-
விருப்புக்களை அள்ளி சாதனை படைத்தார் ஜனாதிபதி!
கொழும்பு: இலங்கை ரீதியில் பேஸ்புக் வலைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 11 இலட்ச விரும்பங்களை (likes) தாண்டியுள்ளார். அதற்கமைய 11 இலட்ச விருப்பங்களை கடந்த இலங்கையின் முதலாவது அரசியல் கதாபாத்திரமாக ஜனாதிபதி இணையம் ரீதியாக சாதனை படைத்துள்ளார்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேற்றையதினமான 14ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,100,133 விரும்பங்கள் பதிவாகியுள்ளன.
-
ஹிறா பவுண்டேசன் வழங்கும் இலவச உம்றா சேவை: விண்ணப்பம் கோரல்
டீன்பைரூஸ் அறபிக்கலாசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் புனித உம்றா கடமையினை நிறைவேற்ற ஹிறா பௌண்டேசன் ஏற்பாடுகளை செய்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அறபிக்கலாசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் குறிப்பாக 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதுவரை புனித உம்றா கடமையினை நிறைவேற்றாதவர்களை நாடு பூராகவுமிருந்து தெரிவு செய்து அனுப்ப ஹிறா பௌண்டேசன் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
-
மகிந்தானந்த கைது!
கொழும்பு: முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பிலேயே இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
இருதய நோயால் பாதிக்கபட்டுள்ள குழந்தை அலீனா மரியத்துக்கு உதவுங்கள்
பொத்துவில் இலக்கம் 222/2, ராவுத்தர் வீதி, பொத்துவில் 6 இல் வசிக்கும் அன்வர் சாதாத் இன் மகள் அலீனா மரியம் ( 10 மாதங்களே ஆன குழந்தை இருதய நோயால் (tetralogy of fallots) பீடிக்கப்பட்டுள்ளார்.
-
விமல் கைதாகலாம்
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவங்ச, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் (FCID) சற்று முன்னர் ஆஜரானார். அரசாங்க வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
பெருநாள் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது
பெல்மடுல்ல: பெல்மடுல்ல பிரதேசத்தில் பஞ்ஞன்கொட பள்ளிவாசலுக்கு அருகில் மாடுகளை அறுத்து, இரத்தத்தை பௌத்த விகாரைக்கு அருகில் செல்வதற்கான ஏற்பாடு நேற்று பெருநாள் தினத்தன்று இடம்பெற்றிருக்கிறது. இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட பதற்ற நிலையினால் பொலிஸார் குறித்த இடத்திற்குவந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் மற்றும் குறித்த விகாரையின் தேரர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
“நான் காத்தான்குடி இல்ல, கழம்பு”
காத்தான்குடி: வழமைபோன்று இம்முறையும் பெருநாள் களைகட்டி இருக்கிறது. நமது மண்ணில் பிறந்த வெளியூர் காரங்களும், வெளிநாட்டுக்காரங்களும் தனது பிறந்த மண்ணில் பெருநாளை, குடும்பங்களுடன் சுவைத்து மகிழ வந்திருக்கின்றனர். வாடகைக் கார்களும், தோரணங்களும், சிறுவர் பஸாரும் விழாக்கோலம் பூண்டுள்ளன. “என்ன இருந்தாலும் பெருநாள் என்றால் அது காத்தான்குடிதான்” என்று எம்மவர்கள் வாயளவில் சொல்லிக்கொண்ட போதிலும், எனது ஊர் காத்தான்குடி என்பதை சொல்லிக்கொள்ள நிறையப்பேர் வெட்கப்படுகின்றனர் என்பதுதான் இன்றைய பெருநாள் சிந்தனையாக யுவர்காத்தான்குடி உங்களை தொட்டுச் செல்கிறது.
-
தனது தந்தையின் கொலையின்போது எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஹிருணிகா
கொழும்பு: பாரத பிரேமசந்திர மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, அவரது மகளான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவினால் நேற்று அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்துடன் பதிவொன்றையும் அவர் பதிவேற்றம் செய்திருந்தார். குறித்த பதிவில்,
-
இந்தியாவிடம் கைமாறும் கட்டுநாயக்க விமான நிலையம்
கொழும்பு: கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிர்வாக பணிகளை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.கடந்த 45 ஆண்டுகளாக விமான நிலைய நிர்வாகத்தை மேற்கொண்டு உள்நாட்டு விமான நிலைய நிர்வாகத்தின் குறைகள் காரணமாக விமான நிலையத்தின் நிர்வாகம் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.