-
மக்களின் அமோக ஆதரவுடன் ஐ. ம. சு. மு கிழக்கில் வெற்றியீட்டும்
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையை அரசாங்கம் வெற்றி கொள்வது உறுதியென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்துக்கு நூற்றுக்கு நூறு வீதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்த பிரதியமைச்சர்; இம்முறை தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்:-
-
ஐயாயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி!
நாடு முழுவதிலும் ஐயாயிரம் ஆரம்ப பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை அபிவிருத்திச் செய்யும் திட்டம் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து கல்வி அமைச்சு இத்திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
-
ஐ.ம.சு.முன்னணிக்கே அமோக வெற்றி! MLAM.ஹிஸ்புல்லாஹ்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம்திகதி நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறுமென சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்ட ஜும்மா பள்ளிவாசல்
குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
-
குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனையையும் ஏற்பேன்!– அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
மன்னார் ஆர்ப்பாட்டத்திற்கும் நீதிமன்ற கட்டிடம் தாக்கப்பட்டமைக்கும் ௭னக்கும் ௭வ்வித தொடர்புகளுமில்லை. இது ௭ன் மீது சுமத்தப்பட்டுள்ள வீண் பழி. விசாரணையொன்று நடத்தப்பட்டு நான் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை ௭ன்றாலும் நான் மனமுவந்து ஏற்றுக் கொள்வேன் ௭ன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சர் கேசரிக்கு வழங்கிய விஷேட பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
-
இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்த திரைமறைவு முயற்சி: மன்னார் ஜம்இய்யத்துல் உலமா
“கொடிய யுத்தம் அகன்று பயங்கரவாதம் அழிக்கப்பட்டு இன்று இனங்களுக் கிடையில் கசப்புணர்வுகள் நீங்கிச் செல்லும் வேளையில் மீண்டும் ஒரு குழப்பத்தைத் தோற்றுவிக்க திரைமறைவில் எடுக்கப்படும் முயற்சிகளைத் தோற்கடித்து ஒரே தேசத்தின் மக்களாக நாம் அனைவரும் வாழ சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்த வேண்டும்.” இவ்வாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மன்னார் கிளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இஸட் புள்ளி கணிப்பில் ஏற்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு:பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக மாணவர்களை சேர்க்க ஜனாதிபதி பணிப்பு
பல்கலை அனுமதி கிடைக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு இஸட் புள்ளிகளை (Z – Score) கணிப்பிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களில் குறித்த தொகையினரை பல்கலைக்கழகங் களுக்கு மேலதிகமாக சேர்த்துக்கொண்டு அவ்வாறானவர்களுக்கு நிவாரணமளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உயர் கல்வி அமைச்சர் எஸ். பீ. திசாநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
-
நாளை மின் விநியோகம் தடைபடும் இடங்கள் – பிரிவு 2
நாளை காலை 10.45 – பகல் 1 மணிவரையும் இரவு 7.15 தொடக்கம் 8 மணிவரையும் மின் துண்டிக்கப்படும் பிரதான நகரங்களின் விபரம் வருமாறு: வட மத்திய மாகாணம் – அநுராதபுரத்தில் நாச்சத்துவ, தம்புத்தேகம நகர், ராஜாங்கன ஹபரண, பொலன்னறுவ, கருவெல, மாதுருஓயா.
-
ஜனாப், ஜனாபா, ஹாஜி….
–ரமழான் சிந்தனை –முகமட் ஜலீஸ், (UK) இஸ்லாமிய தமிழ் வழக்கில் குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் முஸ்லிம் ஆண்களை பொதுவாக ‘ஜனாப்’ என்றும் பெண்களை ‘ஜனாபா’ என்றும் அழைப்பது வழக்கத்திற்குரியது. வாய் மூலமாக அவ்வாறு அழைப்பது குறைவாக இருப்பினும், அழைப்புக்கள், பத்திரிகைகள், மற்றும் இஸ்லாமிய அச்சு ஊடக விவகாரங்களில் இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
-
பிரதான பாதைகளில் எழுதுவதற்கு தடை!
தேர்தல் சின்னங்கள் – வேட்பாளர்களின் பெயர்கள்- இலக்கங்கள் ஆகியவற்றை வர்ணச் சாயங்கள் உபயோகித்து பிரதான பாதைகளில் எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
சட்டக்கல்லூரியின் பிரவேசப்பரீட்சை
இலங்கை சட்டக்கல்லூரியின் 2013ஆம் கல்வியாண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்தப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவணைகளும் குறித்த விண்ணப்பத்தாரிகளுக்கு தற்சமயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது.
-
இலங்கையில் முன்னோடி மாவட்டமாக மிளிர்ந்து வரும் மீன்பாடும் தேன்நாடு
-எம். எஸ். பாஹிம் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான ஊடகவியலாளர்களின் சுற்றுப் பயணத்தின் பின்னர் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.) இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் மட்டக்களப்பிற்கு முக்கிய இடமுள்ளது எனலாம். மீன்பாடும் தேன் நாடு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மட்டக்களப்பு எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி) படுவான்கரை (சூரியன்மறையும் பகுதி) என இரு வாவிகளால் பிரிக்கப்படுகிறது.