-
நாட்டில் இனவாதம் மேலோங்கி இருக்கும் இவ்வேளையில் கிழக்குத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
வட-கிழக்கு இணைந்த தாயகமே தமிழ்பேசும் மக்களின் பூர்வீக தேசம் என்றும் தமிழர்களின் மனங்களிலும் விடுதலை வீச்சுக்களிலும் பிரிக்க முடியாத இத்தேசத்தின் கிழக்கு மாகாணசபை கலைக்கப்படவுள்ள சூழ்நிலையில் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான வெற்றிக்கு வட மாகாணத்தில் இருந்து செல்லும் எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உப – தலைவர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் அணிதிரண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு முழுமையான வெற்றிக்கு பாடுபடுவோம் என இலங்கை தமிழரசுக்
-
அதிரவைக்கும் அரை இறுதிப்போட்டி இன்று!
-MJ ஐரோப்பா கிண்ணப் போட்டிகள் ஐரோப்பா நாடுகளில் இனிமையான ஓர் மாலை நேரத்திலும், இலங்கை நேரப்படி நள்ளிரவைத் தாண்டிய ஓர் இரவுப் பொழுதிலும் உதைப்பந்தாட்ட இரசிகர்களை மாத்திரமின்றி, ஏனைய விளையாட்டு இரசிகர்களையும் தாலாட்டி தொட்டுச் செல்கின்றது.
-
வாக்காளர் பதிவுப் பட்டியல் இணையத்தில் இணைக்கப்படும்
வாக்காளர் பதிவுப் பட்டியலில் தமது பெயர் உள்ளதா என்பதை இணையத்தின் மூலமாக பரீட்சிப்பதற்கு ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின் இலங்கை வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார். இலங்கை வாக்காளர் பதிவுப்பட்டியல் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இறுதியாக பூர்த்தியாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பட்டியலை இணையத்தின் மூலம் பார்வையிட முடியும்.
-
கலைஞர்களுக்கான வட்டி இல்லாத வாகனக் கடன் திட்டம்
சிரேஷ்ட கலைஞர்களுக்கு வாகனம் கொள்வனவிற்காக வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுப்பதற்கு விண்ணப்பப்படிவங்கள் அடுத்த மாதம் தொடக்கம் கலை மற்றும் கலாசார அமைச்சினால் கோரப்படவுள்ளன. கலைஞர்களுக்கு ரூபா 12 இலட்சத்தினை வட்டியில்லா கடனாக வழங்கத்தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 18 வருடங்களுக்கு மேல்கலைத்துறையில் உள்ள கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது .
-
1,350 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு நியமனம்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளுக்கான அரசாங்க நியமனங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில்வாய்புக்காக விண்ணப்பித்திருந்த 2,265 பட்டதாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்றன.
-
இலங்கை-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி: 3 வருடங்களின் பின் இலங்கை அபார வெற்றி!
-MJ இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம் பெற்றது. 4வது நாளான நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை 209 ஓட்ட வித்தியாசத்தில் பாரிய வெற்றியை இலங்கை பெற்றிருந்தது.
-
மன்னார் ஆயர் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
மன்னாரில் அண்மைக்காலமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்டுவரும் இடைவெளியை சீர்செய்யும் நோக்கில் மன்னார் ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
-
புதிய பௌத்த வழிபாட்டுத்தலத்தை எதிர்த்து காலியில் ஆர்ப்பாட்டம்
-MMS அன்மைக்காலமாக சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களில் தமது கைவரிசையைக் காட்டிவந்த பௌத்த பிக்குகளுக்கு, பௌத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தும் ஓர் செயற்பாடும் போராட்டமும் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. காலியில் புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த மதப் பிரிவு ஒன்றின் மீது பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
புதிய இஸட் புள்ளியை தயாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
-MMS 2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாகு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இஸட் புள்ளி பட்டியலை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு தனித்தனியாக கணிப்பீடு செய்து புதிய இஸட் புள்ளி பட்டியல்களை கூடிய விரைவில் வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
எகிப்தின் புதிய ஜனாதிபதியாக முகமட் மொர்சி தெரிவு
-MJ அளிக்கப்பட்ட வாக்குகள் : 26,420,763 (51 per cent) செல்லுபடியாகாத வாக்குகள்: 843,252 முகமட் மொர்சி : 13,230,131வாக்குகள் (51.7 per cent ) அகமட் சபிக்: 12,347,380 வாக்குகள் எகிப்தின் புதிய ஜனாதிபதியாக எகிப்து சகோதரத்துவக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட முகமட் மொர்சி வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அளிக்கப்பட்ட 26 மில்லியன் வாக்குகளில் 13.2 மில்லியன் வாக்குகளைப் பெற்று, 51 வீத அதிகப்படியான வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்று எகிப்தின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
-
T20 முக்கோணத் தொடர்: சிம்பாப்வே சரித்திர வெற்றி!
-MJ சிம்பாப்வேயில் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வந்த சிம்பாப்வே, பங்களாதேஷ, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொண்ட முக்கோண இருபது20 தொடரில் சிம்பாப்வே 9 விக்கட்டுக்களால் தென்னாபிரிக்காவைத் தோற்கடித்து தொடர் சம்பியனாகவும் வெற்றிபெற்று, சிம்பாப்வே கிரிக்கட்டில் ஓர் வரலாற்று வெற்றியைப் படைத்திருக்கின்றது.
-
இரண்டரை மணித்தியால போராட்டத்தின்பின் இத்தாலி வெற்றி!
-MJ ஐரோப்பா கிண்ணத்துக்கான கால் இறுதிப் போட்டியின் பிரபலமான இறுதி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இம்முறைக்கான ஐரோப்பா கிண்ண ‘நொக்க அவுட் லீக்’ தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியே 3வது சுற்றுக்குச் சென்று முடிவை எட்டி இருந்தது.