-
ஹக்கீம் அவர்களின் முடிவை எதிர்பார்த்திருக்கும் ஆளும் தரப்பு வெற்றியாளர்களும் அவர்களது திட்டங்களும்!
-Special Report ஐ.ம.சு.மு. கிழக்கில் வெற்றிபெற்றிருப்பினும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. இந்த வகையில் கிழக்குமாகாணசைபயின் கதாநாகனாக திகழும் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கடந்த தேர்தல் காலங்களில் ஹக்கீம் அவர்களுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் பல இன்னல்களை விளைவித்திருந்தனர்.
-
கிழக்கு மாகாண சபை: 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 08 சிங்களவர்கள் தெரிவு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 15 முஸ்லிம் உறுப்பினர்களும், 12 தமிழ் உறுப்பினர்களும், 08 சிங்கள உறுப்பினர்களும் என மொத்தமாக 35 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தலா 04 உறுப்பினர்களும் என 15 முஸ்லிம் உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 02 உறுப்பினர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 07 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 03 உறுப்பினர்களும் என 12 தமிழ் உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 05 உறுப்பினர்களும், திருகோணமலை…
-
ரவூப் ஹக்கீமுக்கு ஜனாதிபதி அழைப்பு!
தம்முடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக தொலைபேசி அழைப்பு வந்தது எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
-
மூன்று மாகாண சபைகளிலும் சுமார் 12 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை!
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்காக நடைபெற்று முடிந்த தேர்தலில் சுமார் 12 இலட்சம் வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்யவில்லை. கடந்த 2008ஆம் ஆண்டு இந்த மூன்று மாகாணங்க ளுக்கும் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கையைவிட இவ்வருடம் வாக்களிக்காதவர் களின் எண்ணிக்கை அதிகரி த்துள்ளது.
-
யாருக்கு ஆதரவு? முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டம் நாளை கூடுகிறது
-வீரகேசரி கிழக்கு மாகாண சபையில் யாருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு நாளை செவ்வாய்க்கிமை கூடுகிறது. அரசாங்கம் மும்மொழியும் முதலமைச்சருக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கப்போவதில்லை. கிழக்கில் ஆட்சியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் இற்கே வழங்கியுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
-
ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு 15 வரை தடை
தேர்தல் முடிவடைந்த போதிலும் மூன்று மாகாண சபைகளிலும் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறினார். கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
அரசியல் விளையாட்டு ஆரம்பம்! முதலமைச்சர் யார்?
-Special Report: முஸ்லிம் பிரதேசங்களில் ஐ.ம.சு.முன்னணியில் வெற்றிபெற்ற வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் தங்களை எதிர்த்தவர்களுக்கு நாங்கள் யார் என்பதைக் காட்டுவதற்காக இன்று கிழக்கின் பல பாகங்களிலும் ஊர்வலங்கள் சென்றனர். பட்டாசுகளும் ‘பார்ட்டி’ களும் வீன்விரயச் செலவுகளில் இவர்களது மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது முதலாவது அம்சம். நிற்க! தற்பொழுது கிழக்கின் முதலமைச்சர் யார்?
-
ஆதரவு யாருக்கு என விரைவில் அறிவிப்போம் : மு.கா. தலைவர் ஹக்கீம்
நடந்து முடிந்துள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையினை பெறாதநிலையில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே யாருக்கு ஆதரவு வழங்குவதென இறுதியான தீர்மானம் எடுக்கப்படுமென கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் முடிவுகளும் நற்செய்திகளும்!
இறைவன் உதவியால் நாம் கடந்த 3 மாதங்களாக எதிர்பார்த்திருந்த குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கின்றது. வெற்றி தோல்விகளின் பின்னர் மக்களின் ஆதருவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து சகோதரத்துவமாக அனைவரும் ஒன்றுபட நாம் கேட்டுக்கொள்கின்றோம்.