Category: Your Kattankudy
-
கருமலை ஊற்று பள்ளிவாசல் மீண்டும் திறப்பு
கடந்த இரண்டு வருடங்களாக பாதுகாப்பு தரப்பினரால் மூடப்பட்டிருந்த திருகோணமலை வெள்ளை மணல் கருமலை ஊற்று பள்ளிவாசலை மீண்டும் திறக்க கிழக்கு மாகாண சபை வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நஜீப் ஏ மஜீத் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
ஈரான் பூகம்பம்: பலியானோர் எண்ணிக்கை 250ஆக உயர்வு! 2000 பேர் காயம்.
-MJ சனிக்கிழமை அதிகாலை ஈரானின் வடமேற்கு மாநிலமான தப்ரீஸ் இல் இடம்பெற்ற இரு பூகம்பங்களைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது. இதுவரைக்கும் 2000க்கும் அதிகமானோர் காயத்திற்குள்ளாகி இருக்கின்றனர். கட்டட இடிபாடுகளுக்குள்ளும் இன்னும் பல உயிர்கள் பொறிவைக்கப்பட்டிருப்பதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெஹ்ரான் அறிவித்திருக்கின்றது.
-
உன்னிச்சையில் நடந்தது என்ன?
உன்னிச்சைக் கிராமத்தைச் சேர்ந்த பெண் கோடரியினால் நேற்று மாலை வெட்டித் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து உன்னிச்சைக் கிராமத்தில் 03 வீடுகள், ஒரு கடை , பள்ளிவாயல் என்பன தீ மூட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஈரானில் பாரிய பூகம்பம்: 180 பேர் பலி! 1,300 பேர் காயம்!
-MJ ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் இதுவரைக்கும் 180 பேர்கள் பலியாகி இருக்கின்றனர். 1300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. முதலாவது பூகம்பம் அதிகாலை 4:53 மணிக்கு 6.4 பரிமாணத்தில் பலத்த அதிர்வு ஏற்பட்டதாகவும் இரண்டாவது அதிர்வு பதினொறு நிமிடங்களின் பின்னர் 6.3 பரிமாண அளவில் அதிர்ந்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளது.
-
இனவாத ரீதியான பிரசாரத்தில் ஹக்கீம்! நிரூபிக்கப்படின் அரசு நடவடிக்கை
கிழக்கில் இனவாத பிரசார நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் ஹக்கீம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன அடிப்படையில் பிரசாரம் செய்து வாக்குகளை பெறக்கூடாது என்பதும் அபிவிருத்தியையும் கொள்கையையும் விளக்கியே வாக்குகளை பெறவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
-
‘எல்லே’ விளையாடி மகிழ்ந்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ‘எல்லே’ விளையாடி மகிழ்ந்தார். இலங்கை எல்லே சங்கம் மற்றும் கால்டன் ஸ்போட்ஸ் நெட்வர்க் நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 2012ஆம் ஆண்டுக்கான தேசிய எல்லே போட்டியின் இறுதிப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
-
நிறைவுபெறுகிறது ‘லண்டன் ஒலிம்பிக் 2012’
-MJ கடந்த மாதம் (ஜூலை) 27ம் திகதியிலிருந்து பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் இன்று 12-08-2012 ஞாயிறு மாலை நேரத்துடன் நிறைவு பெறுகின்றது.
-
அரபுலகத்திற்கு ஓர் மியன்மார் சகோதரியின் கண்ணீர் மடல்…
-மிஸ்ஜா மேற்குலகின் அடிமைசாசனமாய் எழுதப்பட்டு தன்கைகளுக்கும் விலங்கிட்டு தலைசாயக்கும் பொம்மைகளாய் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கும் அரபுலகத் தலைமைக்கு தலைவலியாய் நாங்கள் இருக்கின்றோமோ? நீங்கள் குரலெழுப்ப முதுகெழும்பற்றவர்களென்பது எங்களுக்கும் புரிகின்றது.
-
ஏழாவது தடவையாகவும் அலரி மாளிகையில் இப்தார்: ஈரான் காரிஹ் கிராத், பலஸ்தீன தூதுவர் அதான்
ரமழான் நோன்பை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அலரி மாளிகையில் ‘இப்தார்’ நோன்பு துறக்கும் நிகழ்வை சிறப்பாக நடத்தினார். ஏராளமான முஸ்லிம்கள் இந்த ‘இப்தாரில்’ பங்குபற்றினர். ஏழாவது வருடமாக ஜனாதிபதி இந்த ‘இப்தாரை’ நடத்தினார்.
-
மாகாண சபைகளில் வாக்களிக்க 2010 – 2011 தற்காலிக அடையாள அட்டைகள் போதுமானது
எதிர்வரும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் வாக்களிப்பதற்கு 2010ஆம் 2011 ஆம் ஆண்டுகளில் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும். எனினும் அவற்றை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம். மொகமட் நேற்று தெரிவித்தார்.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகவியலாளர்கள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட செய்தியாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்
இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்ற ஷுஹதாக்கள் தினம் மற்றும் இப்தார் ஆகிய நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம், கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகவியலாளர்கள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட செய்தியாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்
இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்ற ஷுஹதாக்கள் தினம் மற்றும் இப்தார் ஆகிய நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம், கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.