-
வாக்களித்தால் தான் என்னை சந்திக்க முடியும்: கல்முனையில் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க
வாக்களித்தால் தான் என்னை சந்திக்க முடியும் இல்லாவிடின் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார். கல்முனை பகுதியில் உள்ள பெரிய முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை (25) மதியம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவாக செயற்பட்ட இளைஞர் குழுவினை சந்தித்த வேளை குறிப்பிட்டார்.
-
இந்தியா: உத்தரப் பிரதேசத்தில் போராடிய 5 பேர் பலி
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அஸ்வதி தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
-
இந்தியா: உத்தரப் பிரதேசத்தில் போராடிய 5 பேர் பலி
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அஸ்வதி தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
-
21/4 தாக்குதல் விவகாரம்: மைத்திரி, ரணில் மற்றும் மெல்கம் ரஞ்சித்திடம் விசாரணை
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரிடம் விசாரித்து வாக்கு மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு சட்ட மா அதிபர் விசாரணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி – 05, பத்றியா ஜும்ஆ மஸ்ஜித் (BJM) வீதியைச் சேர்ந்த, இரும்புத் தைக்கா பள்ளிவாயல் பேஷ் இமாம் மெளலவி இப்றாஹீம் பலாஹி அவர்களின் மூத்த சகோதரர்அல்ஹாஜ் ALM.அப்துல் காதர் சேர் அவர்கள் [சட்டத்தரணி அப்துல் ஜவாத் (சேர்) அவர்களிடம் உறுதி எழுதுபவர்] வபாத்தானார்கள்.
-
தமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது: ஜனாதிபதி
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
-
சுவிஸ் தூதரக ஊழியர் கைது
கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அங்கொட மனநல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி முதலாம் குறிச்சி நூர்முகம்மட் லேனைச் சேர்ந்த செயினுலாப்தீன் முகம்மட் ஜெஸீல் (வயது 19) என்பவர் கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். கடந்த 21/04 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பத்தையடுத்து ஸஹ்றான் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களில் ஒருவராக மேற்படி இளைஞரும் கைது செய்யப்பட்டு கொழும்பில் குற்றப்புலனாயவுப் பிரிவினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
-
இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிக்க இராணுவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்
இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய இரண்டும் பாரிய சவால்களுக்கு உட்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளோம். தா்கம் செலுத்தியுள்ள புதிய இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இராணுவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். நாட்டு மக்கள் என்றும் இராணுவத்தினரை கௌரமளிப்பார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
எனது அடுத்த இலக்கு இலங்கை: நித்தியானந்தா
ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார். சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-
-
பிணை நிபந்தனைகளுக்கு இணங்கி நடக்குமாறு வைத்தியர் ஷாபிக்கு நீதிமன்றம் அறிவிப்பு, கோரிக்கையும் நிராகரிப்பு
குருணால் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கின் சாட்சியங்களில் முரண்பாடு காணப்படுமாயின் மீள வாக்குமூலம் பெறுவதற்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நீதிமன்றம் அனுமதி வழங்கியது. குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மீது, முறையற்ற வகையில் சொத்து சேகரித்தமை, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், தாய்மார்களை சட்டவிரோதமாக குடும்பக் கட்டுப்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு இன்று (12) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
-
பாத்திமா ஜப்றாவின் மரணமும் வைத்தியரின் தவறும்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியான உவைஸ் பாத்திமா ஜப்றா (வயது 14) கடந்த வருடம் திடீரென புற்று நோயினால் பாதிக்கப்பட்டதிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.