-
தேசத்துக்கு மகுடம் முதலாவது அனுமதிப் பத்திரம் ஜனாதிபதிக்கு
கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் 2013 கண்காட்சிக்கான முதலாவது அனுமதிப்பத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று கையளிக்கப்பட்டது.
-
சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் முதலாமிடம்
சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவனான ரிப்தி முஹம்மத் ரிஸ்கான் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். 83 நாடுகள் பங்கு பற்றிய இந்த சர்வதேச போட்டியில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் மாணவரே முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
-
மின் கம்பத்தில் தலை மோதி ரயிலில் பயணித்த முஸ்லிம் இளைஞர் பலி
திருகோணமலை யிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரத வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் ரயில் பாதை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் தலை மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
-
அம்பாறையில் நேற்றும் இரண்டு நில அதிர்வுகள்
பாரிய சத்தத்துடன் இரண்டு நில அதிர்வுகள் நேற்று அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் உணரப்பட்டிருப்பதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி என். வி. விஜயானந்த நேற்றுத் தெரிவித்தார்.
-
சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அனுதாப நிகழ்வு
டீன். பைரூஸ். மறைந்த மூத்த ஊடகவியலாளா் சகோதரா் ஏ.எல்.பழுலுல்லாஹ் அவா்களின் மறைவையொட்டி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அனுதாப நிகழ்வொன்று இடம் பெற்றது.
-
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா
டீன் பைரூஸ். காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கடந்த 08.12.2012 சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில், பாடசாலையின் அதிபர் ஜனாப்.SL. அப்துல் கபூர் (B.com, Dip in Edu,HRD(ind) அவா்களின் தலைமையில் நடை பெற்றது.
-
ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கு 6 மாதங்கள் அனுமதி
-ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு- ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங் கைக்கு அமெரிக்கா ஆறு மாதகால அவகாசம் வழங்கி தனது தடையினை தளர்த்தியுள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஊர்ஜிதம் செய்தார்.
-
இன-மத பேதமின்றி அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு!
வடக்கில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் எதுவித இன-மத பேதமின்றி -பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படுவதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார்.
-
வாழ்த்துகிறோம்…
இன்று 11/12/2012 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த. சா/த. பரீட்சை எழுதும் அனைத்து
-
இந்திய கார்களுக்கு இலங்கையில் கடும் வரி: அதிர்ச்சியில் உற்பத்தியாளர்கள்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்க வரியை இலங்கை பலமடங்கு உயர்த்தியிருப்பது, இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி
-5,42,260 பரீட்சார்த்திகள் தோற்றம் -நாடு முழுவதும் 4048 நிலையங்கள் -கையடக்க தொ.பே. கொண்டுசெல்ல தடை -அதிபர் அத்தாட்சிப்படுத்தும் அடையாள அட்டை செல்லுபடியாகும்
-
’13-ம் திருத்தத்தை நீக்கக் கூடாது’: சுதந்திரக் கட்சி நிலைப்பாடு
இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல பங்காளி கட்சிகள் அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தை நீக்க இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ஜனாதிபதியிடம் அனுப்படவுள்ள ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன.