கொழும்பு: உலகின் உயரமான நத்தார் மர நிர்மாண பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில் கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் பணிப்புரைக்கு அமைய, இடைநடுவே கைவிடப்பட்டது.
இதனை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கார்டினல் மல்கம் ரஞ்சித்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த நத்தார் மர நிர்மாணம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உலகின் பௌத்த நாடொன்று முதன் முதலில் நிர்மாணிக்கும் மிகப்பெரிய கிறிஸ்மஸ் மரமாக இம்மரம் அமைவதுதான் வேடிக்கையான விடயமாகும்

Leave a comment