-
நோன்புப் பெருநாள் தொழுகை தொடர்பாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
அன்புப் பொதுமக்களுக்கு, அஸ்ஸலாமுஅலைக்கும் நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி வழமைபோன்று எதிர்வருகின்ற நோன்புப் பெருநாள் தொழுகையினை இன்ஷாஅல்லாஹ் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பெருநாள் தினமாக அறிவிக்கும் தினத்தில் காலை சரியாக 6.15க்கு கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்பாக நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
-
வெளிநாடுகளில் முகத்திரை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை
டுபாய்: வெளிநாடுகளில் இருக்கும் போது பாரம்பரிய உடையை அணிய வேண்டாமென்று ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. வெள்ளை அங்கி மற்றும் தலையை மறைத்தபடி துணி அணிந்திருந்த அமீரக தொழிலதிபர் ஒருவரை தரையில் தள்ளி அமெரிக்காவின் ஒஹையோ மாகாண பொலிஸ் கைது செய்தது.
-
ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரால் வழங்கப்பட்ட கடிதம் குறித்து 5ம் திகதி இறுதித் தீர்மானம்
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மட்டக்களப்பு: ஜனநாயகக் கட்சியின் தலைவரும், பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐ.தே.கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.எம். சாபிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் எம். ஹாசீமால் வழங்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பாக ஐ.தே.க. காத்தான்குடி மத்திய குழு 05.07.2016 அன்று நடாத்தவுள்ள இப்தார் நிகழ்வின்போது விரிவாக ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுப்பதாக (03.07.2016)…
-
இந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு ஆபத்துதான்
எம்.ஐ. முபாறக் அரசியலில் மக்கள் செல்வாக்கை இழந்த அரசியல்வாதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்குக் கையில் எடுக்கும் ஆயுதம்தான் இனவாதம்.பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளைக் குறி வைத்து சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இந்த இனவாதம் திருப்பிவிடப்படுகின்றது. இதனால் ஏற்படுகின்ற பேரழிவுகளின் ஊடாக அந்த வங்குரோத்து அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர்.
-
கல்லடி பழைய பாலத்தில் 19வயது இளைஞன் பாய்ந்து தற்கொலை
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கல்லடி பழைய பாலத்தில் சுமார் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். மேற்படி சம்பவம் இன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
-
காலுறையின் மீது மஸஹ் செய்தல்
உரை: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நன்றி: இஸ்லாம் கல்வி
-
அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன்: மெத்தியூஸ்
லண்டன்: இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதிவியை விட்டு ஓட மாட்டேன், அதை தவிர்த்து தற்போது உள்ள அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் மெத்தியூஸ் நம்பிக்கை தெரிவத்துள்ளார். இங்கிலாந்திடம் ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வி கண்ட பிறகு செய்திளார்களிடம் பேசிய இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
மட்டக்களப்பு வைத்தியசாலை ஊழியர்கள் நியமனத்தில் சர்ச்சை
மட்டக்களப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் சிற்றூழியர் வெற்றிடங்கள், பிற மாவட்டத்திலுள்ள பெரும்பான்மை இனத்தவர்களினால் நிரப்பப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த செயல்பாடு பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்கின்றார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரெத்தினம்.
-
“ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதெப்படி” இன்று வசந்தம் தொலைக்காட்சியில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப் பிரிவு இன்று (03.07.2016) இரவு 09.00 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ள பள்ளிக்கூடம் நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு ‘இலங்கையில் ஊழல் மோசடிகள் எவ்வாறு இல்லாதொழிப்பது..? என்பது தொடர்பில் கருத்துரை வழங்கவுள்ளார்.
-
வின்சண்ட்: 05 மாடி வகுப்பறை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்
பா.திருஞானம் மட்டக்களப்பு: மட்டக்களப்பு வின்சன் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவிற்கான 05 மாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவ நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டு அடிகல்கல்லை நாட்டி வைத்தார். இந் நிகழ்விற்கு விஷேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கோ. சீ. யோகேஸவரன், மாவட்ட செயலாளர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், கல்வி அமைச்சின் பாடசாலை வேலைகள் பகுதிக்கான பனிப்பாளர்
-
கலாநிதியின் காழ்ப்புணர்ச்சியை கொப்பளிக்க கல்வியாளர்கள் களமமைக்கிறார்களா?
முஹம்மது நியாஸ் காத்தான்குடி: காத்தான்குடியில் கொள்கைரீதியாக பிளவுபட்டுள்ள ஏகத்துவ அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்ப்பதற்கு முயற்சிப்பதாக கூறிக்கொள்கின்ற ‘அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்குமான சமூக அமைப்பினர்’ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் குறித்த ஒரு தரப்பினரை மாத்திரம் இலக்கு வைத்துகடுமையான விமர்சன உரை நிகழ்த்திய கலாநிதி UL. அஹ்மத் அஷ்ரப் அவர்களுடைய செயற்பாட்டினால் தாங்கள் பாரியளவில் அதிருப்தியடைந்துள்ளதாக காத்தான்குடியின் தஃவா அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.