WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • NTJயின் விசேட உரை

    – NTJ ஊடகப் பிரிவு

  • “சர்வதேச பிறை அடிப்படையில் பெருநாள் கொண்டாடுவதானது பிழையானதொரு நடை முறையாகும்”- கலாநிதி அஸ்ரப்

    எம். எச். எம். அன்வர் காத்தான்குடி: தற்போது எமது பிரதேசத்தில் பெருநாள் இரண்டாக கொண்டாடப்படுகின்றது இது இஸ்லாத்தில் இல்லாத ஒருவிடயமாகும். இதற்காக ஊடகங்கள் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு சவூதிஅரேபிய நஜ்ரான் பல்கலைக்கழக இணைப்பேராசிரியரும் தாருள் ஹதீஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான மௌலவி கலாநிதி அஹமட் அஷ்ரப் தெரிவித்தார்.

  • இலங்கை மத்திய வங்கிக்கு ஆளுநர் நியமிக்கப்பட்டார்

    கொழும்பு: இலங்கை மத்திய வங்கியின் 14 ஆவது ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இலங்கையின் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவராவார் என்பதோடு, பொதுநலவாய செயலகத்தின் முன்னாள் பொருளாதார விவகார பணிப்பாளராக கடமைபுரிந்தவர். அனைத்து தரப்பினரினதும் இணக்கத்தின் அடிப்படையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்திருந்தார்.

  • காத்தான்குடிப் பிரதேச மாணவர்களிடம் கூடுதல் பணம் அறவிடும் இ.போ.ச அதிகாரி

    புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: காத்தான்குடி இ.போ.ச. டிப்போவினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச் சீட்டுக்களுக்கு (சீஸன் ரிக்கட்), அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விடவும் மேலதிகமாகப் பணம் அறவிடப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வி கற்பதற்காகச் செல்லும் மாணவர்களுக்கு இ.போ.சபையினால் வழங்கப்படும் இப்பருவச் சீட்டுக்களுக்கு 38X2 = 76.00 ரூபாய் தொகை குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், காத்தான்குடி இ.போ.ச. டிப்போவினால் இக்கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி மாணவர்களிடமிருந்து 100.00 ரூபாவை அறவிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • “நான் ஒரு இஸ்லாமியன்,மற்றவரின் பணத்தில் தன்னுடைய வறுமையை போக்கி கொள்கிறவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது”

    பேர்லின்: ஜேர்மனி நாட்டில் அனாதையாக கிடந்த 50,000 யூரோக்களை பணத்தை மோசடி செய்யாமல் பொலிசாரிடம் ஒப்படைத்த அகதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சிரியா நாட்டை சேர்ந்த முகன்னாட் என்ற 25 வயதான வாலிபர் புகலிடம் கோரி கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஜேர்மனியில் குடியேறினார்.மேற்கு Rhine-Westphalia மாகாணத்தில் உள்ள Minden என்ற நகரில் தங்கியிருந்தபோது வீட்டு பொருட்களை வாங்க தீர்மானித்துள்ளார்.

  • பொதுபல சேனா சம்பந்தமாக அமைச்சர் றிஷாத் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்

    28-06-2016 Your Excellency Maithripala Sirisena The President of the Democratic Socialist republic of Sri Lanka, President Secretariat, Colombo. Your Excellency, The Provocative, Sacrilegious and anti-Muslim Speech by Ven: Gnanasara Thero

  • அரசின் முடிவு என்ன?

    கொழும்பு: இலங்கை அரசு இன்று எதிர்நோக்கி இருக்கும் மிகப் பெரிய தலையிட்டு யுத்தக்க குற்ற விசாரணைதான்.இது மஹிந்தவின் ஆட்சிக்கு காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றபோதிலும்,இதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் மஹிந்தவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரி-ரணில் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

  • பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்களின் மத, கலாசார உரிமைகளுக்கு உறுதி

    கொழும்பு: பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்களின் மத, கலாசார உரிமைகள் உறுதிப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லா உறுதியளித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் சந்திப்பொன்று பல்கலைக்கழக மானிய ஆணையகத்தில் நடைபெற்றது.

  • பாலித தெவரபெரும, தற்கொலைக்கு முயற்சி

    கொழும்பு: பிரதியமைச்சர் பாலித தெவரபெரும, தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்தறை மீகஹதென்ன பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என அப்பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

  • தீயினால் மர ஆலை உட்பட வீடுடோன்றும் எரிந்தது! ஆரையம்பதியில் சம்பவம்

    S. சஜீத் ஆரையம்பதி: காத்தான்குடி பொலிஸ் பிரிவை அண்டிய ஆரையம்பதி பகுதியில் மர ஆலை உற்பட வீடு ஒன்றும் தீயில் எரிந்தது இச் சம்பவம் 30.06.2016 இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் குறிப்பிட்டனர். தீச்சம்பவம் நிகழ்ந்த போது வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் மர ஆலையில் வேலை பார்க்கும் நபர்கள் யாரும் இருக்கவில்லை என்றும் மேலும் தெரியவருகின்றது.

  • இருபத்தேழாம் கிழமை

    புள்ளி வைக்கக் கூட இடமின்றி பள்ளியிலே பல்லாயிரம் பேர். வெள்ளிக் கிழமை வராதவர்களும் தள்ளிக் கொண்டு இடம்பிடிப்பார். ஒரு வருடமாக ஒவ்வொரு நாளும் Save பண்ணிய

  • ‘வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் மற்றும் முன் நுளைவாயில் திறப்பு விழா’

    பா.திருஞானம் மட்டக்களப்பு:  களவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் மற்றும் முன் நுளைவாயில் திறப்பு விழா இன்று நடைபெற்றது. (2016.06.30) இந்நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார். விஷேட அதிதிகாளக பாராளுமன்ற உறுப்பினர்களான கோ. சீ. யோகேஸவரன், ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன் மாகாண சபை உறுப்பினர்கள். கல்வி அதிகாரிகள். கல்வி அமைச்சின் பாடசாலை வேலைகள் பகுதிக்கான பனிப்பாளர்.

←Previous Page
1 … 195 196 197 198 199 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar