-
பௌத்த நாட்டில் அமைக்கப்படும் உலகின் உயரமான கிறிஸ்மஸ் மரம்
கொழும்பு: உலகின் உயரமான நத்தார் மர நிர்மாண பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில் கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் பணிப்புரைக்கு அமைய, இடைநடுவே கைவிடப்பட்டது.
-
பலமுறை நேரடியாக தெரிவித்தும் ஒட்டுசுட்டான் வைத்தியர் நிரேகாவின் ஆட்டத்தை கண்டுகொள்ளாத பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர்
- ஜெட் ஜனா ஒட்டுசுட்டான்: தற்சமயம் உலகறிந்த அநாகரிகசெயற்பட்டு நபராக இருப்பவர்; ஒட்டுசுட்டான் பிரதேசவைத்தியசாலை வைத்தியர் இவர் வைத்தியசாலையில் நடந்து கொள்ளும் விதத்தால்; மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இவருடைய செயற்பாடுகளாக வைத்தியசாலைக்கு காலம் தாழ்த்தி வருவது . நோயாளிகள் அவசரநிலையில் வைத்தியசாலைக்கு வந்தால் ஒட்டுசுட்டான் பிரதேசவைத்தியசாலை வைத்தியர் அரைமணி நேரத்திற்கு பின்பே வருகிறார்.
-
சென்னை சென்ற விமானங்கள் கட்டுநாயக்காவில் தரையிறக்கம்
கொழும்பு: டுபாய் விமான நிலையத்திலிருந்து சென்னை சென்ற விமானம் ஒன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் எமிரேற்ஸ் விமான சேவைக்குரிய விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
-
நாளை சென்னைக்கு கடக்கும் ‘வர்தா’ புயல்
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் அதி தீவிர புயலான வர்தா நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தின் கடலோர பகுதியில், சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
“பள்ளிவாசல்களுக்கு கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுங்கள்” அமைச்சர் ஹலீமிடம் அமைச்சர் ரிஷாத் வேண்டுகோள்
கொழும்பு: அமைச்சின் ஊடகப்பிரவு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் தொலைத்தொடர்பு முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் இஷாக்கிடம் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
-
ஜெயலலிதா மரணமும் நம்மவர்களும்….!!
AK-11 காத்தான்குடி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் விரைவில் மரணத்தைத் தழுவுவார் என எதிர்பார்த்து, “நானா-நீயா” என்று முகநூலிலும் “வட்ஸ்அப்” குழுக்களிலும் ஆளாளுக்கு முந்திக்கொண்டு பொய்ச் செய்திகளையும், மரணச் செய்தியையும் அறிவிப்பதில் எம்மவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அப்பாடா…..!
-
‘வாய் வீச்சு அரசியல் மக்களுக்கு பயனளிக்காது’ அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து கொண்ட இல்ஹாம் மரைக்கார்
புத்தளம்: முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் சகோதர முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரை மேடைகளில் தூஷித்தும் நடித்துக் காட்டியும் நையாண்டி பண்ணியும் கேவலப்படுத்தியமையுமே தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமைக்கு பிரதான காரணமென்று முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் இல்ஹாம் மரைக்கார் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
-
ஜெயலலிதா திங்கள் இரவு 11.30 மணியளவில் காலமானார்
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார்” என்று தெரிவித்துள்ளது.
-
கருணாவின் பிணை மனு நிராகரிப்பு
கொழும்பு: கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தனது பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், அரச வாகனத்தை மீள ஒப்படைக்கவில்லை எனும் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மட்டக்களப்பில் சகஜ நிலை திரும்பியது
மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழையவிடாமல் போலிஸாரால் தடுக்கப்பட்ட பொது பல சேனா உட்பட கடும்போக்கு பௌத்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவுடன் திரும்பி விட்டனர். இதனையடுத்து அந்த இடத்திலும் மட்டக்களப்பு நகரிலும் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வரை நீடித்த பதட்ட நிலை வழக்கத்திற்கு திரும்பியுள்ளது.
-
விலங்கு கொழுப்பு கலந்த 5 பவுண்ட்ஸ் நோட்டை வாங்க சைவ உணவகம் மறுப்பு
லண்டன்: பிரிட்டனில் புதிய ஐந்து பவுண்டு நோட்டுக்களில் விலங்கு பொருட்கள் கலந்திருப்பது குறித்து வெளிப்பட்ட பிறகு, சைவ உணவகம் ஒன்று அந்த நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடம் பெற மறுத்துள்ளது. கேம்பிரிட்ஜில் உள்ள ரெயின்போ கேஃப் என்ற உணவகத்தின் உரிமையாளர் ஷரோன் மெய்ஜ்லேண்ட், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதுகுறித்த அறிவிப்புப் பலகையை வைத்துள்ளார்.
-
மட்டக்களப்பில் நடந்தது என்ன
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இன்று சனிக்கிழமை மேற்கொண்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோ உட்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் போலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளனர்.