Category: Your Kattankudy
-
ஐக்கிய அரபு நாட்டில், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலில் விண்ணப்பித்த பெண்
டுபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டுகளில், பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமானதாக ஆக்கிய புதிய சட்டம் ஒன்றின் கீழ் , முதல் விண்ணப்பதாரராக ஒரு பெண், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்துள்ளார். உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அந்த பெண்ணின் வழக்கறிஞர், அந்த பெண் எப்போதுமே தனது உண்மையான பாலின அடையாளம் என்பது ஆணாக இருப்பது என்று அவர் உணர்ந்துள்ளார். மேலும், அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக உடல் மற்றும் உளவியல் சிகிச்சை எடுத்து வருகிறார் என்று…
-
குலசேகர கைது
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று (19) இடம்பெற்ற விபத்தொன்றின் தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
-
சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் சிறையில் ‘மரணம்’
சென்னை: கடந்த ஜூன் மாதம் சென்னையில் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் காலை நேரத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தபோது வெட்டிக்கொல்லப்பட்டார்.
-
இருளில் மூழ்கப்போகும் இலங்கை!
திருகோணமலை: திருகோணமலை சம்பூர் அனல் மின்நிலையத்தினை நிறுத்த கோரி சம்பூர் மக்கள் தொடர்ந்தும் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய குறித்த திட்டத்தை அரசாங்கம் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதால் இலங்கை மின்சாரசபைக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை கைவிட்டமைக்கு பின்ணணியில் பல்வேறு காரணங்கள் உள்ளது.
-
வாழ்வாதார/தொழில் உதவி காேரல்
அகமட் லெவ்வை முகம்மட் சனுஸ் வியாபாரியார் வீதி, பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை அஸ்ஸலாமு அலைக்கும் மேற்படி விலாசத்தில் வசிக்கும் நான், கட்டார் நாட்டில் பனிபுரியும் பாேது விபத்துக்குள்ளாகியதன் காரணமாக முள்ளந்தண்டு உடைந்ததன் விளைவாக சுமார் 10 வருடங்களாக நடக்க முடியாமல் தாெழில் எதுவும் செய்ய முடியாமல் கஸ்டப்படுகிறேன். வயாேதிப பெற்றோரோடு தங்கி வாழ்ந்து வரும் நான் பூரனப்படுத்தப்படாத வீட்டில் மழை, வெயில் காலங்களில் மிகவும் கஸ்டப்படுகிறேன்.
-
மஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா பெண்கள் மகளிர் அறபிக்கல்லூரியின் பெண்களுக்கான ஹஜ்ஜூப்பெருநாள் கலை விழா இன்று ஹிஸ்புல்லா மண்டபத்தில்
எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: முற்றிலும் பெண்களை மாத்திரம் கொண்டு மஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா பெண்கள் மகளிர் அறபிக்கல்லூரியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஊடகவியலாளர்களுடனான மாநாட்டின்போது அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம் சி எம் றிஸ்வான் மதனி தெரிவித்தார். அதிபர் அஷ்ஷெய்ஹ் ஜெய்னுலாப்தீன் மதனி கருத்து தெரிவிக்கையில்,
-
ஏறாவூர் இரட்டைக்கொலை: 4 சந்தேக நபர்களும் இவர்களே
ஏறாவூர்: ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக சந்தேகத்த்pல் பேரில் நான்குபேர் 17.09.2016 சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏறாவூரைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இதிலடங்குகின்றனர். விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
-
சம்சுங் நோட் 7 விமானநிலையத்தில் தடை
கொழும்பு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
-
“அரசியலுக்காவே மதம் சார்ந்த அடையாளத்தை காட்டிக்கொள்ளும் இலங்கை முஸ்லிம்கள்”- விக்னேஸ்வரன்
மட்டக்களப்பு: இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும் அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி .விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (16) இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவில் முக்கிய விருந்திராக கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
-
இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் பிரவேசிக்க இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரல்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை போன்ற மாவட்டங்களிலுள்ள இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் இணைந்து பணியாற்ற விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர், யுவதிகளிடம் இருந்து கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் பேரவை விண்ணப்பம் கோரியுள்ளது. நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் அதிகமாக இன்றைய இளைஞர்,யுவதிகளின் மனப்பாங்குகளில் ஏற்படும் மாற்றங்களில் உள்ளது.
-
எம்.எச்.எம்.அஸ்ரப் மறைவின் 16ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் எழுதப்பட்ட கட்டுரை
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அல்ஹாஜ் அஷ்ரப்பினுடைய 16ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடன் நெருங்கிப் பழகியவன், அவரது அரசியல் பயணத்தில் பக்கபலமாக இருந்தவன் என்றவகையில் அவர் எமக்கு கற்பித்த அரசியல் பாடம் இக்காலத்தில் எந்தவகையில் பொருந்தும் என்ற ரீதியிலேயே இக்கட்டுரையை எழுதுகின்றேன்.