Author: yourkattankudy.com
-
கென்யாவில் ஷெபாப் போராளிகள் துப்பாக்கிச்சூடு: 40 பேர் பலி, 150 பேர் காயம்
– SHM நைரோபி: கென்யாவில்வர்த்தக தொடர் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியாகினர். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வர்த்தக தொடருக்குள் நேற்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 40பேர் பலியாகினர். 150 பேர் காயம் அடைந்தனர்.
-
தேர்தல் முடிவுகள் பதிவேற்றம்: வாசகர்களுக்கு நன்றிகள்
காத்தான்குடி: நேற்று சனிக்கிழமை (21-09-2013) இடம்பெற்ற வடக்கு, மத்திய மற்றும் வடடேல் மாகாணசபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளை நேற்றிரவிலிருந்து உடனுக்குடன் பதிவேற்றி வந்தோம். தேர்தல் முடிவுகளுடன் எம்மோடு இணைந்திருந்த உள்ளுர் மற்றும் கடல்கடந்த பல்லாயிரம் வாசகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
-
ஐரோப்பா கிண்ணம் 2020 போட்டிகளை நடாத்த பல நாடுகள் பலத்த போட்டி
லண்டன்: ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் 54 உறுப்பு நாடுகளில் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. பாரம்பரியமாக இந்தப் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளால் நடத்தப்படும். ஆனால், 2020 ஆம் ஆண்டுப் போட்டிகள் ஐரோப்பாவின் 13 நாடுகளில் பகிர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வட மாகாணம்: சவால்களைக் கடந்த சரித்திர வெற்றியில் தமிழரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்: பல அச்சுறுத்தல்களையும், சிரமங்களையும் கடந்து, வட மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 30 ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக) கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது. இதுதவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.