-
உயர்தர மாணவி “பாலியல் விவகாரம்”: புதிய நிர்வாகசபை தலையிடவேண்டும்
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஓட்டமாவடி: ஓட்டமாவடி பாத்திமா பாலிகா பெண்கள் பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவர் ஆரம்ப பிரிவிற்கு கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவரினால் பாலியல் உரவிற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்துள்ளதாக கூறப்படும் ஓர் பாரதூரமான சம்பவமானது கடந்த ஓர் வார காலமாக முக நூல்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற முக்கிய விடயமாகவும், தேசியத்தில் உள்ள தமிழ் பேசும் சமூகத்தின் பார்வை மட்டுமல்லாது கடல் கடந்த சமூகத்தின் பார்வை கூட குறித்த பாடசாலையையும் ,ஓட்டமாவடியையும்…
-
ஓர் ஸ்மார்ட் ஃபோனில் மறைந்திருக்கும் ஏராளமான வசதிகள்
உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் கொண்டு ‘இதெல்லாம்’ செய்ய முடியுமென்று கூறினால் முதலில் நம்ப மாடீர்கள்; ஆனால் வழிமுறைகளை அறிந்த பின்னர் விடாமல் செய்து பார்ப்பீர்கள். க்ளோனிங் ஆப்ஸ்.! ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பில் ‘ஆப் க்ளோனர்’ என்று அழைக்கப்படும் மெனு விருப்பம் உள்ளது. இதனை கொண்டு நீங்கள் விரும்பும் ஆப்பின் ஒரு க்ளோனிங்கை அதாவது ஒரு நகலை உருவாக்க முடியும்.
-
ஏறாவூர் இரட்டை கொலை சந்தேகநபர்கள் கைது
ஏறாவூர்: ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
-
புங்குடுதீவில் மிக சிறப்பாக நடைபெற்ற, “தாயகம்” அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு
“புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” சார்பில் 29.10.2017, புங்குடுதீவு அம்பலவாணர் கலைஅரங்கில் நடைபெற்ற “கௌரவிப்பு நிகழ்வானது”, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகத்தின்” தலைவி திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன் தலைமையில், திருமதி.சாரதா கிருஷ்ணதாஸ் (வேலணை கோட்டக் கல்விப் பணிப்பாளர்) பிரதம விருந்தினராக கலந்து கொள்ள, மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
-
நியூயோர்க்கில் பொதுமக்கள் மீது தாக்குதல்
நியூயோர்க்: நியூயோர்க்கில் கீழ் மன்ஹாட்டனில் டிரக் ஓட்டுநர் ஒருவர் நடைபாதை மற்றும் சைக்கிள் பாதையில் சென்ற மக்கள் மீது மோதியதால் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டு்ள்ளனர்.துப்பாக்கி போன்று தோன்றியதை காட்டிக்கொண்டு ஒரு வாகனத்தில் இருந்து வெளிவந்த ஒருவரை போலீஸார் சுட்டு கைது செய்துள்ளனர்.
-
முஸ்லிம் வியாபாரிகளை குறித்த கால அவகாசத்திற்குள் வெளியேறுமாறு கோயில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
மட்டக்களப்பு: மட்டக்களப்பு, கிரான் சந்தையில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினர். ஞாயிற்றுக்கிழமை (29) சந்தை வழக்கம் போல் கூடிய போது சந்தைக்கு அருகாமையில் “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற வாசகம் கொண்ட சுவரொட்டிகள் அடையாளம் தெரியாத நபர்களால் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
-
எதற்காக ஹனீபா GS (மம்மலி) உடைய குழுவிடம் பள்ளிவாயல் நிருவாகத்தினை ஒப்படைக்க வேண்டும்.? (காணொளி)
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஓட்டமாவடி: கல்குடா ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபைக்கான தெரிவு நாளை 28.10.2017 சனிக்கிழமை இடம் பெற இருக்கின்ற நிலையில் பிரதேசத்தில் முக்கிய “புள்ளி”யாகவும், எலோருக்கும் பரீட்சயமாக இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய புள்ளியுமான ஹனீபா GS என அழைக்கப்படும் மம்மளி விதானை தலைமையில் போட்டியிடுகின்ற 17 பேர் கொண்ட குழுவிடம் எதற்காக புதிய நம்பிக்கையாளர் சபையினை கையளிக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையினதும், காணொளியினதும் சாராம்சமாகும்.
-
சீனா: வியப்பூட்டும் தகவல்கள்
2011 முதல் 2013 வரை சீனா பயன்படுத்தியிருக்கும் சிமெண்டின் மொத்த அளவு அமெரிக்காவில் நூறு ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் சிமெண்ட்டின் மொத்த அளவைவிட அதிகமாகம். இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 6,615 மில்லியன் டன் சிமெண்ட்டை சீனா பயன்படுத்தியுள்ளது! ஐஸ்கிரீமின் தாயகம் சீனாதான். கி.மு. 200இல் சீனாவில் ஐஸ்கிரீம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் முதல் ஐஸ்கிரீம் பால் மற்றும் அரிசி கலந்து செய்யப்பட்டது.
-
சிரிக்கவும், சிந்திக்கவும்
– படம்: முகநூல்
-
மூன்று மாதங்களில் 7 தலைவர்கள்
MJ கொழும்பு: கடந்த மூன்று மாதங்களில் இலங்கை கிரிக்கெட் அணியில் ஏழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரங்கன ஹேரத், தினேஷ் சந்திமால், சாமர கபுகெதர, லசித் மலிங்க, ஏஞ்சலோ மத்யூஸ், உபுல் தரங்க ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது திசாரா பெரேரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
-
ஜனவரி மாதம் உள்ளுராட்சி தேர்தல்
கொழும்பு: சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பின்போடப்பட்டு வந்த இலங்கையின் உள்ளுராட்ச்சி சபைகளின் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சி சபை தேர்தல்களை நடத்துவதற்கான அரச வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகான சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா நேற்று (24) மாலை கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
-
அவதானம்: இலவச வைஃபை மூலமாக தகவல்கள் திருடப்படுகின்றன
சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் இந்த இணைப்புகளின் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்களின் வங்கி கணக்கு, கடவுச்சொல், புகைப்படங்கள் போன்ற பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான வைஃபை இணைப்புகளை இயக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமான WPA2யில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி அந்த இணைப்புகளின் வாயிலாக இணையத்தை உபயோகிப்பவர்கள்