதே மிக அரிதான மரபணுத் தாக்கத்தால் பீடிக்கப்பட்ட சார்லி கார்ட் என்ற ஆண் குழந்தை, பிறந்தது முதல் கடந்த எட்டு மாதங்களாக செயற்கை உயிர்காப்புக் கருவியின் உதவியுடன் உயிர்வாழ்ந்து வருகிறது. மருத்துவ ரீதியாக, இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை அந்நோயில் இருந்து மீட்க முடியாது. நோயாளி உயிருடன் மட்டுமே இருப்பார். வேறெந்த அசைவும் அவரிடம் இருக்காது.
-
இலங்கைக்கு 9 இலட்சம் கோடி கடன்: ஒருவருக்கு 5 இலட்சம் சுமை!!
கொழும்பு: நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 5 இலட்சம் வரையில் உலக வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். 9 இலட்சம் கோடிகள் என்பது சாதாரண தொகை அல்ல. இதனை நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செலுத்துவதற்கு முயல வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படக்காரணம் தேவையற்ற செலவுகளே.
-
மட்டக்களப்பு, திருகோணமலை பிரதேசங்களில் ஏற்படப்போகும் காலநிலை மாற்றம்
மட்டக்களப்பு: நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் பலத்த மழையுடன் கடுங்காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
-
லண்டனிலிருந்து ஈரான் வரை: தனியொரு பெண்ணின் மிதி வண்டிச் சவாரி!
லண்டன்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து ஈரானுக்கு ஓராண்டு காலம் மிதிவண்டியில் ரெபேக்கா லோயிஸ் 7 ஆயிரம் மைல் பயணிக்க தொடங்கியபோது, அவருக்கு பித்துப் பிடித்துவிட்டது என்றே அவருடைய நண்பர்கள் நினைத்தனர். எகிப்தில் இருந்து துருக்கி, தெற்கிலிருந்து ஓமனுக்கு விமானத்தில் செல்வதற்கு முன்னால் எகிப்து மற்றும் சூடான் என்று மிதிவண்டியில் பயணித்த அவர், ஈரானில் தன்னுடைய பயணத்தை நிறைவு செய்தார்.
-
ஹிஸ்புல்லாஹ்வின் “சேவைக்காலம்” குறைக்கப்பட்டது ஏன்…?
AK-99 காத்தான்குடி: கிழக்கிலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதிகளுள் ஒருவரும், ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருட அரசியல் வாழ்க்கையின் தொகுப்பு “கிழக்கு வாசல்” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (10) காத்தான்குடியில் இடம்பெற்றது.
-
கல்லடி, அக்குரணை பகுதிகளில் இன்று சூரியன் உச்சம்
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று (10) பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
-
நெருக்கடிகளை அதிகரித்துக்கொள்ள போகிறதா கிழக்கு மாகாண சபை
கடந்த காலத்தில் கிழக்கு மாகாண அமைச்சினால் தொண்டர் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டமையை நாம் யாவரும் அறிவோம். முதலில் இதற்கு நான் கிழக்கு மாகாண அமைச்சிற்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இருந்த போதிலும் இவ் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொண்ட ஊழியர்கள் தற்போது கவலையில் இருப்பதையிட்டு நான் மனம் வருந்துகின்றேன்.
-
ராமர் – சீதை குறித்து சமூக வலைத்தளத்தில் ஆட்சேபகரமான கருத்தால் மதக்கலவரம்
பத்கர்: ராமர் – சீதை குறித்து சமூக வலைத்தளத்தில் ஆட்சேபணக்குரிய கருத்து வெளியானதை அடுத்து, ஒரிஸா மாநிலத்தின் பத்கர் நகரில் மதக்கலவரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.கலவரம் மற்றும் வன்முறையில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், பல இடங்களில் கொள்ளையடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.