-
ரிஷாட்டுடன் தேடப்பட்டு வந்த கணக்காளர், உத்தியோகத்தர் மற்றும் இரு சாரதிகள் கைது
கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது, இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 3 பேரில் ஒருவரான, மீள்குடியேற்ற அமைச்சின் அப்போதைய கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷாத் பதியூதீனைகைதுசெய்ய பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன: ஞானசார
கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனைகைதுசெய்ய பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீதுஉள்ளதாக தெரிவித்த, பொதுபலசேனாஅமைப்பினர் பொதுச் செயலாளர் ஞானசாரதேரர், சிறிய குற்றச்சாட்டைமுன்னிலைப்படுத்தி பாரதூரமானகுற்றச்சாட்டை மூடிமறைக்க வேண்டாம்.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்கடந்த 5 நாட்களில் 128 பேர் அனுமதி
காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்கடந்த 5 நாட்களில் 128 கொரோனா வைரஸ்தொற்றாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமைநண்பகல் வரை 13.10.2020 சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவித்தன.
-
மேலும் 39 ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்கள் அடையாளம்
கொழும்பு: கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 39 ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
-
இலங்கையில் ரூ600 கோடி பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை கைப்பற்றியுள்ள பொலீஸார்
மொனராகலை: நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சிலையின் பெறுமதி இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
கல்முனை மாநகர சபையில் சிற்றூழியருக்கும் – உயர் அதிகாரிக்குமிடையே சலசலப்பு
– நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபையில் இன்று காலை பிரதம சுகாதார வைத்திய அதிகாரியை அவரது காரியாலயத்தில் வைத்து சிற்றூழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை கொண்டு பேசியமையால் சிறிய சலசலப்பு உண்டானது .இது தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வீடுகளின் முன் இராணுவம்
கொழும்பு: தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும், பாதிக்கப்பட்ட மினுவாங்கொடைஆடைத் தொழிற்சாலையின் சில ஊழியர்கள்பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டமற்றும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றுதம்மை அடையாளப்படுத்தத் தவறிவிட்டனர்.
-
புதிய அங்கீகாரங்களுடன் அமேசன் உயர் கல்விநிறுவனம்
புதிய பாடநெறிகளை, வித்தியாசமான முறையில்அறிமுகம் செய்வதில் அமேசன் உயர் கல்விநிறுவனம் முன்னிலை வகிக்கின்றது. எதிர்கால தேவை கருதி எவ்வாறானபாடநெறிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என அறிந்து அந்த பாடநெறிகளைஅறிமுகப்படுத்திவருகின்றது அமேசன் உயர் கல்விநிறுவனம்.
-
தப்பியோடிய “கொரணா” நபர் கைது
கொழும்பு: கொரோனா தொற்றால் பாதிக்கப்படு ராகம்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், அங்கிருந்து தப்பியோடிய நபர் சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்துகைது செய்யப்பட்டுள்ளார்.
-
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 190 பேருக்கு கொரோனா
கொழும்பு: மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையிலிருந்து மேலும் 190 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
-
சுனாமி மகன் சர்ச்சையில் திருப்பம் : சிறுவயதில் பிரிந்துசென்ற தந்தைகளும் நீதிமன்றில் ஆஜர்
– நூருள் ஹுதா உமர் சம்மாந்துறை: சுனாமியில் காணாமல் போன மகன் 16 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பியதாகவும் தனது மகன் ஏமாற்றப்பட்டதாகவும் இரு தாய்களுக்கிடையில் எழுந்த பிரச்சினைக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 2ம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வளர்ப்புத்தாயாக அடையாளப்படுத்தப்பட்ட நூறுல் இன்ஷான் என்பவர் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்.
-
கொரோனா வைரஸ் கிருமிகள், ஆறு அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும்
நியுயோர்க்: கொரோனா வைரஸ் கிருமிகள், ஆறு அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி) தெரிவித்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை திங்கட்கிழமை வெளியிட்ட அந்தத்துறை, காற்றில் பரவும் கொரோனா வைரஸ் கிருமிகள், சில மணி நேரம் உயிர்ப்புடன் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் கூறுவதை உறுதிப்படுத்தியிருக்கிறது.