Category: Your Kattankudy
-
மாணவர் களம்
‘மாணவர் களம் -மாணவர்களுக்கான தனிக் களம்’ தற்பொழுது வடிவமைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் மாணவர்களுக்கான தகவல் களஞ்சியங்களும் பொது அறிவுத் தகவல்கள் மற்றும் பொது அறிவு-தகவல்களுக்கான இணையத்தளங்களின் முகவரிகளும் அறிவகம் பக்கத்தில் பதியப்பட்டு வருகின்றன என்பதையும், விளையாட்டு சம்பந்தமான பொதுஅறிவுகள் மற்றும் தகவல்கள் விளையாட்டு பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். நன்றி. என்றும் அன்புடன், இயக்குநர்.
-
CB கிண்ணத்துக்கான இறுதிப்போட்டிகளில் அவுஸ்திரேலியாவுடன் விளையாடப்போகும் அணி எது?
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை கிரிக்கட் அணிக்கும் அதன் இரசிகர்களுக்கும் இலங்கையின் வெற்றியே குறிக்கோள் என்ற வாசகத்தைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது! இந்தியாவா? இலங்கையா? எனும் நிகழ்தகவில் அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் CB (Commonwealth Bank) கிண்ண முக்கோணத் தொடரின் ஆரம்பச் சுற்றின் இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 19 புள்ளிகளுடன் முன்னணியில் இருக்கும் அவுஸ்திரேலியாவுடன் 15 புள்ளிகளுடன் இருக்கும் இலங்கை அணி சவாலைச் சந்திக்கவிருக்கின்றது.
-
உலக சாதனை
நேபாள் நாட்டைச் சேர்ந்த ‘சந்த்ரா பகதூர் டங்கி’ (Chandra Bahadur Dangi) என்பவர் உலகில் வாழும் உயரம் குறைந்த மனிதருக்கான கிண்ணஸ் உலக சாதனை விருதைப் பெற்றார். இவரது தற்போதைய உயரம் 54. cm (21.5 in). ஆகும். 72 வயதையடைய சந்த்ரா பகதூர் 14.5 kg நிறையுடையவர் என்பதும் கிண்ணஸ் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
-
T20 தொடரும் இங்கிலாந்துக்கு
அபுதாபி- ‘ஷெய்ஹ் செயிட்’ விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் விறுவிருப்பாகவும் பல எதிர்பார்ப்புடனும் இன்று நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடர் வெற்றியை வென்றதுடன் உலகச் சம்பியன் பட்டத்தையும் இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டது.
-
ஆசியாவின் ஆச்சர்யத்தில் இலங்கையின் தொலைத் தொடர்பு !
கொழும்பு ‘தாமரைக் கோபுரம்’ ஆசியாவின் ஆச்சர்யத்துக்கு இலங்கையைக் கொண்டு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் முயற்சியின் மற்றுமொரு மைல் கல்லாகத் திகழும் கெழும்பு ‘தாமரைக் கோபுரம்’ உலக நாடுகள் மத்தியில் இலங்கையைக் கோடிட்டுக் காட்டுகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் ‘தாமரைக் கோபுரம்’ 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது. சுமார் 350 மீற்றர் உயரமாக இந்த தொலைத்தொடர்பு கோபுரமானது சீன தேசிய இலத்திரனியல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தானத்தினால் 30…
-
குடிசனத்தொகை கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!
குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பு இன்று திங்கட் கிழமை 27 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.பீ.பி.சுரங்கனா வித்யாரட்ண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
காத்தான்குடியில் இடம்பெற்ற கண்டன எதிர்ப்பு
படங்கள்: MTM. ரஸ்லான்: இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து இன்று காத்தான்குடியில் இடம்பெற்ற கண்டன எதிர்ப்பு மற்றும் சமய நிகழ்வுகளின் புகைப்படங்கள் வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.
-
ஈரானை சமாளிக்க பாரசீக வளைகுடாவில் அமெ.படைகுவிப்பு
பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சிய படைகளுக்கு சிறப்பு பயிற்சி. ஈரான் தாக்கினால் பதிலடி கொடுப்பதற்காக பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பல் மற்றும் தரைப்படைகளை குவித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஈரான் நாடு பாதாள அறைகளில் அணு உலை அமைத்து யுரேனியத்தை செறியூட்டி வருகிறது. இதை மின்சார உற்பத்தி போன்ற ஆக்கபூர்வ பணிகளுக்கே பயன்படுத்துவதாக ஈரான் கூறி வருகிறது. ஆனால் இதை அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஏற்கவில்லை. அணு குண்டு தயாரிப்பதில் ஈரான் ஈடுபடுவதாக குற்றம்சாட்டின.
-
நாடெங்கும் இன்று கண்டன பேரணி
ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கை மீதான பொய் குற்றச்சாட்டுகள்: இன, மத, அரசியல் பேதமின்றி அழைப்பு இலங்கைக்கு எதிராக மனித உரிமை என்ற போர்வையில் ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள அபாண்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து இன்று நாடு முழுவதிலும் மாபெரும் மக்கள் பேரணி இடம்பெறவுள்ளது. அரசியல் இனம், மதம் என்ற சகல பேதங்களை மறந்து ஒரே நாடு என்ற மகுடத்தின் கீழ் நாட்டை பாதுகாக்கும் இந்த மாபெரும் மக்கள் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள்…
-
மேற்குலகத்திற்கு எதிராக நாளை நாடளாவிய பொதுமக்கள் பேரணி!
இறைமையும், ஜனநாயக மரபும் கொண்ட நாட்டின் மீது ஏன் இந்தக் கொலைவெறி? இன, மத, கட்சி பேதமின்றி ஒன்றிணைய மதத்தலைவர்கள் வேண்டுகோள் வடக்கு, கிழக்கிலிருந்து கொழும்பு நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்களில் மக்கள் படை! இறைமையுள்ள, ஜனநாயக பண்புகளைக் கொண்ட நமது நாட்டின் மீது மேற்குலகம் திட்டமிட்ட வகையில் அழுத்தங்களைப் பிர யோகித்து எம்மை சர்வதேசத்தின் முன் குற்ற வாளியாக நிறுத்த முற்படும் செயற்பாடுகளுக்கு எதிராக இன, மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மதத்…
-
மின்னொளியில் ஜொலித்த மீரா பாலிகா நிகழ்ச்சிகள் (படங்கள் இணைப்பு)
காத்தான்குடி மீராபாலிகா மஹா வித்தியாலயத்தில் 24-02-2012 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மாபெரும் சிறப்பு நிகழ்ச்சியில் கௌரவ கல்வி அமைச்சர் திரு. பந்துல குணவர்தன, பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA. , கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர் எம்.எம்.இஸ்மா லெப்பை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
-
புனித ஹஜ் கடமை:யாத்திரிகர்களுக்கான பதிவு 15 ஆம் திகதி வரை நீடிப்பு
இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல் லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளு வதற்கான காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி வரை நீடிக்கப் பட்டிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார். இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுவதற்காக இம்மாதம் 29 ஆம் திகதி வரையும் ஏற்கனவே காலம் வழங்கப்பட்டிருந்தது.