-
தலைவர் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டு கூறுவாரா ? தலைவரிடம் மன்னிப்பு கோரிவிட்டு ஒதுங்க தயார்
மக்களின் நலன்களுக்கெதிராக அரசியல் தலைவர்கள் ஈடுபடுகின்றபோது அதற்கு எதிராக மக்கள் கொதித்தெழுவதும், பின்பு மக்களின் கவனத்தினை தலைவர்கள் திசைதிருப்புவதற்காக வேறு புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அதனால் பழைய விடயங்களை மக்கள் மறந்துவிடுவதும் வழமையாகும்.
-
“20க்கு 20 கோடி வாங்கிய ஹரீஸ் இற்கு பேச ஏலா, இம்ரான் கான் பேசவேணுமாம்”
எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எண்ணியுள்ள பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான்கானின் விஜயத்தின் போது இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் திடீரென அவரது பாராளுமன்ற உரை ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு எதிரான செயலாகவே பார்க்கமுடிகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்திலிருந்து இலங்கை வருவதற்கான பயணத் தடை நீக்கம்
கொழும்பு: ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) இலங்கைக்கு வருவதற்கான தற்காலிக பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக, வெளி விவாகார அமைச்சு அறிவித்துள்ளது.
-
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நீதிமன்றில் ஆஜர்படுத்த பணிப்புரை
கொழும்பு: சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை உரிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, பொலிஸ் மாஅதிபருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
-
இருபதுக்கு வாக்களித்த எம்பிக்களுக்கு தண்டனை வழங்கினால், தலைவருக்கு என்ன தண்டனை ?
தலைவரின் அனுமதியுடனேயே இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருந்தனர். அதேநேரம் தலைமைத்துவ கட்டுப்பாட்டினை கட்சியின் உறுப்பினர்கள் மீறியுள்ளதாக தலைவர் கூறியிருந்தார்.
-
மு.காவினர் இனி கசையடி வாங்கிக்கொண்டே ஐ. ம.சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும் : இம்ரான் மஹ்ருப் எம்.பி
– நூருல் ஹுதா உமர் தேர்தல் காலங்களில் குரானையும், ஹதீஸையும் காட்டி தேர்தல் செய்பவர்கள் தேர்தலின் பின்னர் இஸ்லாமிய நடைமுறைகளை பேணியா அரசியல் செய்கிறார்கள். சம்பவம் நடந்து நான்கு மாதங்களின் பின்னர் மன்னிப்பு நாடகம் அரங்கேறுகிறது. அவர்கள் உண்மையான இஸ்லாமிய அரசியலை செய்பவர்களாக இருந்தால் இஸ்லாமிய சரியாவை பின்பற்றுபவர்களாக இருந்தால் அவர்கள் செய்த வேலைக்கு கசையடி வாங்கிக்கொண்டே ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும் என திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப்…
-
ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத்தொகுதிக்கான பிரதம காரியாலய திறப்பு விழா
– நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் கல்முனை: ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத்தொகுதிக்கான பிரதம காரியாலய திறப்பு விழா இன்று இரவு அம்பாறை கரையோர பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக்கின் தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.
-
நடிப்பு? எம்பிக்களுக்கு எதிராக மு.கா தலைவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை??
முஸ்லிம் காங்கிரசின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இருபதாவது திருத்ததிற்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை மு.கா ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது.
-
“அரிசி பேக்”, “20 ரூபாய்” புகழ் நசீர் ஹாபிஸ் வாய்திறப்பு!!
பதவிகளை அமானிதமாக்கி சமூக வியூகங்களில் வெற்றி கொண்டோம். ஹாபீஸ் நசீர் எம் பி ஊடகப்பிரிவு
-
ஈஸ்டர் தாக்குதல்: பின்னணிகள்….
தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார்.
-
தமிழர்களை போராட தூண்டியது யார்?
முள்ளியவாய்க்கால் பேரவலத்துடன் தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு காணாமல் போனவர்களின் உறவுகளினால் தொடர் போராட்டங்கள் நடைபெற்றிருந்தாலும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான மக்கள் போராட்டம் மாபெரும் எழுட்சி போராட்டமாக பார்க்கப்படுகின்றது.
-
மியண்டாட் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று
– ஐ.எல்.எம். நாஸீம், ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் 30 வருடமாக இயங்கிவரும் சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழக ஏற்பாட்டில் நடைபெறவுள்ள எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று மாலை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கழக தலைவர் ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.