-
பெண்களை பயன்படுத்திய இலங்கை கிரிக்கெட்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியம் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போட்டியின் இடைவெளியின் போது வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க பெண்களை பயன்படுத்தியது இலங்கை கிரிக்கெட் வாரியம். ஏற்கனவே பலத்த காயத்தில் இருக்கும் இலங்கை அணியை உற்சாகமாக இருக்க வைக்க இம்முயற்ச்சி மேற்கொள்ள பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரோஹிஞ்சா அகதிகளை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது ஐ.நா.
கொழும்பு: மிரிஹான சட்ட விரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இன்று தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது. இலங்கையில் பிறந்த குழந்தை உள்ளிட்ட 32 ரோஹிஞ்சா முஸ்லிம்கள், மிரிஹான சட்டவிரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
-
“வடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராகவுள்ளது”
வோஷிங்டன் DC:`அமெரிக்க ராணுவப் படைகள் முழு அளவில், தகுந்த இடங்களில் தயாராக உள்ளன. வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் புதிய வழியை தேர்ந்தெடுப்பார் என நம்புகிறேன்` என டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் மூளுவதற்கு டிரம்ப் முயல்வதாக வட கொரியா குற்றம்சாட்டியிருந்ததற்கு பதிலடியாக அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
-
வேதனையளிக்கும் குவைத்திர்கானின் செயற்பாடுகள்
தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி மக்களுக்கு பொய் கூறும் வேலையினை ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் தலைவர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசும் பொருளாக மாறியுள்ளதை யாவரும் நன்கு அறிந்து கொண்டுள்ள விடயமாகும்.இவ்வாறான பின்னணியில் தொடர்ந்தும் சில கூலிகள் அமைச்சர் றிசாத் பதியுதீனை இலக்கு வைத்து தொடரான தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றன.
-
போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்!
கொழும்பு: போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் விதிக்கப்படும் அபராதங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய ஒரு சில பாரிய விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகை ரூபா 25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விபரம்:
-
சஊதி அரேபியாவின் பிரபல பாடகர் கைது
றியாத்: தென்மேற்கு சஊதி அரேபியாவில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில்,`டாபிங்` எனப்படும் நடன சைகையை செய்ததற்காக அந்நாட்டின் பிரபல பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார். சஊதி அரேபியாவைச் சேர்ந்தவரான அப்துல்லா அல் ஷஹானி, நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.தியேப் நகரில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது, ஒரு கையினை மேல் நோக்கியும், மறு கையினால் முகத்தை மறைத்தும் செய்யப்படும் `டாபிங்` நடன சைகையை அப்துல்லா அல் ஷஹானி செய்துள்ளார்.
-
புலமைப் பரிசில் கருத்தரங்குகளுக்கு தடை
கொழும்பு: தரம் 05 புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு அப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள், கருத்தரங்குகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 16 நள்ளிரவு முதல் ஓகஸ்ட் 20 ஆம் திகதி பரீட்சைகள் நிறைவடையும் வரையான காலப் பகுதியில் குறித்த தடை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
-
தேசிய கிரிக்கட் அணியில் இடம்பிடிக்கும் மட்டு- படுவான்கரை இளைஞன்
மட்டக்களப்பு: மட்டக்களப்பைச் சேர்ந்த கமலநாதன் தனுசாந்த் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடத்தப்பட்ட தேர்வுப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு சுழல் பந்து வீச்சாளர் தகுதி பெற்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தனுசாந்திற்கு 2 – 3 மாதங்கள் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சியளிக்கப்பட்டு தேசிய அணியில் இணைத்து விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
பிரித்தானிய மகாராணியிடம் சிறப்பு விருதை பெற்ற இலங்கை இளைஞர் மாலேவன
லண்டன்: எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கான மருந்து ஒன்றை கண்டுபிடித்த இலங்கையை சேர்நத ரக்கித மாலேவன என்ற இளைஞனுக்கு பிரித்தானிய மகாராணி விசேட விருதை வழங்கியுள்ளார்.ரக்கித மாலேவன கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவனம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மருத்துவ ஆய்வாளராகவும் கடமையாற்றி வருகிறார்.
-
“கட்சியிலிருந்தும் , கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் அய்யூப் அஸ்மின் முழுமையாக நீக்கப்படுகிறார்”- NFGG
NFGG ஊடகப் பிரிவு “அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை பிரதிநிதியாகவோ அல்லது ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்பட மாட்டார். இதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது” என NFGG யினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க கத்தார் பரிசீலனை
டோஹா: கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கே.யூ.என்.ஏ தெரிவித்துள்ளது. வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துவிட்டாலும், சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
-
“காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விடுதலை புலிகள் செய்யவில்லை” : அஸ்மின்
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தனது முகநூலில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அதற்கு வழங்கப்பட்ட பின்னூட்டல்களை அழித்துள்ளமை அவரது போக்கிலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (3.8.2017) ‘1990 ஆகஸ்ட் 03ம் நாள் காத்தான்குடியில் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள்’ என தனது முகநூலில் பதியவிட்டிருந்தார்.