WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பாகிஸ்தானுக்கு கைமாரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள்

    கொழும்பு: பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் இருந்து ஏ-330 ரக விமானங்களை குத்தகை பெறும் வகையிலான உடன்படிக்கையில் நேற்று (29) கைச்சாத்திட்டுள்ளது. இதற்கான நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது என்று பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • 12 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு: பௌத்த பிக்கு உட்பட 12 பேர் தொடர்பு

    கொழும்பு: ஒரு சிறுமியை இரண்டு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக எழுந்துள்ள சந்தகேத்தின் பேரில் இலங்கையில் காவல் துறையினர் ஒரு பெண் உட்பட 12 நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த ஓர் அறையை வாடகைக்கு எடுத்ததாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 12 நபர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  • பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிடம் புவி. றஹ்மதுழ்ழாஹ் பகிரங்கக் கேள்வி!

    பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களுக்கு, இன்று (29.07.2016) வெள்ளிக்கிழமை காலை 09:00 மணிக்கு, எனது பத்திரிகையின் பிரதம உதவி ஆசிரியர் ஏ.எல். மொஹமட் நியாஸ் என்பவருக்கு எதிராக காத்தான்குடியிலுள்ள ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE) எனும் அமைப்பின் பணிப்பாளரும், NFGG எனப்படும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் பிரிவுத் தலைவியுமான திருமதி. அனீஸா பிர்தௌஸ் என்பவர் செய்திருந்த முறைப்பாடு ஒன்று தொடர்பாக காத்தான்குடி பொலீசாரின் அழைப்பிற்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு நானும்,…

  • பெண் ஓட்டிய முச்சக்கரவண்டி விபத்து

    பா.திருஞானம் புஸ்ஸல்லாவ: இரட்டைபாதை பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீகொக் தோட்டத்தில் தொரகல பிரதேசத்தில் இருந்து இரட்டைபாதை நகரை நோக்கி சென்ற பெண் ஒருவரால் செலுத்தபட்ட முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விழகி பழத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. இதில் பயணித்த பெண்ணும் ஒரு குழந்தையும் சிறு காயங்களுக்கு உள்ளாகி தெங்வீகமாக தப்பியுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சை பெறபட்டுவரும் அதே நேரம் மேவதிக விசாரனைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.

  • கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் காத்தான்குடி அஷ் ஷுஹதா வீதியினை பூரணப்படுத்தல்

    M.T. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள அஷ் ஷுஹதா வீதியானது மக்களினால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஓர் பிரதான வீதியாகும். இவ்வீதியானது செப்பனிடப்படிருந்தாலும் அதில் ஒரு பகுதி பல வருடகாலமாக பூரணப்படுத்தப்படாமல் இருந்ததன் காரணத்தினால அவ்வீதியானது பள்ளம் படுகுளியுமாக மாறி சேதமடைந்து மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதி வாழ் பொதுமக்களும் அவ்வீதியினை பயன்படுத்துகின்றவர்களும் குறிப்பாக மாணவர்கள்,

  • சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம் யுவதி

    காத்தான்குடி: கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதி பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

  • பிரிட்டன் புதிய வீசா விண்ணப்பம் அறிமுகம்!

    கொழும்பு: இலங்கை பிரஜைகளுக்கான  புதிய வீசா விண்ணப்பத்தை பிரிட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரிகள் எளிதில் வீசா கோரி விண்ணப்பிக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகளுக்கான கேள்விகளுடன் சிறிய விண்ணப்பமாக அமைந்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கு முதலில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது.

  • அரவிந்த, சங்காவிற்கு பின், குசல் மெண்டிஸ் 150

    பல்லேகல: அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில், விளையாடி வரும் இலங்கை அணியின் 2 ஆவது இன்னிங்ஸில் குசல் மெண்டிஸ் 150 ஓட்டங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

  • காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவுக்கு NFGG யினால் மல்டிமீடியா ப்றொஜக்டர் அன்பளிப்பு

    NFGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் நீண்டகால அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருந்து வந்த மல்டிமீடியா ப்றொஜக்டர் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அன்பளிப்புச் செய்துள்ளது. இதனை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா சபையின் காரியாலயத்தில் நேற்று (26.07.2016) மாலை இடம் பெற்து.

  • இந்தேனேசியாவில் இடம் பெற்ற சர்வதேச மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

    ஜகர்த்தா: சர்வதேச ரீதியாக சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் அதைஎவ்வாறு கையாள வேண்டும் என்ற தொனிப்பொருளில் இடம் பெறும் இஸ்லாமிய மாநாடு கடந்த மூன்று நாட்களாக இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் இடம் பெற்றது.

  • அப்பிள் நிறுவனத்தின் லாபத்தில் வீழ்ச்சி

    நியுயோர்க்: தொழில்நுட்ப பெருநிறுவனமான, அப்பிள், தனது காலாண்டு நிகர லாபத்தில் 27 சதவீத வீழ்ச்சி கண்டிருக்கிறது.இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான, ஐஃபோன் விற்பனையில் இரண்டாவது தொடர் காலாண்டு பருவத்தில் , வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட ஐஃபோன்களின் எண்ணிக்கையைவிட 15 சதவீதம் குறைவான ஐஃபோன்களே இந்த காலாண்டில் விற்கப்பட்டிருக்கின்றன.

  • ஆயுர்வேத மத்திய மருந்தக அழைப்பின் பேரில் விஜயமொன்றினை மேற்கொண்ட பொறியியலாளர் சிப்லி பாறுக்

    M.T. ஹைதர் அலி நாவலடி: கல்குடாத் தொகுதியின், நாவலடி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு 2016.07.26ஆந்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை போன்ற விடயங்களை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி டொக்டர் றிக்காஸ்,  மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிடம் தெளிவாக ஆவணங்களுடன் சுட்டிக்காட்டியதோடு, இவ்வைத்தியசாலையில் நோயளர் விடுதி அமைப்பதற்குரிய தேவைப்பாடுகளையும் தெளிவுபடுத்தினார்.

←Previous Page
1 … 184 185 186 187 188 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar