-
கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை கலை நிகழ்ச்சி
– பா.திருஞானம் கண்டி: கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் “ஸ்ரீத்வ சங்கநாதம் 16” கலை நிகழ்ச்சி கல்லூரியின் அதிபர் தலைமையில், கல்லூரியின் பிரதான மண்டபமான கொண்ஸ்டன்ஸ் மெலட் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராகிருஸ்ணன் கலந்துக் கொண்டார். இதன் போது. மாணவிகளின் அரங்க சமர்ப்பணம்¸ புன்னகை வீசிடும் வார்த்தைகள் அழகு¸ தசாவதாரம்¸ நிஜமே நித்திய அழகு (கஸீதா) சின்ன சிட்டுகளின் விசிரி நடனம்¸ குழு இசை¸ நூல்…
-
100 கோடி ரூபா வேண்டாம்: மஹிந்தவை விட்டு விலகும் அந்த 4 அரசியல்வாதிகள்
கொழும்பு: மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியலிருந்து நான்கு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைய ஆயத்தமாகுவதாக கட்சித் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நான்கு பேரில் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரபல அமைச்சர் என தெரிவிக்கப்படுகின்றது. மற்றவர் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் எனவும், இன்னொருவர் மஹியங்களை பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.
-
இலங்கையின் இளம் பெண்கள்… , கவலையளிக்கிறது!!
கொழும்பு: பெண்களால் இலங்கை பல சந்தர்ப்பங்களில் பல்வேறு புகழ்களை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார் அதிகமுள்ள நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.உலகில் முதல் பெண் பிரதமர், உலகின் முதல் பெண் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆகியோரும் இலங்கையிலேயே உருவாகினர். இவ்வாறு பெண்களால் புகழ்பெற்ற இலங்கையின் இளம் பெண்கள் பெரும் துயரகரமான விதியை எதிர்நோக்கி வருகின்றனர்.
-
இந்து முன்னணி பிரமுகர் கொலை; கோவையில் பதற்றம்
கோவை: கோவையில் இந்து அமைப்பு ஒன்றின் செய்தித்தொடர்பாளர் சசிகுமார் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்து நகரின் பல பகுதிகளில் கல்வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. கோவை மாவட்ட இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளராக இருந்த சசிக்குமார் என்பவர் நேற்று இரவு பத்தரை மணியளவில் அவரது வீட்டிற்கு சிறிது தூரத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
-
WEDF நிறுவனத்தினால் வழங்கப்படும் விதவைகளுக்கான காப்புறுதித் திட்டம
காத்தான்குடி: இத்திட்டமானது கடந்த மாதம் ஆறு சகோதரிகள் இணைந்து 101 விதவைகளுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் நன்மையை அறியப் பெற்றதாக லண்டனைச் சேர்ந்த ஒரு சகோதரர், தானும் இத்திட்டத்தில் இணைந்து கொள்வதாக கூறி 20 பேருக்கு ரூபா 23,100 வழங்கி வைத்தார். அதனை இன்று 20 விதவைகளுக்கு நாங்கள் வழங்கி வைக்கின்றோம். இந்த நிகழ்வானது கடந்த வருடம் ஆரம்பித்து மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
-
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அறிவிப்பு கவனமாகவும், பொறுப்புடனும் பரிசீலிக்கப்படுகிறது”
– NFGG ஊடகப் பிரிவு “NFGG யுடன் இணைந்து செயல் படத் தயார் என்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அறிவிப்பு மிகக் கவனமாகவும் பொறுப்புடனும் பரிசீலிக்கப்படுகிறது” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.
-
பண பரிமாற்றம் மற்றும் அரசியல் தலையீடுகள்: ஏறாவூர் இரட்டை கொலைக்கு நீதி கோரி மனித சங்கிலி போராட்டம்
ஏறாவூர்: ஏறாவூர் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலைக்கு நீதி கோரி இன்று (வியாழக்கிழமை) அப்பிரதேசத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த பிரதேசத்திலுள்ள வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவிருந்த நிலையில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
-
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு
பழுலுல்லாஹ் பர்ஹான் நிந்தவூர்: றாபிதது அஹ்லிஸ் ஸூன்னாவின் ஏற்பாட்டில் உள்நாட்டு,வெளிநாட்டு உலமாக்கள் கலந்து கொள்ளும் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு எதிர்வரும் 24-09-2016 சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
-
2015/2016 கல்வியாண்டிற்காக 27,306 பேர் பல்கலைக்கழக அனுமதி
மஸிஹூதீன் இனாமுல்லாஹ் கொழும்பு: கடந்த வருடம் மூன்று இலட்சத்து 2434 பேர் க பொ த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றினர், அவர்களில் ஒரு இலட்சத்து 55,550 பேர் சித்தியடைந்திருந்தனர், என்றாலும் 68,000 பேர் மாத்திரமே பல்கலைக் கழகங்களிற்கு விண்ணப்பித்திருந்தனர், பெறுபேறுகளின் அடிப்படையில் 27,306 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-
ஸ்மார்ட் போன்களுக்கான வரி நீக்கப்படுகிறது?
கொழும்பு: ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் வரியை நீக்குவது தொடர்பில், நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார்.
-
குலசேகரவின் வாகனத்தில் மோதி உயிரிழந்தவர் அவரது நண்பர்
கொழும்பு: நுவான் குலசேகரவின் வாகனம் மோதி நேற்று (19) அரவிந்த என்ற 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். விபத்து சம்பவம் தொடர்பில் நுவான் குலசேகரவும் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குலசேகரவும், உயிரிழந்த அரவிந்த என்பவரும் ஏற்கனவே பழக்கமானவர்கள் என தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
-
இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே!
அரசியலில் செல்வாக்கு என்பது எப்போது எழும்,எப்போது கவிழும் என்று சொல்ல முடியாது.மிகப் பெரிய அபிவிருத்திப் பணிகளை செய்த அரசியல்வாதிகள்கூட செல்வாக்கை இழந்துவிடுவர்.குறிப்பிடத்தக்க அளவில் சேவைகள் செய்யாதவர்கள்கூட திடீரென செல்வாக்கை அடைந்துவிடுவர். தேர்தலில் வெற்றி பெறுவது செய்த சேவையை அடிப்படையாக வைத்து அல்ல.தேர்தல் களத்தில் வகுக்கப்படும் வியூகம்தான் வெற்றியைத் தீர்மானிக்கின்றது இந்த நாட்டின் பல அரசியல் நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும்.