Day: July 15, 2014
-
அல் மனார் கல்வி கலாச்சார சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் கல்வி கலாச்சார சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு நேற்று அல்மனார் வளாகத்தில் இடம்பெற்றது.
-
பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் தண்டனை!
கொழும்பு: வெற்றிலை சாப்பிட்டு பொது இடங்களில் துப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. சுற்றாடல் சட்டத்தின் கீழ் அத்தகைய நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து தண்டம் அறவிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
-
காஸா மீதான தாக்குதல்: ‘மேற்குலகம் மெளனம் காப்பது ஏன்’?
கொழும்பு: இஸ்ரேல் பலஸ்தீன காஸா பகுதியில் மேற்கொள்ளும் விமானத் தாக்குதல் மிலேச்சத்தனமானதென தேசிய சுதந்திர முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது. இத்தாக்குதல்களால் பலஸ்தீன அப்பாவி மக்கள் 168 பேருக்கு மேற் பட்டோர் பலியானதாக ஐ. நா.பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு சர்வதேச பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.
-
கட்டார் விமான சேவையையும் முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் (?)
– எம்.ஐ.எம். இஸ்ஸத், டோஹா டோஹா: இஸ்ரேலின் டெல்அவிவ், டுரா அரங்கில் பலஸ்தீனயச் சிறுவர்களின் விளையாட்டு முகாம் அமைந்திருக்கின்றது. இங்கு சர்வதேச விளையாட்டுக் கழகங்கள் வருடாந்தம் வந்து இச்சிறார்களை ஊக்கிவித்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கும் வந்து செல்வர்.