-
இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள்
இலங்கையில் 24-05 ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. மேலும் உலகின் அநேகமான நாடுகளில் ரமழான் முப்பதாகப்பூர்த்தி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பெருநாள் கொண்டாடப்படுகிறது. கடந்த வருடம் சுன்னத்தான பெருநாள் திடலை நம்மவர்கள் நிறுத்தினார்கள். இம்முறை பள்ளிக்கும் போகாமல் வீட்ட தொழுமாறு அரசாங்கம் எங்களுக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறது.
-
உலகின் அநேகமான நாடுகளில் ரமழான் முப்பதாகப் பூர்த்தி
லண்டன்: உலகின் பல நாடுகளில் வெள்ளிக்கிழமை மாலை ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாதமையால் ரமழான் மாதம் 30 தினங்களாப் பூர்த்திசெய்யப்பட்டு, 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாளை உலக மக்களில் அதிகமானவர்கள் கொண்டாடுகின்றனர்.
-
கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்: பிரதமர்
கொழும்பு: ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தலை நடத்துவது அவசியமாகும். கலைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். கடற்படைக்குள் தான் பிரச்சினை காணப்படுகின்றது. அதனையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம். மாணவர்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதால் பாடசாலை, பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதில் சிக்கல் காணப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக வீடியோ வழி நீதிமன்ற அமர்வு
கொழும்பு: இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீடியோ மூலமாக வழக்கு நடவடிக்கைகள்( 20) ஆரம்பிக்கப்பட்டன. புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றை நேரடியாக வீடியோ தொழில்நுட்பம் மூலம் இணைத்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது சோதனை திட்டம் இதுவாகும் என, நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
-
கொம்பனிவீதி பள்ளியில் பதற்ற நிலை
கொம்பனிவீதி பள்ளியில் பதற்ற நிலை. ஹிரு ஊடகவியலாளர் பள்ளி வளாகத்தில் தவறான முறையில் நடந்துகொண்டுள்ளமையே இதற்கு காரணம்.
-
இலங்கையில் பெரு மழையால் நீரில் மூழ்கிய நகரங்கள்
கொழும்பு: இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பெருமளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழையுடனான வானிலை நிலவிவருகின்றது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் இன்று நண்பகல் பல நகரங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக ரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.
-
இன்று அடையாளம் காணப்பட்ட 10 பேரில், 08 பேர் கடற்படையைச் சேர்ந்தவரக்ள் 02 பேர் லண்டனிலிருந்து வந்தவர்கள்
இன்று (17) இரவு 7.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 960 இலிருந்து 962 ஆக அதிகரித்ததோடு, 7.30 மணியளவில் மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டு அவ்வெண்ணிக்கை 962 இலிருந்து 964 ஆக அதிகரித்ததோடு, இரவு 8.30 மணியளவில் மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவ்வெண்ணிக்கை 964 இலிருந்து 970 ஆக அதிகரித்துள்ளது.
-
அரசியல்வாதிகளுக்கு “அலமடி” கட்டுகின்ற நாங்கள், சமூக பிரச்சினையில் அக்கறை செலுத்தாதது ஏன் ?
– முகம்மத் இக்பால், சாய்ந்தமருது பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி, கடற்படை தளபதி, பதில் பொலிஸ்மா அதிபர் உற்பட பாதுகாப்பு சார்ந்த உயர்மட்ட தூதுக்குழு ஒன்று கடந்த வியாழக்கிழமை (14.05.2020) அம்பாறை மாவட்டத்தின் சர்ச்சைக்குரிய விகாரைகளான தீகவாப்பி, மாணிக்கமடு, பொத்துவில் முகுது போன்றவற்றுக்கு விஜயம் செய்தனர்.
-
மேலும் 12 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 949
கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (16) இரவு 8.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 937 இலிருந்து949 ஆக அதிகரித்துள்ளது.
-
இராணுவ மயமாகிறதா இலங்கை?
கொழும்பு: ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவர் பிரதமராகவும், ஒருவர் ஜனாதிபதியாகவும் உள்ள இலங்கையின் மிக முக்கிய பதவிகள் தற்போது ராணுவத்தினர் வசமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது நாட்டை ராணுவமயமாக்கும் முயற்சி என்று அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தாலும், பொதுமக்களின் நலனை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக இந்த நியமனங்கள் குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
-
கத்தியோடு வீட்டுக்குள் புகுந்தவர்கள் தறிகளை வெட்டி சேதப்படுத்திவிட்டு நெசவு உபகரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்
கல்முனை: கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் நேற்றிரவு (13.05.2020) அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த சில நபர்கள் அங்கிருந்த கைத்தறி நெசவு உற்பத்திப் பொருட்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு நெசவு உற்பத்திக்காக பொருத்தப்பட்டிருந்த 4 இலட்சம் ரூபா பெறுமதியான பாக்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.