-
1600 பேருக்கு பட்டமளிப்பு
– பா. திருஞானம் கொழும்பு: மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபடிப்பினை மேற்க் கொண்டு நிறைவு செய்த 1600 கல்வி முதுதத்துவமாணி, கல்வி முதுமணி கல்வி, முகாமைத்துவ விஞ்ஞான முதுமாணி மற்றும் கல்விமாணி பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கும் விழா தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி ஜே.குணசேகர தலைமையில் கொழும்பு பண்டாராநாக்க ஞாபகார்த்த சர்வேதேச மாநாட்டு மண்டபத்தில் (28) நடைபெற்றது.
-
“என் வாழ்நாள் முழுவதும் வருந்தும் செயல்” : கண்ணீருடன் மன்னிப்பு கோரிய ஸ்மித்
போர்ட் எலிசபெத்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தனது பங்கு குறித்து மன்னிப்பு கோரிய முன்னாள் ஆஸ்திரேலிய தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் சிந்தினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், டேவிட் வார்னர் மற்றும் கேமரன் பேன்கிராஃப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தடை விதித்தது.
-
ஏப்ரல் 3ம் திகதியும் பிரித்தானிய முஸ்லிம்களும்
MJ லண்டன்: “Punish a Muslim day” எனும் ஏ4 அளவில் அச்சடிக்கப்பட்ட எச்சரிக்கை ஒன்று பிரித்தானியாவில் முஸ்லிம்கள் செரிந்து வாழும் லண்டன், செப்ஃபீல்ட், பிரட்ஃபேர்ட், லெஸ்டர் மற்றும் கார்டிஃப் ஆகிய நகரங்களில் உள்ள சில வீடுகளில் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலரது வீட்டுக் கதவின் ஊடாக போடப்பட்டிருப்பதாகவும் தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக பிரித்தானிய பொலிஸார் கூறுகின்றனர்.
-
கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை – பாகம் 1
வை எல் எஸ் ஹமீட் மஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த இனவன்கொடுமை வரலாற்றில் முஸ்லிம்களை 95% மேல் ஒன்றுபடவைத்து நல்லாட்சி மலரக்காரணமாயிற்று. நாம் ஆட்சியைக் கொண்டுவந்ததற்கு மேலதிகமாக வல்ல இறைவனின் கருணை, இந்த ஆட்சியை நமது முட்டில் தங்கியிருக்கவும் செய்தான்.
-
மியான்டட் முதல் தினேஷ் கார்த்திக் வரை
பரபரப்பான கிரிக்கெட் ஆட்டம். ஒரு பந்து மீதமுள்ளது. வெற்றிபெறுவதற்கு 6 ரன்கள் அடிக்க வேண்டும். கடைசி பந்து சிக்ஸர் அடிக்கப்பட்டால், அதுதான் அந்த ஆட்டத்தின் மிக முக்கிய தருணமாக அமையும். இத்தகைய பரபரப்பான தருணங்களில் சிக்ஸர் அடித்து தங்கள் அணியை வெற்றி பெற வைத்தவர்கள் பற்றிய தகவல்கள் இவை. ஜாவிட் மியான்டட்
-
சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..!
சூரிச்: சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த சனிக்கிழமை சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக சிறப்பு விருந்தினர் திரு. சிவஸ்ரீ த.சரஹணபவானந்த குருக்கள் (பிரபல ஆன்மீக குரு -ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் -சூரிச்) வாசலில் மங்கள விளக்கை ஏற்றி வைக்க, அதனைத் தொடர்ந்து ஒன்றிய முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் இணைந்து மங்கள விளக்கேற்றலை நடத்திய…
-
வாஷிங்டன் சுந்தர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
கொழும்பு: கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார் தமிழகத்தை சேர்ந்த 18 வயது சகலதுறை வீரர்வாஷிங்டன் சுந்தர். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் இடக்கை துடுப்பாட்டம் மற்றும் வலக்கை சுழற்பந்து வீச்சாளர்.
-
1999ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை பிரதமராகவோ, அதிபராகவோ ஆண்டு வரும் Bபுதின்
மொஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக மீண்டும் விளாடிமர் புதின் வெற்றி பெற்றதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை மேற்கத்திய தலைவர்கள் யாரும் புதின் வெற்றிக்கு வாழ்த்தவில்லை.”வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரஷ்யாவுடன் நல்ல உறவு நிலவி வருவதாக” சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார். கசகஸ்தான், பெலாரஸ், வெனிசுவேலா, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளும் புதினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
இலங்கை இரசிகர்களுக்கு மகிழ்ச்சி விருந்தளித்து இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா
கொழும்பு: இலங்கையின் சுதந்திர கிண்ணத்திற்கான முக்கோணத்தொடரில் பங்களாதேஷ் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி சுந்திர கிண்ணத்தை கைப்பற்றியது. ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஒரு பந்தில் 6 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் ஆடுகளத்தில் இருந்த டினேஷ் கார்த்திக் அந்த ஒரு பந்தை எதிர்கொண்டு 6 ஓட்டங்களுக்கு பந்தை விரட்ட இந்திய அணி திரிவெற்றியைப் பெற்றது.
-
அவசர நிலை பிரகடனம் ரத்து
கொழும்பு: இந்த மாதத் தொடக்கத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளை அடுத்து அவசரகால நிலையை பிரகடனம் செய்த இலங்கை அரசு, தற்போது அதனை ரத்து செய்துள்ளது.கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் தொழிலகங்களும், பள்ளிவாயல்களும் சேதமடைந்துள்ளன.
-
சிறு நீரக செயலிழப்பு -காரணம்-அறிகுறிகள்-மருத்துவ தீர்வு – விளக்கக் கட்டுரை
தற்போது நமது ஊரில் அதிகமாக பேசப்பட்டு வரும் விடயம்தான் சிறு நீரக செயலிழப்பு. இது தொடர்பாக அனைவரும் தெளிவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். சிறு நீரக செயலிழப்பு என்றால் என்ன? இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு சிறநீரகங்கள் (Kidney / ies) அமைந்துள்ளன. இவற்றின் பிரதான தொழில் சிறுநீரை உற்பத்தி செய்தல். சரீரத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நீர், கழிவுப்பபொருட்கள் ஆகியன சிறுநீரில் அடங்கியுள்ளன. கழிவப்பொருட்களை அகற்றுவதுடன் இரத்த அமுக்கம், உப்பு அமிலம், ஈமோகுளோபின் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன.
-
திட்டமிடப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான கண்டி கலவரம்- ஓர் பார்வை
முகம்மத் இக்பால், சாய்ந்தமருது எழுபத்திநான்கு சதவீதம் சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட கண்டி மாவட்டத்தில் பதிமூன்று சதவீதம் முஸ்லிம்களும், ஏனையவர்களாக தமிழர்களும் வாழ்ந்துவருகின்றார்கள். அம்பாறையில் மிகவும் திட்டமிட்டவகையில் ஆரம்பிக்கப்பட்டு கண்டி மாவட்டத்தில் நடந்துமுடிந்த கலவரங்கள் இரண்டு வாரங்களை அண்மித்துள்ள நிலையில், தங்கள் பழைய வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.